என் மலர்
கேரளா
- மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
- இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படு கிறது.
இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
- தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
- குடத்திற்குள் 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன.
கொச்சி:
கேரள மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டினர். தோட்டத்தின் ஒரு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை பார்த்தனர். அதை தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். இருப்பினும் அது வெடிகுண்டாக இருக்கலாம் என பயந்துபோன தொழிலாளர்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவில்லை.
இதுகுறித்து கண்ணூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து குடத்தை சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் குடத்தை திறந்து பார்த்தபோது, அதற்குள் புதையல் இருப்பது கண்டறியப்பட்டது.
குடத்திற்குள் 17 முத்து மணிகள், 13 தங்க பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் புதையல் பொருட்களை நேரில் பார்வையிட திரண்டனர். இதையடுத்து போலீசார் அந்த பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தளிப்பரம்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. தகவல் அறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
- முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.
- கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் இன்று மாநிலத்தில் கனமழை பெய்தது. பத்தனம்திட்டா, பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இரவு 9 மணி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (14-ந் தேதி) இரவு 11.30 மணி வரை கேரள மற்றம் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது ராட்சத அலைகள் வீசக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து.
- இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.
லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல், துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்றும், சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
"லிவிங் டு கெதர் உறவில் பங்குதாரர் என்று மட்டுமே கூற முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது" என்று எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், குடும்ப வன்முறை செய்ததாக, இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும்.
- பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
சின்னமனூர்:
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும். கேரளாவில் தொடங்கி மஹாராஷ்டிரா வரை நீண்டுள்ள இந்த மலைப்பகுதி அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் மழை வளத்துக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
இங்கு பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷோலோ காடுகளின் மீதான ஆர்வலர்கள் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 'டெயில்-ஸ்பாட் ஷீல்டு டெயில்' எனப்படும் அரிய வகை பாம்பை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் தெரிவிக்கையில், பாம்புகள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை பூமிக்கடியில் கழிப்பதகவும், மழைக்காலத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியில் வருவதாகவும் தெரிவித்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியிலும், மேகமலை-மூணாறு மலைப்பகுதியிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட பாம்புகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் மீது 3 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் டி.என்.ஏ. தரவுகளுடன் பல அருங்காட்சியக மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்ததில் இங்கு இருப்பது அரிய வகை பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைக்கப்பட்ட பன்முகத் தன்மையை இந்த பாம்பு வகை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் ஊர்வன விலங்குகள் மாறுபட்ட தன்மை கொண்டதாகும். 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளூர் இனங்களும், அகாசியா, லந்தானா, வாட்டில் போன்ற அன்னிய ஊர்வன விலங்குகளும், மலை சார்ந்த பகுதிகளில் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
பாம்புகளில் விஷத்தன்மை கொண்டது, விஷத்தன்மை இல்லாதது என இருந்தபோதும், இவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டும் 15 வகை புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.
- குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவில். இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அதிகளவில் வருகிறது.
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எவ்வளவு வைப்புத்தொகை மற்றும் நிலம் இருக்கிறது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. அதில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலமும், ரூ2,053கோடி வைப்புத் தொகையும் இருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது. கோவிலின் பெயரில் உள்ள நகைகள் மற்றும் 271 ஏக்கர் நிலத்தின் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக இருக்கும் ரூ.2,053-கோடியில் கேரள வங்கியில் உள்ள ரூ.176 கோடியும் அடங்கும்.
குருவாயூர் கோவில் வைப்புத்தொகை 2 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக ரூ.41.74 லட்சம் இருப்பாகவும், தங்கம் 227.82 கிலோ மற்றும் வெள்ளி 2,994 கிலோ உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர்.
- குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
சபரிமலைக்கு வெகு தூரம் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக், சம்பத்குமார் ஷெட்டி. சனத்குமார் நாயக் புகைப்பட கலைஞராகவும், சம்பத்குமார் குஷன் தொழிலாளியாகவும் வேலை பார்க்கின்றனர்.
