என் மலர்
மகாராஷ்டிரா
- மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
- இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
- குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.
- எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களுக்காக போராடும்.
மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யத் துடிக்கும் இந்த கும்பல் அவருக்கு உதவும் யாராக இருந்தாலும் பாபா சித்திக் நிலைதான் என்று எச்சரிக்கை விடுத்தது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.
அவரை என்கவுண்டர் செய்யும் போலீஸ்காரருக்கு ரூ.1.11 கோடி பரிசு தருவதாக கர்னி சேனா அறிவித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக உதயமாகியுள்ள உத்தர்பாரதிய விகாஸ் சேனா [யுபிவிஎஸ்] கட்சி லாரன்ஸ் பிஷ்னோய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் சுக்லா, நாங்கள் உங்களில் [லாரன்ஸ் பிஷ்னோய்] மாவீரர் பகத் சிங்கை பார்க்கிறோம்.எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடும் என்றும் லாரன்ஸ் பிஸ்னோய் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி சார்பில் சீட் தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தங்கள் மகனுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் என்று பஞ்சாபில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
- மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.
- கடந்த 1 வாரமாக மோதல் போக்கு நிலவியது.
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக எதிர்கட்சிகள் இடையே கடந்த ஓரு வாரமாக மோதல் போக்கு நிலவியது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 105 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 95 தொகுதி யிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 84 இடங்களிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 4 தொகுதிகள் சமாஜ்வாடி மற்றும் பி.டபிள்யூ.பி. கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
தலைநகரான மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.
- அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு.
- உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது ஆதரவு அளித்த அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் வாய்ப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மகாயுதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது இருந்த, தனக்கு ஆதரவு அளித்த சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானே நகரில் கோப்ரி-பஞ்ச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
- போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் உள்ளார்
- சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.
மகாராஷ்டிர அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஸ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு அறிவித்துள்ளது சத்ரிய கர்னி சேனா என்ற அமைப்பு.
வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகி தற்போது குஜராத் சபர்மதி சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ள நிலையில் கர்னி சேனாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் பாபா சித்திக் அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்துக்கு வெளியே வந்துகொண்டிருந்தபோது மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் அரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை போலீசார்,கைது செய்தனர். இதற்கிடையே பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல், சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக் கதிதான் நேரும் என்றும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக சத்ரிய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் செகாவத், "லாரன்ஸ் பிஷ்னோயை கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு இன்று அதே எண்ணில் இருந்து இன்னொரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில், சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று செய்தி அனுப்பியதன் மூலம் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அனுப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது
- கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
- 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அங்கு ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) ஒரு கூட்டணியாக களம் காண்கிறது.
சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. இரு அணிகளும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ், சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலே உள்ளிட்ட 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், காம்தி தொகுதியில் சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலேவும், ஷஹாடே தொகுதியில் ராஜேஷ் உடேன்சிங் பட்வி, துலே நகரில் அனுப் அகர்வால் களம் காண்கின்றனர். கட்கோபார் மேற்கு தொகுதியில் ராம்கடம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மகாலே பாட்டீல், ஸ்ரீஜெயா அசோக் சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமினில் வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமினில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.
மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதைய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டதை மகாராஷ்டிர முதல்வர் ஏகாந்த் ஷிண்டே ரத்து செய்தார்.
ஜல்னா மாவட்டத்தில் சிவசேனா கட்சி சார்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று காந்த் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
- மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.
- நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும்.
மொத்தம் தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், வரும் நவம்பர் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் மாஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்] மற்றும் மகாவிகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ்] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன. மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் மாகா விகாஸ் அகாதி - இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக மகாயுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் கவனத்துடன் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
துலே பகுதியில் பிரசாரம் செய்த அவர், மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜக விரக்தியில் உள்ளது. சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைப்பதிலும் கூட அவர்கள் ஊழல் செய்துள்ளனர். மராட்டிய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என பாஜக கூறியது. ஆனால் நமது அண்டை நாடுகள் நம்மை விட நன்றாக செயல்படுகின்றன. அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பிரசாரத்தின்போது பேசிய அவர், நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். 2024 பட்டினி குறியீட்டில் இலங்கை, பர்மாவை விட பின்தங்கியும், பஞ்சத்தால் அவதிப்படும் பாகிஸ்தானுக்கு சமமான நிலையிலும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜாமீனில் வெளிவந்த கொலை குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் இந்தக் கொலையில் தொடர்புடைய மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தெடர்ந்து மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து வெளியே வந்தனர். கடைசியாகக் கடந்த அக்டோபர் 11 அன்று ஜாமீனில் வெளிவந்த இருவருக்கு இந்து அமைப்பினரால் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுள் ஒருவனான ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்பவர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் முதல்வர் ஷிண்டே சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்நத ஸ்ரீகாந்த் கடந்த 2001 முதல் 2018 வரை அப்போதய ஒருங்கிணைத்த சிவசேனாவில் ஜால்னா தொகுதி முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் சீட் மறுக்கப்பட்டதால் சிவசேனாவின் இருந்து வெளியேறி வலதுசாரி அமைப்பான இந்து ஜன்ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பரில் கடந்த செப்டம்பர் 4 அன்று ஜாமீனில் வந்த அவர் தற்போது ஷிண்டே சிவசேனா தலைவர் முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோத்கர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ஜால்னா சட்டமன்றத் தொகுதியில் பிரசார தலைவராக அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிடுவேன் என்றும் ஸ்ரீகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆளும் மகாயுதி கூட்டணி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] இடையே சீட் பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
- டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.
மும்பை:
உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே வெளியிட்ட தகவலில், "முழு உடல் பரிசோதனைக்காக முன்பே திட்டமிட்டதன் படி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் தனது இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் ஒருவர் எவ்வளவு ஓய்வெடுக்க முடியும்? துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை எனக்கு ஓய்வே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா உடைய காரணமாக இருந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று குறிப்பிடுவது வழக்கம்.






