என் மலர்tooltip icon

    கேரளா

    • கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்.
    • பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் இது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எக்ஸ் தளத்தில், பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் என பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பால் 34 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ டீத்தூள் 143 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 284 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ சர்க்கரை 30 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 413 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 903 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இஞ்சி 63 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ ஏலக்காய் 557 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 1113 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • 'சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று எழுதியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் செவ்வாபதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது51). இவர் சமீபத்தில் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிரபலமான மார்க்கம்களி கலைவிழாவின் போட்டி நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

    அந்த போட்டியில் முடிவுகளை அறிவிக்க லஞ்சம் வாங்கியதாக ஷாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷாஜி உள்ளிட்ட 3 பேர் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து கலைவிழா போட்டி முடிவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் நிறுத்தி வைத்தார்.

    மேலும் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்காக ஷாஜி உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் ஷாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் உள்ளிட்ட 3 பேரையும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் ஷாஜி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று இரவு பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர்.

    அதில் ஷாஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற ஷாஜி, அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நான் நிரபராதி, யாரிடமும் பணம் வாங்கவில்லை, நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். இதற்கு சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்' என்று எழுதியிருந்தார்.

    லஞ்ச புகாரில் சிக்கியவர் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண்டக்டரின் உருவப்படத்தை ஆசிக் தனது டிக்கெட்டில் அசத்தலாக வரைந்து கண்டக்டரிடம் கொடுக்கிறார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஆசிக்கின் திறமைகளை பாராட்டி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    கலைஞர்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறந்த தளமாக சமூக வலைத்தளங்கள் விளங்கி வருகின்றன. அந்த வகையில் ஆசிக்பாண்டிக்காட் என்ற கலைஞரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் அவர் பஸ் கண்டக்டரிடம் இருந்து பயண டிக்கெட்டை பெறும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கண்டக்டரின் உருவப்படத்தை ஆசிக் தனது டிக்கெட்டில் அசத்தலாக வரைந்து கண்டக்டரிடம் கொடுக்கிறார். அதைப்பார்த்த கண்டக்டர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஆசிக்கின் திறமைகளை பாராட்டி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.



    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர்.
    • திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார்.

    புதுடெல்லி:

    மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை தயாரித்துள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

    திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ் மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்.ஐ.ஆர்.வி) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டது.

    அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் (வளிமண்டலத்துக்குமேல்) செலுத்தப்படும். இது பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும்.

    இது 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது. இந்த சோதனையின் மூலம், எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். அந்த குழுவை வழிநடத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீனா ராணி ஆவார். அவர் டி.ஆர்.டி.ஓ.வின் ஏஸ் லேப் ஏ.எஸ்.எல்-ன் இணை இயக்குநராகவும் உள்ளார்.

    திருவனந்தபுரம் சி.இ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் என்ஜினீயரிங் படித்த இவர், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைகளுக்கு பிறகு 1999-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ.வில் புதிதாக சேர்ந்தார்.

    அன்றிலிருந்து நாட்டின் அக்னி ஏவுகணை திட்டத்திற்காக பணியாற்றி வருகிறார். அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    தேசத்தின் எல்லைகளை ஏவுகணைகள் பாதுகாப்பதால் அக்னி ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் ஏவுகணை ஏவுதலுக்கு தயாரானபோது எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது போல் இருந்தது.

    ஆனால் பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது மற்றும் எனது சகோதரியின் வாழ்வில் என் அம்மா தான் உண்மையான தூண்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். அவரது கணவரும் டி.ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்தவர். ஷீனா ராணி கடந்த 2016-ம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.

    • சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.
    • ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கிவிட்டது. அங்குள்ள 16 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுவோரின் விவரங்களை அறிவித்துள்ளது.

    அது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது கட்சி சார்பில் களம் காண இருப்பவர்கள் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரே மக்களவை தொகுதியில் 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட உள்ளனர்.

    இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

    ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தான் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை மக்களவை தொகுதியில் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

    அவர்கள் இருவருமே சட்டப் பேரவை தேர்தலின் போது மக்களால் அங்கீகரித்து கொண்டாடப்பட்டவர்கள் ஆவர். அதிலும் முன்னாள் மந்திரி கே.கே. ஷைலஜா மத்தனூர் சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

    மேலும் கொரோனா, நிபா வைரஸ் பரவிய காலக்கட்டத்தில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த ஷைலஜா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு மக்களவை தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் இருவர் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

    • பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை நாளை (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவில் நடை சாத்தப்படும்.

    பின்பு மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதிஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.

    அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
    • பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் மற்றும் ரோடு-ஷோ செல்லும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத்துக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்கி விட்டன. கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது.

    மீதமுள்ள வேட்பாளர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வருகிறார். அவர் வருகிற 15-ந்தேதியன்று பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளிலும், 17-ந்தேதியன்று பத்தினம்திட்டாவிலும் பிரசாரம் செய்வார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது பிரதமரின் பிரசார தேதி மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் பிரதமர் மோடி திட்டமிட்டபடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் 15-ந்தேதி பத்தினம் திட்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    பின்பு 19-ந்தேதியன்று பாலக்காட்டில் பிரசாரம் செய்கிறார். அவர் பாலக்காட்டில் அரசு மோயன் பள்ளி வளாகத்தில் இருந்து கோட்டை மைதானம் அஞ்சு விளக்கு பகுதி வரை ரோடு-ஷோ செல்கிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அவர் பேசும் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் மற்றும் ரோடு-ஷோ செல்லும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து கேரளாவுக்கு வந்து சென்ற படி இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் வர இருப்பது அம்மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
    • மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    "குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது.
    • பிரதமர் மோடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்றத்துக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்கி விட்டன.

    கேரளாவில் 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துவிட்டது. மீதமுள்ள வேட்பாளர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வருகிறார்.

    அவர் வருகிற 15 மற்றும் 17 தேதிகளில் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் 15-ந்தேதியன்று பாலக்காடு மற்றும் ஆலத்தூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அவர் அங்கு நடக்கும் ரோடு-ஷோவில் பங்கேற்று மக்களை நேரடியாக சந்தித்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    17-ந்தேதியன்று பத்தினம்திட்டாவில் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடுத்தடுத்து கேரளாவுக்கு வந்து சென்றபடி இருக்கும் நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் வர இருப்பது கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் 14 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். திருச்சூர் தொகுதியில் வி.முரளீதரன் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், கேரள மாநிலத்தின் ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்று தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.சி.வேணுகோபால் இன்று ரோடு ஷோவில் கலந்துகொண்டார். தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி வேனில் நின்றபடி பயணம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.

    • போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×