என் மலர்
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.
- மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதைதொடர்ந்து, மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.
அப்போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில், முக்கிய 5 அறிவிப்புகளாக, பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், கூடுதல் ஊக்கத்தொகையாக, கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொறு இளைஞருக்கும் மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும்.
மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ.25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகை பெறும்.
சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.
- பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.
மும்பை:
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார். மத்திய மந்திரி பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். லட்கி பஹின் யோஜனா வரம்பு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். விருத் பென்சன் யோஜனா உச்ச வரம்பு ரூ.1500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும்.
25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விலையை சீராக வைத்திருக்க சந்தையில் தலையிடப்படும். அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தை மிகவும் விரும்பப்படும் மேக்-இன் இந்தியா இடமாக மாற்ற விரும்புகிறோம். ஏரோநாட்டிகல் மற்றும் விண்வெளியில் கவனம் செலுத்தப்படும. செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மகாராஷ்டிராவில் அமைகிறது. 1 லட்சம் கோடி பொருளாதாரமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்க விரும்புகிறோம் என்பது உள்பட பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு அமித்ஷா கூறியதாவது:-
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி வாக்குறுதிகளையும், சித்தாந்தங்களையும் அவமதிக்கிறது.
உத்தவ் தாக்கரேவிடம் கேட்க விரும்புகிறேன். வீர் சாவர்க்கரைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளைப் பேசுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்க முடியுமா? எந்த காங்கிரசாரும் பாலாசாகேப் தாக்கரே பற்றி 2 நல்ல வார்த்தைகள் பேச முடியுமா?
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு கேட்கிறது. காங்கிரஸின் மாநிலத் காங்கிரஸ் தலைவர் நானா படோலே இதை ஒப்புக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், காங்கிரசின் இந்த திட்டத்திற்கு உடன்படுகிறீர்களா? மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது.
சரத் பவாரை நான் கேட்க விரும்புகிறேன், 2004-2014 வரை 10 ஆண்டுகள் நீங்கள் காங்கிரசின் மத்திய அரசில் மந்திரியாக இருந்தீர்கள். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
- பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் பிரச்சரம் செய்து வருகிறார்
- சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. களத்தில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரேவின் மகாவிகாஸ் அகாதி இந்தியா கூட்டணியும், பாஜக, அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே மகாயுதி கூட்டணி உள்ளன.
இரண்டு கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அருகில் இருப்பவர் கூறுவதை அப்படியே மைக்கில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
லாத்தூர் [Latur] கிராம புறநகரில் உள்ள அவுசா [Ausa] என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த ஏக்நாத் ஷிண்டே பக்கத்தில் இருக்கும் பாஜக பிரமுகர் அரசுத் திட்டங்களின் பெயர்களுடன் சொல்ல சொல்ல மைக்கில் அதை அப்படியே ஒப்பிக்கும் இந்த வீடியோவை எதிர்க்கட்சிகள் டிரண்ட் செய்து வருகின்றன.
சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும் விஷயமாக இருந்த நிலையில் தற்போது டெலிபிராம்டர் தொழில்நுட்பத்தையும் தாண்டி மனிதனை பிராம்டராக மகா முதல்வர் பயன்படுத்தியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார்.
- சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் சமீபத்தில் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டலில் சல்மானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கந்தர் திரைப்பதில் இடம்பெற்றுள்ள 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலில் சல்மான் கான் மற்றும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்பான வரிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிக்கந்தர் படத்தின் 'மைன் சிக்கந்தர் ஹூன்' பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும், அவரை உயிருடன் விடமாட்டோம். இந்தப் பாடலை எழுதியவரின் வாழ்க்கையை அடுத்த ஒரு மாதத்தில் முடித்துவிடுவோம் என்று மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பான மெசேஜ் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டது.
அந்த கொலை மிரட்டல் மெசேஜில், சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால், அந்த பாடலாசிரியரை காப்பாற்ற வேண்டும் என்று சல்மான் கானுக்கு நேரடியாக சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாமியார் கொடுமையால் தான் தங்களது மகள் தற்கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் புகார்
- பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தன் மாமியார் வீட்டில் துன்புறுத்தப்பட்டதால் தான் தங்களது மகள் தற்கொலை செய்துள்ளார் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
எங்களது மகளின் தனிப்பட்ட சுதந்திரங்களை கணவனின் குடும்பத்தினர் பறித்தனர் என்று இந்த கிழக்கில் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர். டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது. கம்பளத்தின் மேல் தான் படுத்து தூங்க வேண்டும் என்று எங்கள் மகளை கணவனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக கணவன் வீட்டார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது என்று கூறி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.
- முதலில் தேசம் என்ற இந்த உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
- கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
மும்பை:
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் துலே மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இன்று 2-வது நாளாக பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் விதர்பா மாவட்டம் அகோலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நவம்பர் 9-ந்தேதி நாட்டின் வரலாற்றுமிக்க நாள். 2019-ம் ஆண்டு இந்த நாளில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு, எல்லா மதத்தினரும் மிகுந்த உணர்ச்சியைக் காட்டினர். முதலில் தேசம் என்ற இந்த உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
நான் பிரதமராக பதவி ஏற்ற முதல் 2 முறை மராட்டியத்தில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டி வழங்கியுள்ளேன். நீங்கள் மற்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கும் போது, இன்னும் ஒரு குடும்பம் தற்காலிக வீடு அல்லது குடிசையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டால், அவர்களது பெயரையும் முகவரியையும் எனக்கு அனுப்புங்கள். எனது சார்பாக அவருக்கு நிரந்தர வீடு உறுதி செய்யப்படும். நீங்கள் அவருக்கு வாக்குறுதி அளியுங்கள். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன்.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஊழல் நிறைந்தது. காங்கிரஸ் எங்கு ஆட்சி அமைத்தாலும், அந்த மாநிலம் காங்கிரசின் அரச குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாறுகிறது.
