என் மலர்
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவில் பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பாஜக அரசு பணிந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பாஜக மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்றுவரும் இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- டியூசனுக்கு போ எனத் தாய் தொடர்ந்து வற்புறுத்தியதால் வீட்டில் இருந்து வெளியேற்றம்.
- திடீரென 50ஆவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவலியில் இந்தி, குஜராத்தி டி.வி. நிகழ்ச்சியில் நடித்த முன்னணி நடிகை ஒருவர், அப்பார்ட்மென்ட் ஒன்றின் 51-ஆவது மாடியில் வசித்து வருகிறார். இவரது 14ஆவது வயது மகன் பள்ளியில் படித்து வந்துள்ளான்.
நேற்றிரவு 7 மணியளவில் நடிகை, தனது மகனிடம் டியூசனுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரது மகன் டியூசனுக்கு செல்ல தயங்கியுள்ளான். பலமுறை தாய் வற்புறுத்தியதால், வீட்டில் இருந்து வெளியேறியுள்ளான்.
51ஆவது மாடியில் இருந்து, 50ஆவது மாடிக்கு இறங்கி வந்த அவன், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
மகன் டியூசனுக்கு சென்றுவிட்டான் என நடிகை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வாட்ச்மேன் நடந்த சம்பவத்தை அவரிடம் சொல்லியுள்ளார். நடிகை வந்து பார்க்கும்போது மகன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தார்.
தற்செயலான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாக இருப்பதை அறிந்து கொண்டு கூரியர் டெலிவர் முகவர் போன்று சென்றுள்ளார்.
- கையெழுத்திட பேனா வேண்டும் என கேட்டு, அந்த பெண் திரும்பியதும் கதவை பூட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அடையாளம் தெரியாத நபர், கூரியர் டெலிவரி முகவர் போர்வையில், வீட்டிற்கு சென்று 22 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள கோண்ட்வா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், தனது சகோதரருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண்ணின் சகோதரர் வெளியில் சென்றுள்ளார்.
அப்போது சுமார் 7.30 மணியளவில், கூரியர் டெலிவரி முகவராக ஒருவர் வந்துள்ளார். இந்த பெண் வீட்டு கதவை தட்டியுள்ளார். அவரும் கதவை திறந்துள்ளார். அப்போது டெலிவரி முகவர் வேடத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணிடம் கையெழுத்து போட பேனா வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவருடம் பேனா எடுக்க திரும்பியபோது, நைசாக வீட்டிற்குள் நுழைந்து கததை பூட்டியுள்ளார்.
அதன்பின் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. சுமார் 8.30 மணியளவில் நினைவு வந்துள்ளது. அப்போதுதான் என்ன நடந்தது என்பதை அவரால் யூகிக்க முடிந்துள்ளது. உடனடியாக உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் காவல் நிலையத்திற்கு போன் செய்ய, போலீசார் அந்த நபரை தேடியுள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் தனது போனை எடுத்தபோது, அதில் அவருடன் இருக்கும் செல்பி போட்டோ ஒன்றை எடுத்து வைத்துள்ளார். மேலும், இது தொடர்பாக புகார் அளித்தால் எடுத்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என டைப் செய்து வைத்துள்ளார்.
அந்த நபர் பெண்ணுக்கு மயக்கம் அடையும் வகையில் ஏதாவது செய்திருக்கலாம். ஒருவேளை ஸ்பிரே பயன்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த நபரின் முகம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆண்டு விழா நடனத்திற்கு தயார் செய்யும்போது மாணவன் மீது ஒரு ஈர்ப்பு.
- அந்த மாணவனை தன் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40. குழந்தைகள் உள்ளன.
2023-ஆம் ஆண்டு அந்த மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த வருடம் டிசம்பர் மாதம் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்கான குழுவை அமைக்கும் பணியில் ஆசிரியை ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த மாணவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அந்த மாணவவை நோக்கி பாலியல் சைகைகளும் காட்டியுள்ளார்.
இதனால் அந்த மாணவன், பயந்து ஒதுங்கியுள்ளான். ஆசிரியையை சந்திப்பதை தவிர்த்துள்ளான். ஆனால் ஆசிரியை அந்த மாணவின் பெண் தோழிகளை பிடித்து (இவர்கள் பள்ளியில் படிக்கவில்லை) பேசுவதற்கு உதவி கேட்டுள்ளார்.
