என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • 12 வருடத்திற்கு ஒரு முறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.
    • 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள்.

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு புனித நீராடி வருகிறார்கள். இந்த மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும்.

    • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

    எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவரது காதலி உட்பட அவரது நண்பர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர்.
    • இருவரும் சட்டம் படிக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று, அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் உயிழந்தார்.

    தபாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர், நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படித்து வந்தார்.

    காவல்துறையின் கூற்றுப்படி, அவர் செக்டார் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு நண்பர் நடத்திய விருந்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

    அவரது காதலி என்று கருதப்படும் பெண் உட்பட அவரது நண்பர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர். தபாஸ் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

    இருவரும் சட்டம் படிக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    பார்ட்டியின்போது ஒரு கட்டத்தில், தபாஸ் ஏழாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரித்து வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த உடன் அங்கு சென்ற போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தபாஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

    • உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
    • கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு வாயு.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சிறிய கவனிக்காமல் செய்த தவறால் மூச்சுத்திணறி இரு இளைஞர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் நொய்டாவின் செக்டார் 70 இல் உள்ள பாசாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் உணவு ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தனர், அங்கு, 'சோலே பத்தூர்' மற்றும் 'குல்சே' உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சமைத்த அவர்கள், மறந்துபோய் அடுப்பை அணைக்காமல் தூக்கியுள்ளனர்.

    கொண்டைக்கடலை அடுப்பில் தொடர்ந்து கொதித்துக்கொண்டு இருந்ததால் அறை புகையால் நிரம்பியது. வீட்டின் கதவு மூடப்பட்டதால், அறையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கார்பன் மோனாக்சைடு புகையால் மூச்சுத் திணறி அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.

    சில மணி நேரம் கழித்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு விஷ வாயு. கார்கள், டிரக்குகள், அடுப்புகள், கிரில்ஸ் மற்றும் ஜெனரேட்டர்களில் எரிபொருளை எரிக்கும்போது இது வெளியேறும். காற்று புகாமல் இறுக்கமாக மூடிய இடங்களிலும் உருவாக்கலாம்.

    • சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள்
    • 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

     

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக தனது 56 வயதில் உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார். 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

     

    இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் ரெயில் நிலையத்தில் மேற்கூரை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • இன்று பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்து நடந்துள்ளது
    • குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இன்று [சனிக்கிழமை] பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினரால் ஆறு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானத்தில் இருந்த கூரையின் ஷட்டர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சுப்ரந்த் குமார் சுக்ல் கூறினார்.

    • சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
    • குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர்.

    பணத்துக்காக தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய கணவன் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குலாதியைச் சேர்ந்த நபரை அந்த பெண் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

    பெண்ணின் கணவர் வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார்.

    இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் தன்னை வன்கொடுமை செய்யும்போது அதை வீடியோ பதிவாக தனது கணவர் சவூதி அரேபியாவில் தனது மொபைல் போனில் பார்ப்பார் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    அவர் என்னை விவாகரத்து செய்வதாக மிரட்டியதால், எனது குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடுமை பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

    எனவே அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் புலந்த்ஷாஹர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஷ்லோக் குமாரைச் சந்தித்து தங்களின் துயரத்தை விவரித்தனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி -லக்னோ நெடுஞ்சாலையில் பஹதுர்கர் ஸ்டேஷன் பகுதிக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின

    குளிர்காலத்தில் வடஇந்தியாவில் நிலவும் அடர் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானம் முதல் சாலை போக்குவரத்து வரை தடை படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலவிய அடர் பனிமூட்டத்தில் சாலையில் பல்வேறு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டெல்லி -லக்னோ நெடுஞ்சாலையில் பஹதுர்கர் ஸ்டேஷன் பகுதிக்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டுவதற்கு அபாயகரமான சூழ்நிலையை உருவாகி உள்ளதாகவும் இதனால் அங்கு பல விபத்துகள் ஏற்படுவதாகவும் ஹாபூர் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

    அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், பார்வைத் தன்மை பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இது விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்துகளை பாதித்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. 26 ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    • 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லசாரிகேட் பகுதியை சேர்ந்தவர் மொயின். இவரது மனைவி அஸ்மா. இவர்களுக்கு அப்சா (வயது 8), அஜிசா (4) மற்றும் அதிபா (1) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களின் வீடு நேற்று முன்தினம் முதல் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு மொயின் மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோர் தரையில் பிணமாக கிடந்தனர். அவர்களது 3 குழந்தைகளும் வீட்டில் இருந்த படுக்கை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதைக்கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 பேரின் உடல்களிலும் காயங்கள் இருந்தன. எனவே மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்களை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் கால்கள் பெட்ஷீட்டால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளது.

    எனவே கொலையாளிகள் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என கருதுகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • ராமர் கோவில் குடமுழுக்கு நடந்த பகுதியில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஜெர்மன் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது.

    அக்கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி, குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் குடமுழுக்கு விழா நடந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் அக்காட்சியை நேரலையில் பார்த்தனர்.

    இதற்கிடையே, ஜனவரி 11-ந் தேதி ராமர் கோவில் நிறுவப்பட்ட தினம் என்பதால், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழா, 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. 13-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    ராமர் கோவில் குடமுழுக்கு நடந்த பகுதியில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஜெர்மன் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடாரத்திலும், யாகசாலையிலும் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், சடங்குகள், தினசரி ராமகதை பிரசங்கங்கள் ஆகியவை நடைபெறும்.

    தினந்தோறும் பகல் 2 மணிக்கு ராமகதை அமர்வு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, ராமசரிதமனாஸ் பிரசங்கம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் காலையில் பிரசாத வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    யாகம் நடக்கும் பகுதியில் அலங்கார வேலைகள் நடந்து வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியாத பொதுமக்களையும் சேர்த்து கொண்டாட வேண்டும் என்பதுதான் கொண்டாட்டத்தின் நோக்கம்.

    அதற்காக நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், 110 மிக முக்கிய பிரமுகர்கள் உள்பட விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியாதவர்கள் ஆவர்.

    இது, பொதுமக்கள் பங்கேற்க கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு ஆகும். அயோத்தி நகரத்தில் வசிப்பவர்களும், பக்தர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிரட்டல் செய்தியில் 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று எழுதியிருந்த்தை போலீசார் கவனித்துள்ளனர்.
    • தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக சஞ்சய் குமார் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேசத்தில் ஜனவரி 5 ஆம் தேதி சஞ்சய் குமார் என்ற நபர் தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில், "தனது மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்தது. அதில் எனது தம்பியை கயிறால் கட்டி வைத்துள்ளனர். தனது சகோதரன் உயிருடன் கிடைக்க வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தரவேண்டும் என்று அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது" என்று சஞ்சய் குமார் தெரிவித்தார்.

    மொபைல் போனுக்கு வந்த மிரட்டல் செய்தியில் 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று எழுதியிருந்ததை போலீசார் கவனித்துள்ளனர். ஆகவே படிப்பறிவு இல்லாத நபர் தான் அவரை கடத்தியுள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் சந்தீப்பை ரூபாபூர் அருகே கண்டுபிடித்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் சந்தேகமடைந்த போலீசார் சந்தீப்பிடம் கடத்தல் தொடர்பாக ஒரு கடிதம் எழுத சொல்லியுள்ளனர். அதில், 'DEATH' என்று எழுவதற்கு பதிலாக 'DETH' என்று சந்தீப் எழுதியுள்ளார்.

    இதனையடுத்து சந்தீப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை தானே கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    முதியவர் ஒருவர் மீது சந்தீப் பைக்கில் சென்றபோது மோதியுள்ளார். அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.80,000 தேவைப்பட்டதால் தனது பைக்கை சந்தீப் விற்றுள்ளார். மேலும் பணம் தேவைப்படவே கடத்தல் நாடகத்தை சந்தீப் நடத்தியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×