என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி விளக்கம் அளித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது.

    கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். மகா கும்பமேளாவுக்கு ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர்.

    அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் பி.டெக். ஏரோஸ்பேஸ் [விண்வெளிப் பொறியாளராக] பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங் கும்பமேளாவுக்கு வந்திருந்தார். ஐஐடி பாபா என்ற அடைமொழியுடன் அவர் இணையத்தில் வைரலானார்.

    இந்நிலையில் தனது குரு மஹந்த் சோமேஷ்வர் புரியை அவமரியாதை செய்ததற்காக சாதுக்களின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றான ஜூனா அகாராவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அகாரா முகாமில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

     இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒழுக்கமும் குரு பக்தியும் முதன்மையானது என்றும், இந்தக் கொள்கையைப் பின்பற்ற முடியாத எவரும் சன்யாசி ஆக முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி கூறுகையில், அபய் சிங்கின் செயல் குரு-சிஷ்ய மரபு மற்றும் சன்னியாசம் (துறவு) ஆகியவற்றுக்கு எதிரானது. நீங்கள் உங்கள் குருவை அவமதித்து, சனாதனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். உங்கள் மனதில் மதத்திற்கோ அல்லது குருபீடத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை என்று கூறினார்.

    ஒரு சமூக வலைதள ரீல் வீடியோவில் அபய் சிங், தனது தந்தை மற்றும் குருவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.

    ஜூனா அகாரா முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஐடடி பாபா அபய் சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜைப் புகழ்ந்து பாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது
    • சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ந் தேதி முதல் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகரமே திக்குமுக்காடி வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளா வளாகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள் இங்கே புனித நீராடிய பின் நெகிழ்ச்சியடைந்து செல்வதை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜைப் புகழ்ந்து பாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தெரியாது. ஆனாலும் அவர்கள் இந்த மொழிகளில் மந்திரங்கள் மற்றும் சனாதன தர்மத்துடன் தொடர்புடைய வசனங்களை மிகுந்த பக்தியுடன் உச்சரிக்கின்றனர்.

    பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக திட்டமிட்டு உள்ளனர்.

    மகர சங்கராந்தி மற்றும் பவுஷ் பவுர்மணி தினத்தில் என்னால் புனித நீராட முடியவில்லை. சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு என்னால் சிரமம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக நானாகவே பங்கேற்கவில்லை.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

    • உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    பிரயாக்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புனித நீராடுவதற்காக பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும் மகாகும்பத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சசிங் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.

    புனித திரிவேணியில் அவர் இன்று [சனிக்கிழமை] நீராடினார். இன்று மதியம் 12 மணிக்கு பிரயாக்ராஜை அவர் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இதுவரை, 2025 மகாகும்பத்தில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுத்த அழைப்பின்படி பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8 அல்லது 9 ஆம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இந்நிலையில் மகா கும்பமேளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில், பிப்ரவரி 28 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    குடியரசு தினம், மௌனி அமாவாசை, பசந்த பஞ்சமி, சந்த் ரவிதாஸ் ஜெயந்தி, மாகி பூர்ணிமா, காதலர் தினம், ஷப்-இ-பாரத், மகாசிவராத்திரி மற்றும் பல்வேறு போட்டிகள் போன்ற பிற விழாக்களைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.

    காவல்துறை மற்றும் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களைத் தவிர, முன் அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடாது.

    பிரயாக்ராஜ் எல்லைக்குள் யாரும் கொடிய ஆயுதம் அல்லது துப்பாக்கியை எடுத்துச் செல்லக்கூடாது.

    எந்தவொரு நபரும் எந்தவொரு தனியார் அல்லது அரசாங்க சொத்துக்களுக்கும் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது.

    எந்தவொரு நபரும் பொது இடத்தில் இடையூறுகளை ஏற்படுத்தவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார்
    • அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.