மேலும், அந்த மாணவரிடம், ஆசிரியையின் நண்பர்கள் வயதான பெண்களுடன், இளம் பையன்கள் தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது சகஜம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நீ, உனக்கு நீ என இருவரும் படைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியையை சந்திக்க மாணவன் முடிவு செய்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அந்த மாணவனை ஆசிரியை காரில் ஏற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவனது ஆடைகளை கழற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த மாணவன் பதற்றமான நிலையை உணரும்போது, அதற்கான மாத்திரிகைள் வழங்கியுள்ளார்.
மேலும், நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்து, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் வர, பெற்றோர் அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, மாணவன் தனக்கு நடந்த அவல நிலையை விவரித்துள்ளான். பையன் விரைவில் பள்ளி படிப்பை முடிக்கப் போகிறான். இந்த விசயத்தை அப்படியே மறைத்து விடுவோம். அதன்பின் ஆசிரியை பையனை தொடரமாட்டார் என நினைத்துள்ளனர்.
ஆனால் நிலையை மேலும் மோசமானது. மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறிய பின்னரும், அந்த ஆசிரியை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய வீட்டு வேலைக்காரர் மூலம் அந்த மாணவனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த மாணவின் பெற்றோர், போலீசை அணுகி புகார் அளித்துள்ளனர்.
போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
- விசாரணை நிறைவில், வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து 'ஐ லவ் யூ' சொன்னதாக தெரிகிறது. வீட்டுக்கு சென்ற சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் நாக்பூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதி ஊர்மிளா ஜோஷி விசாரித்து வந்தார். விசாரணை நிறைவில், வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த வழக்கில் 'ஐ லவ் யூ' என்று வாலிபர் தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த சூழலும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், அநாகரிகமான சைகைகள் செய்தல் அல்லது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது போன்றவை தான் பாலியல் நோக்கமாக இருக்க முடியும்.
இந்த வழக்கில் 'ஐ லவ் யூ' என்று சொன்னதில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது மானபங்கம் அல்லது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. யாராவது ஒருவர் வேறொரு நபரை காதலிப்பதாக கூறினால் அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், அதில் பாலியல் நோக்கம் இருக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை. எனவே வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
- மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
- வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிறுமியை கொள்ளையடித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு புனே மாவட்டத்தில் உள்ள பிக்வான் அருகே நடந்தது.
மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் சில நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தினார்.
ஓட்டுநர் காரில் இருந்து இறங்கியவுடன், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் அங்கு வந்தனர். அவர்கள் நேராக காருக்கு வந்து ஆயுதங்களைக் காட்டி உள்ளே இருந்த பெண்களை மிரட்டினர். அவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் உடலில் இருந்து தங்க நகைகளைப் பறித்தனர்.
நகைகளைத் திருடிய பிறகு அந்த நபர்களின் ஒருவன், காரில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பாலாஜியை பிரிந்து வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
- தனது கணவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அவரது மனைவி ஆவேசமாக கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ரத்தோட். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஆருஷி (வயது 4) என்ற மகள் உள்ளார். பாலாஜி ரத்தோட்டுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் சமீபகாலமாக மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
எனவே பாலாஜியை பிரிந்து வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மதியம் ஆருஷி சாக்லேட் வாங்க வேண்டும் என கூறி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி ரத்தோட் மகளை தாக்கியதோடு சேலையால் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வர்ஷா அளித்த புகாரின் பேரில் பாலாஜி ரத்தோட் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். தனது கணவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அவரது மனைவி ஆவேசமாக கூறினார்.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
- 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார்.
- பாலியல் தொழிலாளர்கள் உட்பட பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள்' இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, போலி பாபா பீம்ராவ் ஆன்மீகம் என்ற போர்வையில் பாவ்தான் பகுதியில் செயல்பட்டார். தெய்வீக சக்திகளைப் பெற்றதாகக் கூறி, பக்தர்களிடம் "நீங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களில் இறந்துவிடுவீர்கள்" என்று அவர்களை ஏமாற்றி, மனதளவில் பலவீனப்படுத்தினார்.
புனித மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பக்தர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொலைபேசிகளைக் கேட்பார். பின்னர் அவர் 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து போலி பாபா அணுக முடிந்தது.
இந்த செயலியைப் பயன்படுத்தி, போலி பாபா பக்தர்களை அழைத்து, அவர்களின் உடைகள், இருப்பிடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரிப்பார். இதன் அவர் மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் வளர்ப்பார்.
அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, மரணத்திலிருந்து தப்பிக்க ஒரு தீர்வாக காதலி அல்லது பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சில இளம் ஆண் பக்தர்களுக்கு பாபா அறிவுறுத்தினார்.
