என் மலர்
மகாராஷ்டிரா
- இங்கே உள்ள சிலர், குறிப்பாக இளைஞர்கள் எங்களை, எங்களது கட்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.
- விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு சம்பளம் வளங்குகிறோம். மேலும், அவர்களுடைய தந்தையர்களுக்கு பென்சன் வழங்குகிறோம்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள பர்துர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர். இவர் எங்களால்தான் உங்களுக்கு உடைகள், அணிகள், மொபைல்கள் உள்ளன எனப் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
பாபன்ராவ் லோனிகர் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாபன்ராவ் லோனிகர் பேசியிருப்பதாவது:-
இங்கே உள்ள சிலர், குறிப்பாக இளைஞர்கள் எங்களை, எங்களது கட்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகள், கான்கிரீட் சாலைகள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மண்டபங்கள் கொடுத்துள்ளோம். உங்கள் கிராமத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மூலம் நன்மைகளை கிடைத்துள்ளன.
விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு சம்பளம் வளங்குகிறோம். மேலும், அவர்களுடைய தந்தையர்களுக்கு பென்சன் வழங்குகிறோம். பிரதமர் மோடி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். லட்கி பெஹின் திட்டத்தின் மூலம் உங்களுடைய சகோதரிகள் பலன் பெறுகிறார்கள். உங்களிடம் (பாஜக விமர்சகர்கள்) இருக்கும் உடைகள், காலணிகள், மொபைல் போன்கள் எங்களால்தான்.
இவ்வாறு அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.
இதற்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல.
- அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியில் உள்ள அஜித் பவார் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
நாங்கள் எந்தவொரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பவர்களும் அல்ல. அதேவேளையில் எந்தவொரு மொழியையும் திணிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாஜக மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆளும்கட்சி மொழி எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
- 2 நாட்கள் நடந்த விழாவை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
- பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறப்படவில்லை.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள விதான் பவனில் இந்தியா முழுவதிலிருந்து வந்திருந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற மதிப்பீட்டுக்கு குழுவின் பவள விழா மும்பையில் உள்ள விதான் பவன் வளாகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இந்த விழாவை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. ரூ.500 மதிப்பிலான வெள்ளித்தட்டில் பரிமாறப்பட்ட உணவின் விலை ரூ.5 ஆயிரம் எனவும், ஒரு வேளை விருந்துக்கு ரூ.27 லட்சம் செலவானதாகவும் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் வெட்டிவார் கூறியிருப்பதாவது:-
மாநிலம் கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிலையில், மும்பையில் உள்ள மதிப்பீட்டுக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டுகளில் உணவு பரிமாற வேண்டிய அவசியம் என்ன?
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யாமல், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படாமல் பல நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமல் காலம் தாழ்த்து அரசு விருந்திற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது ஏன் என குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷவர்தனும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
ரூ.500 வெள்ளித்தட்டில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் விலை ரூ.4,500 என்றால் இந்த விருந்திற்கு மட்டும் ரூ.27 லட்சம் அரசு செலவழித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் கும்பார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிகழ்விற்கான விளம்பரத்திற்கு 40 அடி நீள பேனர், உறுப்பினர்கள் தங்குவதற்கு தாஜ் ஓட்டல், விருந்து சாப்பிட ஏ.சி. அறை என பொதுமக்களுக்கு சிக்கனத்தை சொல்லித் தர வேண்டிய குழுவே இத்தகைய ஆடம்பரமான செலவில் அரசின் பணத்தை செலவழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறப்படவில்லை. வெள்ளி முலாம் பூசப்பட்டத்தட்டுதான் எனவும், அதேபோல் உணவிற்கான விலை ரூ.5 ஆயிரம் அல்ல அதற்கும் குறைவுதான் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து எந்த முறையான தகவல்களும் அரசுத் தரப்பிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை.
- 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது.
- 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும்.
இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றன. இதன்மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளது.
மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1ஆம் வகுப்பு முதல் இந்தி கற்றுக்கொடுக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்ப தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தார். 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது. 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்கள் 1ஆம் வகுப்பில் இருந்து மராத்தி கற்க வேண்டும். சரளமாக படிக்கும், எழுதும் திறனை பெற வேண்டும்.
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
- காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது.
- ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லை.
இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் காட்டும் துணிச்சலை சிவசேனா உத்தவ் பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் பாராட்டினார்.
சுயமரியாதை மற்றும் தைரியம் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் காட்டியுள்ளது என்றும், மத்திய அரசு ஈரானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அமெரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், "நெருக்கடியின் அனைத்து நேரங்களிலும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்றுள்ளது. காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது. ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் யாருக்கும் பணிந்து போகவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லாததற்கு காங்கிரஸ் நேற்று கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
- ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார்.
- பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தை சேர்ந்த தோண்டிராம் போஸ்லே ஒரு பள்ளியின் ஆசிரியராக பணிபுரிகிறார். தோண்டிராமின் மகள் சாதனா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 92.60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என தந்தை முனைப்பு காட்டி வந்துள்ளார்.