    இதில் கலந்துகொள்ள முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலவகைப்பட்ட ஆன்மீக குருக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் அசாதாரண செயல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படியொரு செயலைப் பற்றி கேள்வி கேட்கப்போய் பத்திரிகையாளர் ஒருவர் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    முள் பாபா என்று அறியப்படும் காண்டே வாலே பாபா கும்பமேளாவில் எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார். மேலும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக முட்களில்தான் படுத்திருப்பதாக கூறிக்கொண்டார்.

    முள் பாபாவை நெருங்கிய செய்தி நிருபர் ஒருவர், இந்த முட்கள் உண்மையானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முள் பாபா, அங்கிருந்து எழுந்து அந்த நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    "வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி" என்று அந்த நிருபரை ஒரு வழி செய்துள்ளார் முள் பாபா. ஆளை விட்டால் போதும் என அந்த நிருபர் அங்கிருந்து நழுவினார். இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
    • புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

    காருக்குள் மனைவியும் அவரது காதலனும் அமர்ந்திருக்க கணவன் பானட்டில் தொங்கியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு பரபரப்பான சாலையில் வேகமாகச் சென்ற ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.

    பானட்டில் தொங்கிய நிலையில் பயணித்தவர் சமீர். மஹிர் என்ற நபர் தனது மனைவியை தனது காரில் எங்கோ அழைத்துச் செல்ல முயன்றார் என்றும் இதுபற்றி அறிந்ததும் காரை நிறுத்த முயன்று பானட்டில் ஏறியதாகவும் சமீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்த தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீரின் மனைவியும் மஹிரும் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது
    • சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 2,000 கோடி செலவு இதில் அடங்கும்

     உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.

    4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும், 'மகாகும்ப் 2025' முன்பை விட அதிக பணம் புரளும் களமாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் 'மகாகும்ப் 2025' மூலம் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் வருவாயை ஈட்டப்படும் என்று உத்தரப்பிரதேச தொழில் மேம்பாட்டு அமைச்சர் நந்த கோபால் குப்தா நந்தி மதிப்பிட்டுள்ளார்.

     

    இதற்கு மத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்றுகூடலை தனது சந்தைக்களமாக பயன்படுத்தி வருகிறது. 40 கோடி பேரிடம் தங்களது பொருட்களையும், சேவைகளையும் விளம்பரப்படுத்தக் கோடிக்கணக்கில் இந்நிறுவனங்கள் இங்கு வாரி இறைத்து வருகின்றன.

    Dettol, Dabur, Pepsico, Coca-Cola உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளும், ITC மற்றும் Reliance போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் முகாம் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி, மாதிரிகள் மற்றும் குளிர்பானங்களை விநியோகித்து பக்தர்களை இழுக்க முயற்சித்து வருகின்றன.

    இந்த வருட மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் சுமார் ரூ.3,600 கோடி செலவழிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் செயற்கை நுண்ணறிவு (AI)- தீம்கள், LED திரைகள், மெய்நிகர் மற்றும் மொபைல் மூலம் விளம்பர செய்வதற்கான சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 2,000 கோடி செலவு இதில் அடங்கும். பக்தர்கள் ஓய்வெடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்து தருவது போன்ற உத்திகளின்மூலமும் இந்த விளம்பரப்படுத்தல் நிகழ்கிறது. 

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்று கூறினர்.
    • அரசியல் எதிரிகள் அதை மறுக்க விரும்புகிறார்கள்.

    பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில், பா.ஜ.க.வின் உத்தரப் பிரதேச பிரிவு தலைவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை விநியோகித்தனர். பிரயாக்ராஜில் உள்ள மத கூட்டம் ஒற்றுமையின் ஒரு சிறந்த கொண்டாட்டம் என்றும், இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

    இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் நாடு தழுவிய பிரச்சாரமான "சம்விதான் கௌரவ் அபியான்"- பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க., இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள தலித்துகளை கௌரவிக்கிறது.