அவர்களின் மொபைல் போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க தருணங்களை தொலைபேசி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து அதை ரசியுள்ளார் பாபா.
இளம் பக்தர்களில் ஒருவர் தனது தொலைபேசி தொடர்ந்து சூடாகி வருவதைக் கவனித்தார். அவர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தார், அவர் அதை மடிக்கணினியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து சந்தேகத்திற்கிடமான மறைக்கப்பட்ட செயலியைக் கண்டுபிடித்தார்.
யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பாபா மட்டுமே சமீபத்தில் தனது தொலைபேசியைக் கையாண்டதாக பாதிக்கப்பட்டவர் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாபா மீது 3 புகார்கள் வந்தன.
போலி பாபா தாம்தார் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம், 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி, கிர்கான் சௌபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் பேரணியில் இருவரும் பங்கேற்பார்கள்.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜும் உத்தவும் இணைகிறார்கள். சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்திற்காக கைகோர்ப்பதாக அண்மையில் சூசகமாக தெரிவித்தனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- 3,676 அடி உயரத்தில் ஹரிஹர் கோட்டை அமைந்துள்ளது.
- 60-70 டிகிரி கோணத்தில் செதுக்கப்பட்ட 200 அடி உயரப் பாறைப் படிக்கட்டுகளுக்காகப் பிரபலமானது.
இந்தியாவின் ஆபத்தான மலையேற்றத் தளங்களில் ஒன்றாக அறியப்படும் மகாராஷ்டிராவின் ஹரிஹர் கோட்டையில் சமீப காலமாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
3,676 அடி உயரத்தில் ஹரிஹர் கோட்டை அமைந்துள்ளது, 60-70 டிகிரி கோணத்தில் செதுக்கப்பட்ட 200 அடி உயரப் பாறைப் படிக்கட்டுகளுக்காகப் பிரபலமானது. இந்த படிக்கட்டுகள் மிகக் குறுகலாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏறுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஆபத்தான படிக்கட்டுகளில் மக்கள் நெருக்கமாக ஏறுவதும், சில சமயங்களில் விளிம்புகளில் சிறிய இடம்கூட இல்லாமல் நிற்பதும், அமர்வதும் தெரிகிற்து. இது பெரும் விபத்துக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.
"மற்றொரு பெரிய சம்பவம் நடக்க காத்திருக்கிறதா? ஹரிஹர் கோட்டை வார இறுதி கூட்ட நெரிசல் ஒரு மரணப் பொறியாகும்! இது தடுக்கப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் ஒரு சிறிய கூட்ட நெரிசல் அல்லது யாராவது சமநிலையை இழந்தால், அது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும் - நூற்றுக்கணக்கானோர் மரணமடைவார்கள்," என்று அந்த பயனர் எச்சரித்துள்ளார்.
நாசிக்கில் உள்ள வனத்துறை இந்த கோட்டையை கட்டுப்படுத்தி, வருவோரிடம் கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் ஒரு நாளைக்கு 300 பார்வையாளர்கள் வரம்பு நிர்ணயித்திருந்தனர், ஆனால் அது அமல்படுத்தப்படவில்லை.
பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்திற்குப் பிறகு, இந்த ஹரிஹர் கோட்டை சம்பவம் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
- மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
- சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். செல்வாக்கு மிகுந்த இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஐதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர்.
இந்த குடும்பத்தினருக்கு பல கோடி மதிப்பிலான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா எம்.பி.சந்தீபன்ராவ் பூம்ரேவிடம் டிரைவராக ஜாவேத் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிராவில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை சலார்ஜன் குடும்பத்தினர் பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கான ஆவணத்தையும் டிரைவர் ஜாவேத்திடும் கொடுத்துள்ளனர்.
எம்.பி.யின் டிரைவருக்கு திடீரென செல்வாக்கு மிகுந்த குடும்பத்தினர் ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், புலனாய்வாளர்கள் கேட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன் சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவு உள்ளன, எனவே அவர்கள் அந்த நிலத்தை எனக்கு பரிசாக அளித்தனர்," என்று டிரைவர் கூறினார்.
ஜாவேத் எங்கள் டிரைவர் என்றாலும், அவர் செய்யும் எல்லாவற்றின் மீதும் எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. எப்படியிருந்தாலும், ஹிபனாமா என்பது சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று எம்.பி.யின் மகன் கூறினார்.
வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.






