என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இசைக்குழுவினர் வாகனம், தமிழக காய்கறி வேன் மோதி விபத்து- 2 பேர் பலி
ByMaalaimalar29 Jan 2024 5:27 AM GMT (Updated: 29 Jan 2024 6:37 AM GMT)
- இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.
- எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக்குழுவில் நீலகிரியைச் சேர்ந்த அஜித், புன்னப்பராவை சேர்ந்த அகில் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
நேற்று இவர்கள் சீத்தாத்தோடு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்தினர். அதிகாலை வரை இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.
இன்று காலை 6.45 மணியளவில் பத்தனம் திட்டா-கோழஞ்சேரி சாலையில் வந்த போது, எதிரே தமிழகத்தில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிய டெம்போ வந்தது.
எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இசைக்குழுவைச் சேர்ந்த அஜித், அகில் ஆகிேயார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X