என் மலர்
நீங்கள் தேடியது "பத்ம பூஷன் விருது"
- ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
- உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார்.
மத்திய அரசு நேற்று பத்ம விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோசியாரிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உத்தவ் தாக்கரே (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான MVA அரசை கவிழ்த்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சஞ்ச் ராவத் கூறுகையில் "பகத் சிங் கோஷியாரி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தார். உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார். உச்சநீதிமன்றம் கூட, அவரது பதவிக் காலத்தில் கோஷியாரி செயல் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டியது.
முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்பட மகாயுதி அரசு கூட, இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பகத் சிங் கோஷியாரி 2019 முதல் 2023 வரை மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தவர்களை மேலவை உறுப்பினராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும், சத்திரபதி சிவாஜி மகாராஜா பழைய காலத்து சின்னம் எனக் கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.
- பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு.
- பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனை தான்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.
பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனை தான் என்றார்.






