search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KK Shailaja"

    • தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
    • கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.

    கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.
    • ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கிவிட்டது. அங்குள்ள 16 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுவோரின் விவரங்களை அறிவித்துள்ளது.

    அது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது கட்சி சார்பில் களம் காண இருப்பவர்கள் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரே மக்களவை தொகுதியில் 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட உள்ளனர்.

    இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

    ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தான் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை மக்களவை தொகுதியில் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

    அவர்கள் இருவருமே சட்டப் பேரவை தேர்தலின் போது மக்களால் அங்கீகரித்து கொண்டாடப்பட்டவர்கள் ஆவர். அதிலும் முன்னாள் மந்திரி கே.கே. ஷைலஜா மத்தனூர் சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

    மேலும் கொரோனா, நிபா வைரஸ் பரவிய காலக்கட்டத்தில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த ஷைலஜா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு மக்களவை தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் இருவர் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

    ×