இமாச்சலபிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை அவற்றின் ஏ.டி.எம்.களாகமாறிவிட்டன. மராட்டியத்தில் தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர்கள் கொள்ளையடிப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி என்றால் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் ஊழல் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்தார்
- மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலி ரசிகர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செல்பி மற்றும் ஆட்டோகிராப்களை கொடுப்பவர். ஆனால் அவரே ரசிகர் ஒருவரின் செயலால் அசௌகர்யமாக உணர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்து செல்பிக்கு நிற்கவிக்கிறார். தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற அவசரப்பட்ட விராட் கோலியின் கையைப் பிடித்து எதிர் திசையில் இழுத்து அந்த பெண்மணி செல்பி எடுத்துள்ளார்.
இதனால் அசௌகர்யமாக உணர்ந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் விராட் அந்த பெண்மணியின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த சம்பவமானது சமீபத்தில் மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கோலி கலந்துகொண்டபோது நடந்ததாகத் தெரிகிறது.
- எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
மராட்டிய மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியை சேர்ந்த எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பப்பு யாதவின் செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதில் பேசிய ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக இதுபோன்று பேசுவதை தவிர்க்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருந்தார்.
அதன் பிறகு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பப்பு யாதவ் எம்.பி.க்கு மீண்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யின் தனிப்பட்ட செயலாளர் முகமது சாதிக் ஆலமுக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில், பப்பு யாதவை கொலை செய்ய 6 நபர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது.
- மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா மாநில மக்கள்) ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் செய்த சதிகளை புரிந்து கொள்ள வேண்டும். நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது. மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது. அம்பேக்தரின் அரசியலமைப்பு மட்டுமே அங்கு செயல்படும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கான திட்டத்தை (agenda) இங்கு முன்வைக்க வேண்டாம். காஷ்மீருக்காக பிரிவினைவாத மொழிகளை பேச வேண்டாம்" என்றார்.
- கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலத்துடன் எனக்குள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியும். நான் மகாராஷ்டிராவிடம் ஏதாவது கேட்ட போதெல்லாம், அம்மாநில மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆசிர்வாதம் அளித்துள்ளனர்.
கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.
மக்களை நாங்கள் கடவுளின் மற்றொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களை கொள்ளையடிப்பதற்காக அரசியலில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, மகாராஷ்டிரா மக்களை கொள்ளையடிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிறது. காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி.
அரசியலில் இவர்களின் ஒரே நோக்கம் மக்களைக் கொள்ளையடிப்பதுதான். அந்த கூட்டணி கட்சியினர் அரசாங்கத்தை அமைக்கும் போது, அவர்கள் ஒவ்வொரு அரசாங்க கொள்கையிலும் வளர்ச்சியிலும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதை நீங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் 2½ ஆண்டு காலத்தில் பார்த்து உள்ளீர்கள். மகா விகாஸ் அகாடி என்பது சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் இல்லாத வாகனம், அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கையில் அமர சண்டை போடுகிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணி மக்கள், மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது.
பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி மட்டுமே மகாராஷ்டிராவின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்யும். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம் முக்கியம். அதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
எதிர்க்கட்சியினர் கண்ணிய குறைவான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அவர்கள் பெண்களை அவமதித்தும், துஷ்பிரயோகமும் செய்கிறார்கள்.
எங்களது அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அனைத்து சாதிகளும் பிரிந்து இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்கிறார்.
அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு பிற்பகல் நாசிக் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். அதன் பிறகு அவர் டெல்லி திரும்புகிறார்.
நாளை (சனிக்கிழமை) அவர் அகோலா, நந்தத் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மதியமும், பிற்பகலிலும் பிரதமர் மோடி பொகோரா மற்றும் கும்லா ஆகிய 2 ஊர்களில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அந்த 2 நகரங்களிலும் பிரமாண்டமான ரோடு ஷோவை அவர் மேற்கொள்கிறார்.
ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 12-ந்தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். அன்று அவர் சிமூர் மற்றும் சோலாபூர் நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.
12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை புனே நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்டமான ரோடுஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-ந்தேதி அவர் சம்பஜிநகர், ராய்காட், மும்பை நகரங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பிரதமர் 9 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். பிரதமர் மோடியை போலவே மத்திய மந்திரி அமித்ஷாவும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன. இதனால் அங்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
- மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர் இரட்டை சதமடித்து அசத்தினார்.
மும்பை:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் நடப்பு சாம்பியன் மும்பை- ஒடிசா (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஒடிசா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 123.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 233 ரன்களும், சித்தேஷ் லாத் 169 ரன்களும் குவித்தனர். ரகுவன்ஷி 92 ரன்னும், சூர்யன்ஷ் ஷெட்கே 79 ரன்னும் எடுத்துள்ளனர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. சந்தீப் பட்நாயக் 73 ரன்னும், தேபரதா பிரதான் 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.






