"லிவிங் டுகெதர்" திருமணம் ஆகாது- கேரள உயர்நீதிமன்றம்

துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து.இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.
"லிவிங் டுகெதர்" திருமணம் ஆகாது- கேரள உயர்நீதிமன்றம்
Published on

லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல், துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்றும், சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

"லிவிங் டு கெதர் உறவில் பங்குதாரர் என்று மட்டுமே கூற முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது" என்று எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், குடும்ப வன்முறை செய்ததாக, இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com