என் மலர்
உத்தரப் பிரதேசம்
- பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
- சோயப் அகமது மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் ரூ.5000 வரதட்சணை தரமுடியாததால் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உசைன்பூர் கிராமத்தில் கடந்த மாதம் சோயப் அகமது என்ற 25 இளைஞருக்கும் தரன்னும் என்ற 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி மாமியாரின் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனக்கு 5000 ரூபாய் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினரால் அப்பணத்தை கொடுக்க முடியவில்லை.
பின்னர் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சோயப் அகமது மற்றும் அவரது தந்தை அனீஸ் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும் கூறியுள்ளார்
- வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவி பிச்சைக்காரர் ஒருவருடன் ஓடிவிட்டதாக கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்த்தவர் ஆறு பிள்ளைகளின் தாயான 36 வயது ராஜேஸ்வரி. இவரை ஜனவரி 3 முதல் காணவில்லை.
அவரது கணவர் ராஜு, ஜனவரி 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார், மனைவி, 45 வயது பிச்சைக்காரரான நான்ஹே பண்டிட்- உடன் அடிக்கடி தொடர்பு கொண்டார் என்று குற்றம் சாட்டினார். எருமை மாட்டை விற்று தான் சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு மனைவி அந்த பிச்சைக்காரருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கணவர் தெரிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி, மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து பாரதீய நியாய சந்ஹிதாவின் பிரிவு 87 இன் கீழ் கடத்தல் FIR பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்து வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தனது கணவர் தன்மீது தினந்தோறும் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டார் என்றும் சித்ரவதையில் இருந்து தப்பிக்க பரூக்காபாத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். யாருடனும் தான் வெளியேறவில்லை என்றும் நான்ஹே பண்டிட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
ராஜேஸ்வரியின் கணவர் குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை. இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பெண் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியது.
- இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு ரெயில் நகர தொடங்கியதால் அவர் தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டார்.
ரெயில் செல்லும்போது அந்த பெண் தண்டவாளத்தில் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
மதுராவில் இருந்து ஆக்ராவுக்குப் புறப்படுவதற்குத் தயாராக ஒரு சரக்கு ரயில் நடைமேடை 1 இல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க 2 பெண்கள் முயற்சி செய்தனர்.
பெண்களில் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியது. இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
ரெயில் முன்னோக்கி நகரத் தொடங்கியதும், ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சரக்கு ரெயிலை முன்னோக்கி நகரவிடாமல் நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
பொது மக்களின் அலறல் சத்தத்திற்கு பிறகும் சரக்கு ரயில் நிற்கவில்லை. அதிசயமாக, சரக்கு ரெயில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனால் நூல் இழையில் அப்பெண் உயிர் பிழைத்தார்.
- கிராமம் பல வாரங்களாக இருளில் மூழ்கியுள்ளது.
- டிரான்ஸ்ஃபார்மர் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி திருடப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பைரேலியில் கிராமத்திற்கு மின் விநியோகம் செய்து வந்த டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்டதை அடுத்து சோராகா கிராமம் பல வாரங்களாக இருளில் மூழ்கியுள்ளது.
ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மின்சாரம் வினியோகம் செய்துவந்த 240 கிலோவாட் டிரான்ஸ்ஃபார்மர் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி திருடப்பட்டது தெரியவந்துள்ளது. டிரான்ஸ்ஃபார்மர் முழுக்க வெட்டி எடுக்கப்பட்டு அதில் உள்ள மறுவிற்பனைக்கு உகந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டது. இதில் செம்பு வயர்கள், மற்ற இரும்பு பொருட்கள் அடங்கும்.
டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மின் வினியோகம் சார்ந்த விவகாரம் என்பதால், மின்துறை சார்ந்தவர்கள் உதவியின்றி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
திருட்டு சம்பவம் குறித்து சி.சி.டி.வி. வீடியோ மற்றும் திருட்டு சம்பவம் அரங்கேறிய பகுதியில் செல்போன் நடவடிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில், திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
- இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
- இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலத்தின் கால்களை பிடித்து 2 ஆண்கள் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் என்று கூறப்படும் 2 நபர்கள் சடலத்தின் கால்களில் துணியால் கட்டிக்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்திற்குள் நுழைகிறார்கள்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும்.
- தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விதியை OYO நிறுவனம் இந்த வருட தொடக்கம் முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
OYO என்பது இந்தியாவில் முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளம் ஆகும். OYO மூலம் முன்பதிவு செய்யப்படும் விடுதிகளின் விதிகளை நிறுவனமானது திருத்தி அமைத்துள்ளது.
இதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

மீரட்டில் இந்த நடைமுறைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மீரட்டில் சமூக குழுக்களிடம் இருந்து வந்த கருத்துக்களுக்கு இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. OYO தளத்தை பயன்படுத்தி திருமணமாகாது ஆண்- பெண் உறவு வைத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று நிலவுவது குறிப்பிடத்தக்கது.

- மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு பெண்ணுக்காக 2 பேர் சண்டை போட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் உத்தரபிரதேசத்தில் ஒரு மாணவனை விரும்பிய 2 மாணவிகள் சாலையில் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அங்குள்ள சிங்வாலி போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட அமிநகர் சராய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அதே பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் விரும்புவதாகவும், இருவரும் மாணவனுடன் அடிக்கடி பேசி, பழகுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பவத்தன்று அந்த மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கி சண்டை போட்டுள்ளனர்.
அதோடு ஒருவரை ஒருவர் காலால் உதைப்பது, கைகளால் மாறி மாறி குத்துவது என சண்டை அதிகமானதை பார்த்த சக மாணவிகளும், அவ்வழியாக சென்றவர்களும் மாணவிகளின் சண்டையை நிறுத்தினர். இதற்கிடையே மாணவிகளின் சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது.
- இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா என்று மோடி கூறியிருந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகா கும்பமேளா நடக்கிறது. இந்த மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரயாக்ராஜ் நகரம் கும்பமேளாவின்போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
இந்துக்கள் அல்லாதோருக்கு கடை அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று கூறியிருந்த நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
- இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் மனைவி இருந்ததை பார்த்த கணவன் ஆத்திரத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள அவர்களின் வீட்டின் மொட்டை மாடியில் தனது மனைவியுடன் இருந்த அந்த இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரை அடித்தும் உதைத்தும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை மன்னித்து விடுமாறும் இனி அங்கு திருப்பி வரவே மாட்டேன் என்றும் அவர்களிடம் இளைஞன் கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
- நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
- எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர்.
புத்தாண்டு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நாகா பகுதியில் உள்ள ஷரன்ஜித் என்ற ஹோட்டல் விடுதி அறையில் வைத்து 24 வயது இளைஞன் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இன்று படுகொலை செய்துள்ளான்.
ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அந்த குடும்பம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளது .
குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த அர்ஷத். தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை விடுதிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச்செய்து அவர்களின் கை மணிக்கட்டை அறுத்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஹோட்டல் அறையில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள். ஐந்தாவது உடல் தாயார் அஸ்மா உடையது. அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து அர்ஷத்தை கைது செய்தது என்று டிசிபி ரவீனா கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டு, தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்து வருவதாக ரவீனா கூறினார்.
சமபவத்தின் பின் தலைமறைவான அர்ஷத்தின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. குடும்பத் தகராரே கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பின், குற்றவாளி அர்ஷத் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். வீடியோவில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளைக் காட்டினார். இதன் போது அவருடன் அவரது தந்தையும் இருந்தார்.
என் பெயர் ஆசாத்... இன்று, குடிசைவாசிகளின் [அக்கபக்கத்தினரின்] நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. யோகி ஜிக்கு [முதல்வருக்கு] ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள், மரணத்திற்கு முழு காலனியும் பொறுப்பு.
இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார் மற்றும் சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள். எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் படவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.. நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நானும் இறப்பேன்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜி... எல்லா முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்கின்றனர். காவல்துறையினரிடம் பணம் கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.
எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது.
- கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு
உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த மருந்து ஆய்வாளர் நிதி பாண்டே, மருந்தகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கிறார்.
'ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு' என்று அவர் மருந்தக உரிமையாளரிடம் லஞ்சப் பணத்துக்கு பேரம் பேசுவது பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்குதல் மற்றும் பேரம் பேசுதல், வியாபாரியை அச்சுறுத்தல் மற்றும் வியாபாரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உ.பி. வருவாய், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குருபிரசாத் இந்த பணிநீக்க உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை பாண்டே மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், வைரலாகும் வீடியோ முற்றிலும் போலியானது. இது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
- 8 ஆண்டுகளாக அவரது வீட்டில் ஒருவராக வளர்ந்து வரும் அந்த குரங்குக்கு ராணி என்று பெயரிட்டுள்ளனர்.
- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அவை வைரலாகி பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள சத்வா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் என்ற விவசாயி குடும்பத்தினர் தங்கள் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர். 8 ஆண்டுகளாக அவரது வீட்டில் ஒருவராக வளர்ந்து வரும் அந்த குரங்குக்கு ராணி என்று பெயரிட்டுள்ளனர்.
ராணி, விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வநாத்தின் மனைவியுடன் சேர்ந்து ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகள் அனைத்திலும் ராணி உதவி செய்கிறதாம்.
இது தொடர்பான வீடியோக்களை விஸ்வநாத்தின் மகன் ஆகாஷ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அவை வைரலாகி பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






