என் மலர்
உத்தரப் பிரதேசம்
- மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
- நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாஹி பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடந்தது. மேலும் மசூதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் மெராதாபாத்தை சேர்ந்த நிடா என்ற பெண், சம்பாலில் நடைபெற்ற சம்பவத்தில் போலீசாரின் செயலை பாராட்டியதற்காக அவரது கணவர் முத்தலாக் (விவாகரத்து) கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிடா தனது கணவர் எஜாசுல் மீது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் ஒரு திருமணத்திற்காக சம்பல் பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது. மேலும் எனக்கு அங்கு சில தனிப்பட்ட வேலைகளும் இருந்தன. இதனால் நான் அங்கு செல்வது பாதுகாப்பானதா என்று சம்பல் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது எனது கணவர் ஏன் வீடியோவை பார்க்கிறாய் என கேட்டார். மேலும் இதை தவறு என கூறிய அவர் நீங்கள் போலீசாரின் செயலை ஆதரிக்கிறீர்கள் எனக்கூறி என்னிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கினார். மேலும் இனி உன்னை வைத்திருக்க மாட்டேன் என கூறியோடு முத்தலாக் (விவாகரத்து) என தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிடாவின் புகார் தொடர்பாக மொராதாபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது.
- ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் லிப்ட் அறுந்து விழுந்து தாய் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரிஷ்மா (30) என்ற பெண் சிசேரியன் பிரசவத்திற்காக காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவர் பொது அறைக்கு மாற்ற ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். சம்பவ இடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பினர்.
பிறந்த பெண் குழந்தை வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலையத்தில் கேபிடல் மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் சிஎம்ஓ குழுவை அமைத்துள்ளனர்.
- நடைமேடை 1 க்குள் ரெயில் நுழைந்ததும் அந்த நபர் மேலிருந்து குதித்தார்
- ரெயில்வே போலீஸ் அதிகாரி நயீம் மன்சூரி விளக்கம் அளித்தார்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று [வெள்ளிக்கிழமை] கோவா நோக்கிச் சென்ற 12780 ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோடகாமா ரெயிலின் இன்ஜின் மீது குதித்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
ஜான்சி ரெயில் நிலையத்தின் நடைமேடை 1 க்குள் ரெயில் நுழைந்ததும் அந்த நபர் நடைமேடையில் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

ரெயில் இன்ஜின் மேல் உள்ள மின் கம்பியில் விழுந்த அந்த நபரின் உடல் தீயில் எரியும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. மின்கம்பி மூடப்பட்டு அந்த நபரின் உடலை மீட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜான்சி ரயில் நிலையத்திலேயே அந்த ரெயில் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரெயில்வே போலீஸ் அதிகாரி நயீம் மன்சூரி, பலியானவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் ஆனால் அவருக்கு 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- இரண்டு விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் மற்றும் சித்ரகூட் மாவட்டங்களில் நடந்த சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிலிபிட்டில், நியோரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 பேருடன் வந்த கார் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கதிமாவைச் சேர்ந்த 11 பேர் மாருதி எர்டிகா காரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சையின் போது இருவர் இறந்ததாகவும் - மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும்" போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேற் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சித்ரகூடில் நடந்த விபத்து குறித்து, போலீஸ் சூப்பிரண்டு அருண் குமார் சிங் கூறுகையில், "கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ராய்புரா காவல் நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்தது. ராய்புராவில் இருந்து லாரி வந்துகொண்டிருக்கும்போது, கார் பிரயாக்ராஜில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதிலும் 11 பேர் இருந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
மேலும், இரண்டு சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
- தற்போது நடைபெ்றற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, நகர பொறுப்புகள் உள்பட அனைத்து காங்கிரஸ் கட்சியின் கமிட்டிகளும் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
உத்தர பிரதேச மாநிலத்தில் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கை மேற்கொளண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அஜய் ராய் காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
- ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் 13 வயது சிறுமி 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் தொங்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்போரின் இதயங்கள் சில நிமிடங்கள் நின்று விடுவது போல் உணர முடிகிறது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட 130 கிமீ தொலைவில் உள்ள லக்கிம்பூர் கெரியின் நிகாசன் பகுதியில் உள்ள ராகேத்தி கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி சக்கரம் நகர தொடங்கியதும் அவள் சமநிலையை இழந்து ராட்டினத்தின் இரும்பு கம்பியில் தொங்கியபடி கூச்சலிட்டாள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூக்குரலிட ஆபரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்தினர். ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அடையாளம் காணப்படாத சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர்.
அடர்ந்த வனப்பகுதிகள், மலையடிவார கிராமங்களுக்குள் அவ்வப்போது கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும். இதனால் பீதியடையும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதுபோல உத்தரபிரதேசம் மாநிலம் மகராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தாங்களே சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை மடக்கி பிடித்தனர். அப்போது ஒரு இளைஞர் வெறும் கைகளால் சிறுத்தையின் கழுத்தை நெரித்தார். இதனால் சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சிறுத்தையை கையில் வைத்திருந்த சில இளைஞர்கள் அதன் கழுத்தை நெரிப்பதும், கால்களை பிடித்து இழுப்பதும் போன்ற காட்சிகள் அதில் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சிலர், சிறுத்தையின் கழுத்தை நெரித்த இளைஞர்களை விமர்சித்து பதிவிட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டல்களால் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
- சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.
இந்தியாவில் சமீப காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களால் வீண் பதற்றம் மற்றும் நேர விரயம், தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இந்த வரிசையில், தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தாஜ் மஹால் அழகை பார்த்து ரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ள பிரதீப் சவுத்ரியிடம் பஸ்லு என்ற முஸ்லீம் நபர் உதவி கேட்டு வந்துள்ளார்.
- உங்களிடம் இருந்து எனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி கூறியுள்ளார்.
எனக்கு ஓட்டு போடாத உங்களுக்கு நான் உதவி செய்ய மாட்டேன் என்று உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ள பிரதீப் சவுத்ரியிடம் பஸ்லு என்ற முஸ்லீம் நபர் உள்ளூர் ரேஷன் டீலருடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக உதவி கேட்டு அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அந்த வீடியோவில், உதவி கேட்டு வந்தவரிடம் பேசிய எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி, "என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களிடம் இருந்து எனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு நிறைய முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை பாஜக ஆட்சியாளர்கள் நடத்தும் விதம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
- வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் [இன்று] சனிக்கிழமை அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
- ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
வாரணாசி ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி), ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குழுக்களும் தீயை அணைக்க உதவினர்.
தீவிரமான அளவு தீ பரவியபோதும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
- ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பியுள்ளார்.
- ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி நெடுஞ்சாலையில் ஓட்டியுள்ளார். ஜீப்பின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மீது மண் விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி அதை விடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் அந்த ஜீப்பை சாலையை ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார். ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், வியட்நாமின் டாங் நுயெனுடன் மோதினார். இதில் ரஜாவத் 21-13, 21-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






