என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accidental Firing"

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    • உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    பிரயாக்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×