    மகா கும்பமேளாவில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்பின் நகல்களை வழங்கி பாராட்டிய உத்தர பிரதேச பா.ஜ.க. செயலாளர் அபிஜத் மிஸ்ரா, "பா.ஜ.க. அல்லாத கட்சிகள் மற்றும் அரசாங்கங்களால் வெறும் வாக்கு வங்கியாக குறைக்கப்பட்டவர்களை கௌரவிக்க நாங்கள் இங்கு வந்தோம். இப்போது, ஒரு வலிமையான, உணர்திறன் மிக்க தலைவர் நாட்டை வழிநடத்துவதால், மாற்றம் தெளிவாக தெரிகிறது" என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மற்ற கட்சிகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வாக்கு வங்கிகளாகப் பார்க்கின்றன. எங்கள் கட்சி அவர்களை மதிக்கிறது. மகா கும்பமேளா ஒற்றுமையின் சிறந்த கொண்டாட்டமாகும், இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் ஒன்று. அதனால்தான் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த ஒற்றுமை என்ற கருத்தை வலுப்படுத்த அரசியலமைப்பின் நகல்களுடன் நாங்கள் வந்தோம். நமது அரசியல் எதிரிகள் அதை மறுக்க விரும்புகிறார்கள்," என்று கூறினார்.

    • கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
    • மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மகா கும்பாமேளா நிகழ்ச்சியில் இதுவரை 7 கோடி பேர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை வாங்க வேண்டும் என்று எடுக்கும் வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மிர்சாபூரில் ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உண்மைக்கு மாறான கருத்துகளை கூறி வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த ஆட்டோ டிரைவர்.

    ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கிவிட்டு கட்டணம் கேட்டபோது, அவர்கள் மாணவிகள் என்று கூறி கட்டணம் தர மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து கட்டணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் என் காலரைப் பிடித்து, தனது மொபைலை சகோதரியிடம் கொடுத்து அதை பதிவு செய்யச் சொன்னார். பின்னர் நான் கட்டணம் வேண்டாம் என்று சொன்னேன். நான் அவர்களைத் தொடக்கூட இல்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய ஆட்டோ டிரைவர் அவரது மார்பில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    இதனிடையே, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவரை அடித்தேன். இதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன. இதன்பின்னரே அந்த வீடியோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன் என்று கூறினார்.

    இருவரின் முரண்பட்ட தகவல்களால் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
    • சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்துக்கள் புனிதமாக கருதும் விழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. அதிகமான மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த கும்பமேளா நிகழ்வுகள் பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜையின், நாசிக் ஆகிய இடங்களில் நடைபெற்றாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றது.

    மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பது இந்த கும்பமேளாவுக்கு கூடுதல் சிறப்பு.

    மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டே தொடங்கியது. இந்த ஆண்டு பிறந்தது முதலே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்கள் லட்சக்கணக்கில் பிரயாக்ராஜ் நோக்கி வரத்தொடங்கினர்.

    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 83 லட்சம் பேர் கங்கை நதியில் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக 10 ஆயிரம் குடில்களை கொண்ட தற்காலிக நகரம் அமைக்கப்பட்டு உள்ளது. திரிவேணி சங்கமம் பகுதி இரவு நேரத்திலும் பகலைப்போல் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

    புகழ் பெற்ற மகா கும்பமேளா, பவுஷிய பூர்ணிமா தினமான நேற்று பஜனை மற்றும் பக்திக்கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக தொடங்கியது.

    சாதுக்களையும், துறவிகளையும் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் கங்கை நதியை நோக்கி ஜெய் கங்கா மாதா என்று கோஷமிட்டபடியே நடந்து சென்றனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புனித நீராடிய பலர், ஆங்காங்கே அமர்ந்து இருந்த துறவிகளிடம் ஆசி பெற்றனர். ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பமேளா நடைபெறும் பகுதியில், பூஜைப் பொருட்களை விற்று பக்தர்களுக்கு திலகம் பூசுபவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். அவர்களிடம் ஏராளமானோர் காத்திருந்து திலகமிட்டதை காண முடிந்தது.

    ×