என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது?
    • விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கும் ஒப்பந்தம் தகுதி இல்லாத ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு கொடுக்கப்பட்டதா அல்லது இந்த முறைகேட்டில் நடந்த ஊழலுக்கு என்ன வருத்தம் என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.

    சிவாஜி சிலை சேதமடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்டதை ஏற்கமுடியாது. மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்.

    எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? ஏன் இரண்டு பேருக்காக மட்டும் ஆட்சி நடத்துகிறார் என மோடி பதில் சொல்ல வேண்டும்.

    போராட்டங்கள் நடத்தியதால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை.

    பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..

    வடகிழக்கு மாநிலத்தை பா.ஜ.க.வே தீயிட்டுக் கொளுத்தியதால் உள்நாட்டுப் போர் போன்ற சூழலை எதிர்கொள்ளும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை.

    சிறு, குறு தொழில்கள் 2 பேரின் நலனுக்காக முடிக்கப்பட்டன. அதானி, அம்பானி குழுக்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சித்தாந்தத்தின் அடித்தளமும் டி.என்.ஏ.வும் உள்ளது. இன்றைய அரசியல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை.

    நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வளர்ச்சியை பா.ஜ.க. விரும்புகிறது என தெரிவித்தார்.

    • பெற்றோர் தங்களது இரு மகன்களை பரிக்கொடுத்தனர்.
    • ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த மகன்களின் சடலத்தை பெற்றோர் தங்களது தோள் மீது தூக்கிக் கொண்டு செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை உரிய நேரத்திற்கு மருத்துவமனை அழைத்து செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரு மகன்களை பரிக்கொடுத்துள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலியை அடுத்த அஹெரி தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில், இருவரின் உடல்நிலை திடீரென மோசமானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரின் உயிரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

    உயிரிழந்த சிறுவர்களை உடலை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக அந்த தம்பதி தங்களது பிள்ளைகளின் சடலத்தை சுமார் 15 கிலோமீட்டர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

    அடையாளம் தெரியாத தம்பதியினர், 10 வயதுக்குட்பட்ட இரண்டு மைனர் சிறுவர்களின் உடல்களை தோளில் சுமந்து கொண்டு, சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் வீடியோவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் பகிர்ந்துள்ளார்.

    • இது தொடர்பான அறிவிப்பை பொதுப்பணி துறை வெளியிட்டு உள்ளது.
    • போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து அனுமதி சீட்டை பெற வேண்டும்.

    விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

    அந்த வகையில், நாளை துவங்கி இம்மாதம் 19 ஆம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் வழித்தடத்தை கட்டும் பயணிகள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில பொதுப்பணி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    மும்பை - பெங்களூரு மற்றும் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    வாகனங்கள் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து அனுமதி சீட்டை பெற வேண்டும். இதற்கான படிவத்தை அம்மாநில பொதுப்பணி துறை வெளியிட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட மும்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடலோர கொங்கன் பகுதியில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து மட்டும் கொங்கனுக்கு செல்லும் பயணிகளை பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்றி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
    • லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர பெண்ணுடன் ஒப்பந்தம் [MOU]

    பாலியல் பலாத்கார வழக்கில் லிவ் இன் டுகெதர் சாக்கை பயன்படுத்தி குற்றவாளி முன் ஜாமீன் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியும் பல முறை தன்னை 46 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களது உறவு வளர்ந்த நிலையில் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தங்களது உறவை முறித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் முற்பட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைத்து தங்களது உறவைத் தொடர அந்த நபர் மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கு மிடையிலான லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர அந்த பெண்ணுடன் தான் ஒப்பந்தம் [MOU] செய்துள்ள ஆதாரத்தை அந்த நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

     

    அந்த அக்ரிமென்டில் பெண்ணின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளதாக அந்த நபரின் வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். எனவே இதை ஆதாரமாக ஏற்றும், அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை அந்த பெண் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அந்தரங்க வீடியோகக்ளை வைத்து மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் தெரிந்த நபருக்கு லின் இன் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்க அதிக நேரமானது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். 

    • பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்
    • கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமியர்களை மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று மகாராட்டிர பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானாபொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் கடந்த மாதம் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில் ராம்கிரி மஹராஜூக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி[Kankavli] தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். 'மதகுரு மஹாந்த் ராம்கிரி மஹராஜூக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் மசூதிகளுக்குள் புகுந்து உங்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம் [chun chun ke marenge]. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று நிதேஷ் ரானே தெரிவித்தார். அவரின் பேச்சை கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது தட்டி ஆரவாரம் செய்தனர்.

    நிதேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிதேஷ் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியல் வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நிதேஷ் மீது இரண்டு எப்.ஐ ஆர் கள் பதியப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 'இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது'
    • 'தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்'

    மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    இந்த பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ராமர் கோவில், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவது, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது என இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது. சிலை உடைந்ததற்காக மோடி கேட்ட மன்னிப்பைக் கவனித்தீர்களா? அந்த மன்னிப்பில் ஆணவம் தெரிகிறது. மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?, தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதை மகாராஷ்டிர மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

     

    மாநிலத்தில் பல இடங்களில் மன்னர் சிவாஜியின் சிலை உள்ளது , ஆனால் மால்வனில் உள்ளது கீழே விழுந்துள்ளது, இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை மக்கள் உணர்கின்றனர். இது சிவாஜி மகாராஜ் -கு இழைக்கப்பட்ட அவமானம், சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது, அவர் எங்களுக்கு கடவுள், சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்கும் என்று தெரிவித்தார். 

    • மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த நிலையில் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    • மகாராஷ்டிராவில் முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதாரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
    • சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கினர்.

    மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

    அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "2 நாட்களுக்கு முன்பு இகத்புரி பகுதியில் ரயில் பயணத்தின் போது முதியவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இத்தகைய சமூக விரோதிகளுக்கு நமது அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

    • போலீசாரின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
    • நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    மும்பை:

    மும்பை கார் பகுதி போலீஸ் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் நேற்று முன்தினம் மாலை கலினா பகுதியில் சோதனை நடத்தினர். பின்னர் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் டேனியல் என்பவரை கைது செய்தனர்.

    இந்த சோதனை நடவடிக்கை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதில் சோதனைக்கு வந்த போலீசாரே டேனியலின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட டேனியல் விடுவிக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டேனியல் கூறுகையில், "போலீசார் முதலில் என்னை போதைபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போவதாக மிரட்டினர். ஆனால் அவர்களின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது தெரிந்தவுடன் என்னை விடுவித்துவிட்டனர்" என்றார்.

    இதேபோல டேனியலின் நண்பர் கூறுகையில், "நில பிரச்சினையில் கட்டுமான அதிபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் அவரை பொய் வழக்கில் சிக்கவைக்க முயன்றனர்" என குற்றம் சாட்டினார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வழக்கில் தொடர்புடைய 4 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் ராஜ்திலக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "முறையான சோதனை நடைமுறையை பின்பற்றாததற்காகவும், வீடியோவில் இருப்பதுபோல சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் காரணமாகவும் 4 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையை முறையாக நடத்த அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

    • அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
    • தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் சொந்த கூட்டணி அரசை எதிர்த்தே அஜித் பவார் தேசியவாத காங்கிரசார் போராட்டம் நடத்தியது அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக, மஹாயுதி கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசுடன் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா காட்சியைச் சேர்ந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனாஜி சாவந்த் தெரிவித்துள்ள கருத்து கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    தாராஷிவ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தனாஜி சாவந்த், நான் அசல் சிவசேனா காரன், எனது மாணவப் பருவத்தில் இருந்தே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எனக்கு பிடித்ததில்லை. இதுதான் உண்மை. அதனால் இப்போது சட்டமன்றத்தில் அஜித் பவாருடனும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுடன் அருகருகே அமருவதை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அருகே உட்கார்ந்த பின்னர் வெளியே வந்ததும் எனக்கு குமட்டல் தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து அஜித் பவார் அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறுய்த்து பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உமேஷ் பாட்டீல் கூறுகையில், எங்களை அவமதிக்கும் வகையில் தானாஜி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, மஹாயுதி கூட்டணியை விட்டு வெளியேறுவதே சிறந்தது. தானாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவில்லை என்றால் நாங்கள் கூட்டணியை விட்டு நிச்சயம் வெளியேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

     

    இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அஜித் பவார், நான் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன், விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. எனக்கு எதிராக பேசுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சுயமரியாதையை இழந்து, இன்னும் அந்த கூட்டணியில் அஜித் பவார் நீடிக்க வேண்டுமா?' என சரத் பவார் அணி தேசியவாத காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    • முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
    • சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

    அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • அடகுக்கடையில் இருந்து நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
    • தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால் -ஜெயஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகுக்கடையில் இருந்து ரூ.4.95 மதிப்புடைய தங்களது தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக புனே -சோலாப்பூர் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    பாபுலால் வடா பாவ் வாங்கச் சென்ற நிலையில் வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ சற்று அசந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த ஒருவன் வண்டியின் முன்புறம் இருந்த நகைகள் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஜெயஸ்ரீ அவனை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி தொலைக்காட்சி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தேடி வருகின்றனர். 

    ×