என் மலர்
மகாராஷ்டிரா
- அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.
இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.
- மகாராஷ்டிரா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
- அரசு முழு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
- அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.
இந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். துணை முதல்-மந்திரிகளாக அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிறிய வகை விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அஜித்பவாரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.
அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று பாராமதி தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் (வி.டி-எஸ்.எஸ்.கே.) பாராமதிக்கு புறப்பட்டார். அவருடன் 2 பாதுகாப்பு அதிகாரிகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்றனர்.
இன்று காலை 8.48 மணியளவில் அந்த சிறிய ரக விமானத்தை விமானி பாராமதி விமான நிலையத்தில் 11-வது ஓடுபாதையில் தரை இறக்க முயற்சித்தார். அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் மோதி 2 ஆக உடைந்து நொறுங்கியது. விமானம் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து அஜித்பவார் உள்பட 6 பேரையும் மீட்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித் பவார் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதே போல் அஜித்பவாருடன் சென்ற 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
- திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
- அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் அதிகாரி உயிரிழந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா நகரில் நேற்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற நிகழ்வில் மாநில கலால் துறையில் பணிபுரிந்து வந்த காவல் துணை ஆய்வாளர் மோகன் ஜாதவ் பங்கேற்றார்.
தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வரிசையில் மோகன் ஜாதவ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் உமர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விழாவின் போது அவர் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
- ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
- உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார்.
மத்திய அரசு நேற்று பத்ம விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோசியாரிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உத்தவ் தாக்கரே (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான MVA அரசை கவிழ்த்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சஞ்ச் ராவத் கூறுகையில் "பகத் சிங் கோஷியாரி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தார். உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார். உச்சநீதிமன்றம் கூட, அவரது பதவிக் காலத்தில் கோஷியாரி செயல் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டியது.
முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்பட மகாயுதி அரசு கூட, இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பகத் சிங் கோஷியாரி 2019 முதல் 2023 வரை மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தவர்களை மேலவை உறுப்பினராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும், சத்திரபதி சிவாஜி மகாராஜா பழைய காலத்து சின்னம் எனக் கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.
- சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்தது.
- ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது
மகாரஷ்டிராவின் மும்பையில் புறநகர் ரெயிலில் கல்லூரி பேராசிரியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அலோக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலந்த் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்கும்போது ரெயிலில் அவருடன் பயணித்த சக பயணி ஒருவர் அவரது வயிற்றில் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்ப்பியோடியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ரெயிலில் இருவருக்கும் இடையே சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக என்று தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
- ஜெய் மராட்டியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரே வுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
இந்த நிலையில் சிவ சேனாவை பாஜகவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக. நினைத்தால் அது தவறு. எங்களை பாஜகவால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பாஜக ஒருபோதும் மும்பை மாநகராட்சிையயோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது.
உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.
சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப் படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
- முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
- 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.
முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
- நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நாக்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் மற்றும் உள்ளூர் போட்டி சேர்த்து) இதுவரை 169 ஆட்டங்களில் ஆடி 5,002 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரஸலிடம் இருந்து (2,942 பந்தில்) தட்டிப் பறித்தார்.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.
- அபிஷேக் சர்மா 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
நாக்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ரிங்கு சிங் 20 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் தனி ஆளாகப் போராடி 40 பந்தில் 78 ரன்கள் குவித்தார். மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ்-சாப்மேன் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது எந்தத் தாய்க்கும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர், அத்தகைய ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
கோபால் சாவந்த் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
தனக்கு வேலை கிடைத்த செய்தியைத் தாயிடம் சொல்ல கோபால் அவர் கடை வைத்திருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்றார்.
தாய் காய்கறி விற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற கோபால், தனக்கு CRPF வேலை கிடைத்த விவரத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் அந்தத் தாய் தனது மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
வறுமை சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பது கோபால் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
- பாஜக கூட்டணி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- உத்தவ் தாக்கரே கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மும்பை மாநகராட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
227 கவுன்சிலர் வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 29 இடங்களை பிடித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 114 தேவை. ஆனால் பாஜக கூட்டணி 118 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக மேயர் பதவியை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.
அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (UBT) 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் எங்களுக்கு 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
தற்போது சிவ சேனா (UBT)- 65, மகாராஷ்டிலா நவநிர்மன் சேனா- 6, காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்- 24, ஏஐஎம்ஐஎம்- 8, சமாஜ்வாடி-2, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்-3, சரத் பவார் கட்சி-1 என எங்களுக்கு 108 இடங்கள் உள்ளன. இலக்கு 114. எங்களுக்கு இன்னும் 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள். மும்பை அரசியலில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.






