என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமரன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.

    நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

    மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

    ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

    இந்நிலையில், அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை கூறுவது போல ஒரு காட்சி வரும்.

    அந்த காட்சியில் வரும் மொபைல் எண் தன்னுடைய மொபைல் எண் என்று சென்னையை சேர்ந்த மாணவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    அந்த எண்ணிற்கு ரெபேக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டி தினமும் நிறைய அழைப்புகளும், வாய்ஸ் மெசேஜும் வருவதாக அந்த மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக படக்குழுவினருக்கு சமூக வலைத்தளத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் இப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

    • அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா.
    • அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.

    இந்நிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றுள்ளார்.

    முன்னதாக, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப வாகனங்கள் நிறுத்தும் வசதி, தங்கும் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அமைச்சர் சேகர்பாபு செய்து தந்துள்ளார்.

    • மான நஷ்ட ஈடாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    கொடநாடு கொலை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசக்கூடாது என உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால், ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரின் சகோதரர் தனபால் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான மனுவில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதுவரை அவதூறாக பேசி வந்த தனபால் ரூ. 1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    • பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
    • பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.

    அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.

    இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.

    மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    • தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
    • கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    சென்னை:

    பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோயம்பேடு போலீசிலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கஸ்தூரி மீது சென்னையில் மேலும் 2 வழக்குகள் பாய உள்ளன.

    இந்நிலையில் ரெட்டி நல சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், திருச்சி குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில் யூடியூப் சேனலில், வெளியான கஸ்தூரியின் கருத்துகள் மனதை புண் படுத்தும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    இதன் பேரில் கஸ்தூரி மீது 196, 352, 353 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்திந்திய போயர் பெண்கள் நலச் சங்கத்தின் தொழிற்சங்க நிர்வாகி விஜயலட்சுமி உப்பிலிய புரம் போலீஸ் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்து உள்ளார்.

    • அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    • பாதுகாப்பிற்காக 4500 போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது.
    • 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக் கண்ணு இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமே கூறியுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.

    பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பாஜகவும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர்.


    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க அனைவரும் உறுதி ஏற்போம்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும். குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது.

    அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெறபாடுபடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வெடிகுண்டுகளை மணலியில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.
    • கொலையாளிகள் ரூ.5 லட்சம் வரை கூலியாக பெற்றிருந்தால் அவர்களது ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டம் வழிவகுக்கிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பொன்னை பாலுவுடன் சேர்ந்து ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்கும், தனது மகனான காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கட்டும் வகையிலும் வேலூர் சிறையில் இருந்து வடசென்னை தாதா நாகேந்திரன் இந்த கொலையில் உதவிகள் செய்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பாஜக கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்த பெண் தாதா அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த வழக்கில் போலீசார் குற்ற பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர். கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை தீர்த்து கட்டுவதற்காக கொலையாளிகள் எடுத்துச் சென்ற வெடி குண்டுகள் பலரது கைமாறி கொலையாளிகளின் கைக்கு சென்றிருப்பது தெரிய வந்து உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொல்வதற்கு முடிவு செய்த பொன்னை பாலுவும் அவரது கூட்டாளிகளும் தேவைப்பட்டால் வெடி குண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.

    ஆனால் அதனை பயன்படுத்துவதற்கான தேவை எழவில்லை. அரிவாளாலேயே ஆம்ஸ்ட்ராங்கை அவர்கள் வெட்டிக்கொன்று விட்டனர்.

    இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்த இரண்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி கொலை வழக்கில் சிக்கிய ஆதாரங்களாக சேர்த்து உள்ளனர். அந்த வெடிகுண்டுகள் சம்பவ செந்தில் மூலமாக தயார் செய்யப்பட்டு பொன்னை பாலுவிடம் வழங்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கோடம்பாக்கத்தில் இருந்து 2 வெடிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அதனை சாப்பாட்டு பாத்திரத்தில் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் போல உடை அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்களை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் முதலில் திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி உள்ளனர். அங்கு வைத்து வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டு 2 பேர் ஐகோர்ட்டு அருகில் சென்று இந்த 2 வெடிகுண்டுகளையும் கைமாற்றி உள்ளனர்.

    இந்த வெடிகுண்டுகளை மணலியில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக கையில் எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள 'பி.என்.எஸ்.107' சட்ட பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்து வந்த இந்த அதிகாரம் புதிய சட்டப்பிரிவின் கீழ் போலீசாருக்கும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்படி சென்னை மாநகர போலீசார் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர்.

    இதுபோன்ற கொலை வழக்குகளில் கொலையாளிகள் ரூ.5 லட்சம் வரை கூலியாக பெற்றிருந்தால் அவர்களது ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டம் வழிவகுக்கிறது.

    இதன்படி சென்னை மாநகர காவல் துறையினர் முதல் நடவடிக்கையாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
    • வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்குகள் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது நீதிபதி, "அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதனால், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுறேன்.

    இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்" என்று கூறினார்.

    • சுற்றி திரியும் நாய் ஒன்று காவல் உதவி மையத்திற்குள் இருந்தது.
    • நாயின் சத்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் சுரங்க பாதை அருகே காவல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சுற்றி திரியும் நாய் ஒன்று காவல் உதவி மையத்திற்குள் இருந்தது. இதனை கவனிக்காமல் போலீசார் அந்த உதவி மையத்தை பூட்டி சென்று விட்டனர். இதனால் பயந்து போன அந்த நாய் இன்று காலை வரை விடிய, விடிய குரைத்தது. நாயின் சத்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
    • கூல் லிப் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, பீகார், ஒடிசா மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி தி.மு.க. சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது. தெலுங்காவின் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ரூ.250 கோடியில் 2 மாதத்தில் நடத்திமுடிக்கலாம். தெலுங்கானா காங்கிரஸ் அரசிடம் தி.மு.க. பாடம் கற்க வேண்டும். ஸ்டாலினின் முகமூடியை ராகுல்காந்தியும், ரேவன் ரெட்டியும் கழட்டியுள்ளனர். இதுவே தேசிய அளவில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்புக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவேண்டும். 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதை மாற்றப்படவேண்டும். மருத்துவத்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவே பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம். ரூ. 40 ஆயிரம் கோடியை வரும் ஆண்டில் நிதி ஒதுக்கவேண்டும்.

    கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. நீதிமன்றம் இந்த புகையிலைக்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எனவே மத்திய அரசு இப்புகையிலையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 2500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு போகாத நான் கோட்டைக்கு சென்று இக்கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினேன். இக்கணக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன். நாகரீகமாகவும், நளினமாகவும் எங்கள் செயல்பாடுகள் உள்ளது. காவல்துறையில் கருணாநிதி கூறியது போல ஈரல் மட்டுமல்ல இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சென்ற மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர்மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏமாளிகள். பொறுத்து பொறுத்து பார்க்கிறோம்.

    சிறைக்கு செல்வது எங்களுக்கு புதிது அல்ல. அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட அம்பேத்கர் சிலையை நான் திறந்து வைத்தேன். அச்சிலையை சேதப்படுத்தினால் பா.ம.க., வன்னியர் சங்கம்தான் குரல் கொடுக்கும். கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கருணாநிதிதமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன்.

    சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழுகூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் இந்நூற்பா பொருந்தலாம். பிராமிணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வன்னியர் சங்கத்தலைவர் பு. தா. அருள்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×