என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்கை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

    உத்தரபிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிற்சி பெற்ற மருத்துவர்கள், லக்னோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலையில் மருத்துவர்கள் பயணம் செய்த ஸ்கோர்ப்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் 5 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்கை பெற்று வருகிறார்.

    பலியான 5 பேரும் மருத்துவர்கள் ஆவர். அவர்கள் அனிருத் வர்மா, சந்தோஷ் குமார் மவுரியா, ஜெய்வீர் சிங், அருண் குமார் மற்றும் நர்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • படுகாயம் அடைந்த மணமகள் ஷிவானியை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • எதற்காக அவர் ஷிவானியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமண வீடுகளில் கலாட்டா நடைபெறுவது சாதாரணம். அந்த கலாட்டாக்கள் சுமுகமாகவும், விபரீதமாகவும் முடிந்தது உண்டு. ஆனால் உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று விபரீதத்தில் தொடங்கி சுமுகமாக முடிந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த இளம்பெண் ஷிவானி. இவருக்கும், உத்தம் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக முசாபர்நகர் டெல்லி-டேக்ராடூன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமணத்துக்காக தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.

    மணமகள் ஷிவானி, புத்தம் புது பட்டுச்சேலை, தங்க நகைகளுடன் எதிர்கால கனவுகளையும் அணிந்து மணக்கோலத்தில் திருமணம் நடைபெற இருந்த ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது எங்கிருந்தோ வந்த வாலிபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஷிவானியை சரமாரியாக குத்தினார். இதில் மணமகள் கழுத்து மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்தார்.

    சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தையே பரபரப்பாக்கியது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். இந்த சந்தடியில் அந்த வாலிபரும் அங்கிருந்து வெளியேறினார்.

    படுகாயம் அடைந்த மணமகள் ஷிவானியை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து இல்லை என்ற டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியிலேயே கத்திக்குத்து காயங்களுடன் மணமகள் ஷிவானி, உத்தமின் கரம்பற்றினார்.

    இதனிடையே இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மன்சூர்பூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக தீபக் சிங்கால் என்ற வாலிபரை கைது செய்தனர். எதற்காக அவர் ஷிவானியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபரீத்தில் முடிய வேண்டிய திருமணம், சுபமாக நடந்ததால் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது.
    • பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கான்பூர்-உன்னாவ் இடையே கங்கை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1874-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

    சுக்லகஞ்ச் சுற்றுவட்டார மக்கள் கங்கை ஆற்றை கடந்து செல்வதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த பாலத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் அந்த பாலத்தை ஆய்வு செய்து, அது போக்குவரத்துக்கு பயனற்றது என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது. அதன் வழியாக போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

    150 ஆண்டு பழமை வாய்ந்த அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுபற்றி உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெறாததாலும், சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதாலும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

    இடிந்து விழுந்த பாலத்தை உள்ளூர் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். பலர் அதனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

    பாலம் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோதாஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு டிரா என 33 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

    கடந்த 22-ம் தேதி நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24-40 என உ.பி.யோதாஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது நினைவிருக்கலாம்.

    • இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முதலைகள் வருவது வழக்கமான நிகழ்வாகும்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் 24 முதலைகள் இப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

    உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் ஒரு நபர் தனது தோளில் பெரிய முதலையை சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    ஹமிர்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில வாரங்களாக உலா வந்த முதலையினால் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வனத்துறையினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை பிடித்தனர். பின்னர் முதலையின் வாய் மற்றும் கைகால்களை துணி மற்றும் கயிற்றால் கட்டினர். பின்னர் வனத்துறை அதிகாரி ஒருவர் தனது தோளில் 13 அடி நீள முதலையை தூக்கி கொண்டு வயல்களுக்கு வெளியே கொண்டு சென்றார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர்.

    இப்பகுதியில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முதலைகள் வருவது வழக்கமான நிகழ்வாகும். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 24 முதலைகள் இப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது.
    • 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஜலாலாபாத் நகரில் முக்கிய சாலை ஒன்றில் காளை மாடு ஒன்று திடீரென்று ஆவேசமாக ஓடியது. அந்த மாடு சாலையில் சென்றவர்களை விரட்டி சென்று முட்டியது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

    ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் மாடு முட்டி தாக்கியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து அந்த மாட்டை பிடிக்க நகராட்சி ஊழி யர்கள் முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய மாடு சாலையில் வேகமாக ஓடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர். சில நாட்களுக்கு முன்பு கிரேட்டர் வெஸ்ட் பகுதியில் மாடு ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதை ஓட்டி வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது
    • வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.

    பைக்கில் மற்றொரு வாகனத்தை சேஸ் செய்து அதில் தாவி ஏறுவது எல்லாம் ஆக்ஷன் சினிமாவில் கிளீசேவாக இடம்பெறும் காட்சிதான்.

    ஆனால் இதுவே நிஜத்தில் உத்தர பிரதேச சாலையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர சாலையில், குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

    அப்போது அவ்வழியாக குட்டி யானையை [மினி டிரக்கை] ஓட்டி வந்தவர் ஊர்வலம் அருகே சென்றபோது குதிரையில் அமர்ந்திருந்த மணமகனின் கழுத்தில் இருந்த பண மாலையை கிழித்துக்கொண்டு சென்றுள்ளார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் உடனே குதிரையில் இருந்து இறங்கி வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.

    ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து குட்டி யானை மீது குதித்து பக்கவாட்டு கதவு வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து அதை நிறுத்தச் செய்துள்ளார்.

    பின்னர் பண மாலையை பறித்த அந்த டிரைவரை கீழ் இறங்கிச் செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்களும் அங்கு வந்து சேரவே டிரைவருக்கு கடுமையான கவனிப்பு கிடைத்துள்ளது.

    நான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மாப்பிள்ளையிடம் கெஞ்சுகிறார். இந்த ஆக்ஷன் சேசிங் காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப் பதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில அரசின் ஒருபக்க சார்பும் நடவடிக்கைகளும் துரதிர்ஷ்டவசமானது.
    • ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் வன்முறை குறித்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும், பாகுபாட்டையும் உருவாக்கவே பா.ஜ.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல. இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வந்ததார்

    கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

    • மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
    • 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் அதிகமான காவல் துறையினர் காயமுற்றனர்.

    மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

    இந்நிலையில் சம்பல் பகுதியில் இணையச் சேவைகள் 24 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வெளியாட்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுப் பிரதிநிதிகள் சம்பலுக்குள் நுழைவதையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். 

    • சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர்.
    • உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சாலை வழியாக பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில உத்தர பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட மூவருக்கு, அது ஒரு சோகமான முடிவை அளித்துள்ளது.

    நேற்று காலை பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி சென்றபோது, ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

    சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர். அப்போது காரில் இருந்த மூவரும் (இரண்டு சகோதரர்கள் உள்பட) உயிரிழந்ததை கண்டனர். விபத்து குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் பாலம் முழுமையடையாமல் கிடப்பதாலும், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாததாலும் துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தில் பாதுகாப்பு தடைகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது, இது ஆபத்தான விபத்துக்கு வழிவகுத்தது என்று அசுதோஷ் சிவம் கூறினார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் புனே அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய புனெ அணி 51-34 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோதாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 44-42 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    ×