என் மலர்
கேரளா
- பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாஜன சபா என்ற பேரணி மற்றும் கூட்டம் திருச்சூரில் நடந்தது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள 25,177 வாக்குச்சாவடிகளின் பிரதி நிதிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பங்கேற்றார்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அரசால் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து செயல்படும் பொருளாதாரத்தை அவர் கற்பனை செய்தார்.
ஆனால் இன்று மோடி தலைமையிலான அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறைகள் நலிவடைந்தால் அதை மீட்டுக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் பொதுத்துறையை அழித்து தனியார் துறையை பலப்படுத்துவதில் மோடி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் கொள்கைகள் சிறுபான்மையினர் மற்றும் பெண்களை அதிகமாக பாதித்துள்ளது. மோடியின் அரசு மாநில அரசுகளை துன்புறுத்துவது மட்டுமின்றி, ஏழை மக்களையும் பெண்களையும் நசுக்குகிறது.
மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிராக 51 குற்றங்கள் பதிவாகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது.
மணிப்பூரில் நடந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நாட்டை அவமானப்படுத்தி உள்ளன. அங்கு 9 மாதங்களாக நடந்துவரும் வன்முறைகளுக்கு பிறகும், நிலைமையை தணிப்பதிலும், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கான சூழலை மீண்டும் ஏற்படுத்துவதிலும் பாரதிய ஜனதா அரசு தோல்வியடைந்துள்ளது.
பிரதமருக்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவும், ஒருநாள் விட்டு ஒருநாள் உரை நிகழ்த்தவும் நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நேரமில்லை.
லட்சத்திவில் விடுமுறைக்காகவும், படங்களை கிளிக் செய்யவும் நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவருக்கு நேரம் இல்லை. இதன்மூலம் பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் கட்சி இருந்த போதெல்லாம் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், சமூகநலம், கல்வி மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்துள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.
கேரள மக்கள் எப்போதுமே கொள்கைகள், ஏழைகளின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அரசியல மைப்புக்காக நிற்கிறார்கள். எனவே கேரளாவை வென்றால் இந்தியாவை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.
- கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்:
இந்தியாவின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதியை அனைத்து கட்சிகளுமே மிகவும் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கின்றன. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று அனைத்து கட்சிகளும் ஆலோசித்து வருகிறது.
கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறையும் அவரே போட்டியிட உள்ளார். அவர் கடந்த தேர்தலில் வயநாடு மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
அங்கு தோற்றுவிட்ட நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த முறை ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என குறிப்பிட்டிருந்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. கிளை செயலாளர் அஸ்வின், குன்னங்குளம் போலீசில் புகார் கொடுத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.) கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியையாக இருப்பவர் ஷைஜா ஆண்டவன். இவர், பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. கிளை செயலாளர் அஸ்வின், குன்னங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பேராசிரியை ஷைஜா ஆண்டவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
- அப்போது, பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
நாட்டின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.
பேச்சின் முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள், சந்தேகம் உள்ளதா என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.
அதன்பின், அவர் திரும்ப திரும்ப முழக்கத்தைச் சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என காட்டமாக கூறினார்.
தொடர்ந்து அவர், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த அனைவரும் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
- தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.
தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.
இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.
இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
- திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.
அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
- வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறை பகுதியில் தனத காதலனுடன் சென்ற 14 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. உடனிருந்த காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த 6 பேரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சந்தப்பரா போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நெல்லையை சேர்ந்த சுகந்த்(வயது20), போடியை சேர்ந்த சிவகுமார்(21), பூப்பாறையை சேர்ந்த சாமுவேல் என்கிற ஷியாம் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.
அவர்களின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தேவிகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சுகந்த், சிவகுமார், சாமுவேல் ஆகிய 3 பேருக்கும் 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிராஜூதீன் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறுவர்கள் இருவர் மீதான விசாரணை தொடுபுழா சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
- ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
- பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
உலகில் வாழும் பல்வேறு உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
5.5 முதல் 8 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய வகை பச்சோந்தி, அகஸ்தியாகம எட்ஜ் என கூறப்படுகிறது. இதற்கு வடக்கு கங்காரு பச்சோந்தி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் 12 ஆயிரம் ஊர்வனவற்றில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வடக்கு கங்காரு பச்சோந்தி, தொண்டையில் நீல செதில்களுக்கு மத்தியில் மத்திய சிவப்பு மற்றும் தங்க நிறத்தால் மற்ற பச்சோந்திகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறது.
மரத்தில் ஏறுவதை தவிர்த்து, உலர்ந்த இலைகளுக்கு மத்தியில் வடக்கு கங்காரு பச்சோந்தி தரையில் வாழ்வதாகவும், ஆபத்தை உணரும்போது, 2 கால்களில் நிற்கும் இலைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்ளும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.
- எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக்குழுவில் நீலகிரியைச் சேர்ந்த அஜித், புன்னப்பராவை சேர்ந்த அகில் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
நேற்று இவர்கள் சீத்தாத்தோடு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்தினர். அதிகாலை வரை இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.
இன்று காலை 6.45 மணியளவில் பத்தனம் திட்டா-கோழஞ்சேரி சாலையில் வந்த போது, எதிரே தமிழகத்தில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிய டெம்போ வந்தது.
எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இசைக்குழுவைச் சேர்ந்த அஜித், அகில் ஆகிேயார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
- திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.
தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.
20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று கொல்லம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார்.
- அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் கொல்லம் பகுதியில் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, ஆளுநர் ஆரீப் முகமது கான் காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். நான் இங்கு தான் இருப்பேன். போதிய பாதுகாப்பு வழங்குங்கள் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆர்ப்பாட்டத்தில் முதலில் 12 பேர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் 17 பேர் என எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு இருந்தனர்.
அந்த வழியாக முதல் மந்திரி சென்றால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் 22 பேர் கருப்புக் கொடியுடன் கூடிவிடுவார்களா?
அவர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது யார்? இது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் யார்? அது முதல் மந்திரியா? இதனால் எல்லாம் நான் துவண்டு போகக்கூடியவன் அல்ல என காட்டாமாக தெரிவித்தார்.