ஐயப்ப பக்தர்களான இவர்கள் ஆண்டுதோறும் காசர்கோட்டில் இருந்து சபரிமலைக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த முறை தங்களின் பாதயாத்திரை தூரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். பத்ரிநாத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கேரளாவில் இருந்து பத்ரிநாத்துக்கு சென்றனர்.
பின்பு அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரையை தொடங்கினார்கள். அங்கிருந்து நடைபயணமாக அயோத்திக்கு சென்றார்கள். அவர்கள் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்றபடி தங்களின் பாத யாத்திரையை தொடருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர். இரவில் ஏதாவது ஒரு கோவிலில் தங்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து, அதன்படி பாத யாத்திரையை தொடர்கின்றனர். குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.
அங்கிருந்து கேரளாவுக்கு பயணம் செய்கிறார்கள். மொத்தம் 7 மாதங்கள் நடைபயணத்தை தொடர உள்ளனர். மொத்தம் 8ஆயிரம் கிலோமீட்டரை கடந்து சபரிமலைக்கு வந்து சேருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக குட்லுவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து விரதம் இருந்து வந்த நிலையில் சனத்குமார், சம்பத்குமார் ஆகிய இருவரும் தற்போது பாதயாதத்திரையை தொடங்கியிருக்கின்றனர்.
- காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
- டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.
தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.
தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.
அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.
அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.
கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
- கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.
அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.
ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.
திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.
கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
- பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர்.
- போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆடுஜீவிதம்' உள்ளிட்ட படங்கள் வெற்றிபெற்றன. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.
இதனால் இந்த படங்கள் கோடிக்க ணக்கில் வசூலை குவித்தன. இந்த படங்களின் வரிசையில் நடிகர் பகத் பாசில் நடித்த 'ஆவேசம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.
ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பகத் பாசில் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் நடித்திருந்தது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.50 கோடிக்குள் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் 'ஆவேசம்' படத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சி பிரபலமாக பேசப்பட்டது.
மிகவும் பிரமாண்டமாக நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது போன்று எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியை பார்க்கும் போதே நமக்குள் ஒருவித உற்சாகம் பிறப்பதை உணர முடியும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் 'ஆவேசம்' படத்தில் இடம்பெற்றுள்ள பிறந்தநாள் பார்ட்டியை போன்று பிறந்தநாள் கொண்டாடிய ஒரு கும்பலை போலீஸ் படை சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி கும்பலின் தலைவன் தீக்கட்டு சஜன். இவரது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி 'ஆவேசம்' படத்தில் வருவது போன்று பிறந்தநாளை மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
அதன்படி திருச்சூர் அருகே உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் தீக்கட்டு சஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருந்தது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், கூட்டாளிகள் என ஏராளமானோர் தேக்கிங்காடு மைதானத்தில் திரண்டனர். 'ஆவேசம்' பட பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருந்தது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க இருந்த மைதானத்தை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு திரண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களை போலீசார் தப்பிச்செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.
பின்பு அவர்களில் 32 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியதால் தீக்கட்டு சஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தங்களது திட்டத்தை முறியடித்ததால் ஆத்திரமடைந்த தீக்கட்டு சஜன் திருச்சூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம், கிழக்கு மற்றும் மேற்கு போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீக்கட்டு சஜன் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவு களின் கீழ் வழக்குப் பதிந்தனர். தலை மறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
- பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொண்டோட்டி பகுதியில் சாலையில் முந்திச் செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநருக்கு, அரிவாளை எடுத்துக் காட்டிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கொண்டோட்டி பகுதியை நெருங்கியது. அப்போது ஒரு ஆட்டோ நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றதால் பேருந்து ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சம்சுதீன், அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் கோவமான சம்சுதீன் அரிவாளை எடுத்து காட்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்க தொடங்கிவிட்டது.
- மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துவிட்டது மற்றும் வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.
கேரளாவில் அவர்களது அடுத்த இலக்கு நடைபெற உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலாக இருக்கிறது.
மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தலும் பா.ஜ.க.வின் இலக்காக உள்ளது.
இந்த தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்கான வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருடனான மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.
நாளை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பஞ்சாயத்து கமிட்டி அளவிலான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.
நட்டா வருகையால் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.