எனவே 12 ஆம் வகுப்போடு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை தேர்வுக்கும் சாதனா தயாராகி வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.
இதனால், தோண்டிராம் மிகவும் கோபமடைந்தார். கடந்த சனிக்கிழமை இரவு மகளை திட்டியுள்ளார். மகள் எதிர்த்துப் பேசியதால் ஆத்திரம் தலைக்கேறிய தோண்டிராம், ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார். தாயுடன், சகோதரனும் தடுத்தும் அவர் தாக்குவதை நிறுத்தவில்லை.
பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்தநாள் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் வீடு திரும்பியபோது, தனது மகள் குளியலறையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். காயங்கள் காரணமாகவே அவரது உயிர் பிரிந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் தொண்டிராம் போஸ்லேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள மாநில அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தி கட்டாயமாக இருக்காது என்றும் பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், "ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மொழிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் மராத்தி மொழி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு ஒன்றாம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய உத்தரவு வந்துள்ளது.
- முதலில் கடை ஊழியர்கள் அவர்களை காசு கேட்டு வந்திருப்பார்கள் என்று எண்ணினர்.
- தனது கையில் இருந்த ரூ.1,120 கொடுத்து தாலி நகையை அவர் கேட்டார்.
காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 93 வயதான நிவ்ருதி ஷிண்டே தனது மனைவி சாந்தாபாய்க்கு தாலி நகை (மங்களசூத்திரம்) வாங்க ஒரு நகைக் கடைக்குச் சென்றார்.
சத்ரபதி ஷம்பாஜி நகரில் உள்ள கோபிகா நகைக் கடைக்குள், பாரம்பரிய உடையணிந்த நிவ்ருதி ஷிண்டே தனது மனைவியுடன் நுழைந்தபோது, முதலில் கடை ஊழியர்கள் அவர்களை, காசு கேட்டு வந்திருப்பார்கள் என்று எண்ணினர்.
ஆனால், தனது மனைவிக்கு நகை வாங்க வந்திருப்பதாக அவர் கூறியபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தனது கையில் இருந்த ரூ.1,120 கொடுத்து தாலி நகையை அவர் கேட்டார்.
முதியவரின் ஆழ்ந்த அன்பையும், அவர்களின் திருமண பந்தத்தையும் கண்டு நெகிழ்ந்த கடை உரிமையாளர், அவர்களிடமிருந்து வெறும் ரூ.20 மட்டுமே பெற்று நகையை பரிசளித்தார்.
இந்த மனதைத் தொடும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
- அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தன.
- வால்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், துணை மின் நிலையத்தில் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரெவாசா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிலர் துணை மின் நிலைய அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கும் எந்த பதிலும் இல்லாததால், அலுவலக மேசைக்கு தீ வைத்து, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் தளபாடங்களை எரித்து சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வல்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவவோம் என போலீஸ் தெரிவித்தனர்.
- வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
- காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
- பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒரு நபர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது. பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
- இவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார்.
- தனது வாழ்க்கையை நினைத்து புலம்பிய ராதிகா கணவரை கொலை செய்ய துணிந்தார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி. திருமணமான இவர் கடந்த மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, மனைவி சோனமின் சதித்திட்டத்தால் கூலிப்படை மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காதலரை கரம்பிடிக்க முடியாமல் போனதால் இவர் இந்த கொடூர கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக சோனம் மற்றும் 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் தணியாத நிலையில் மராட்டிய மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
இங்குள்ள சாங்கிலி மாவட்டம் குப்வாட் தாலுகாவில் வசித்து வந்தவர் அனில் லோகண்டே(வயது53). இவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து அனில் லோகண்டே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராதிகா என்ற 27 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதில் ராதிகாவுக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் அனில் லோகண்டே மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்தார். இதற்கு அவரது மனைவி எரிச்சலடைந்தார். அவர் தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே, கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனில் லோகண்டே உறங்க சென்று விட்டார்.
தனது வாழ்க்கையை நினைத்து புலம்பிய ராதிகா கணவரை கொலை செய்ய துணிந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணி அளவில் அனில் லோகண்டே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அப்போது ராதிகா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து படுக்கையில் இருந்த கணவரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது உறவினருக்கு போன் செய்து ராதிகா தெரிவித்தார். இதற்கிடையே தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அனில் லோகண்டேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை கொலை செய்த ராதிகாவை போலீசார் கைது செய்தனர். ராதிகாவின் விருப்பத்துக்கு மாறாக அவரது தந்தை வயதுள்ள அனில் லோகண்டேவுக்கு திருமணம் செய்து வைத்தார்களா?, கணவருடன் தாம்பத்தியம் நடத்த விருப்பம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறாமல், அவரை கொலை செய்ய துணிந்தது ஏன்? என்பது போன்ற தகவல்களை திரட்ட போலீசார், ராதிகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.






