என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல்: ஆலப்புழாவில் பிரசாரத்தை தொடங்கியது காங்கிரஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல்: ஆலப்புழாவில் பிரசாரத்தை தொடங்கியது காங்கிரஸ்

    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. இந்தப் பட்டியலில் 14 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். திருச்சூர் தொகுதியில் வி.முரளீதரன் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், கேரள மாநிலத்தின் ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்று தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.சி.வேணுகோபால் இன்று ரோடு ஷோவில் கலந்துகொண்டார். தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி வேனில் நின்றபடி பயணம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.

    Next Story
    ×