என் மலர்
கர்நாடகா
- ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
- கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது.
- பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சிறுமிகளை போன்று சிறுவர்களுக்கு எதிராகவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கடந்த 2021-ம் ஆண்டு வெறும் 88 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 102 வழக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு (2023) கர்நாடகம் முழுவதும் சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 144 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டுக்கு, ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 178 வழக்குகள் பதிவாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்குகள் வெறும் 34 மட்டுமே குறைவாகும். குறிப்பாக மாநிலத்தில் பெங்களூரு, உடுப்பி, ஹாசன் மாவட்டங்களில் தான் அதிகளவு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதன்படி, பெங்களூருவில் 15 வழக்குகளும், ஹாசன் மாவட்டத்தில் 11 வழக்குகளும், உடுப்பியில் 10 வழக்குகளும் மங்களூரு டவுனில் 5 வழக்குகளும், துமகூருவில் 6 வழக்குகளும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 7 வழக்குகளும், சிவமொக்காவில் 8 வழக்குகளும், சிக்பள்ளாப்பூர், கேலார், விஜயாப்புரா, ராமநகர், விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 வழக்குகளும், மற்ற மாவட்டங்களில் ஒன்று, இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், பள்ளி ஆசிரியர்களும், வீட்டு வேலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு உரிமையாளர்களும், சில நேரங்களில் பக்கத்து வீட்டு பெண்களும், உறவினர்களும் தான் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இன்னும் பாதிக்கப்பட்ட நிறைய சிறுவர்கள் புகார் அளிக்காமல் சம்பவத்தை மூடி மறைத்து விடுவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், இது ஒரு தீவிரமான விஷயமாகும். பாலியல் தொல்லைக்கு உள்ளாகுபவர்கள் யாராக இருந்தாலும், அதனை தடுக்க வேண்டியது அவசியம்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து உடனடியாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் எனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
- வேட்பாளர் நிகில் குமாரசாமி பிரசாரத்தின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
- 2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மனுத்தாக்கல் கடந்த 25-ந் தேதி நிறைவடைந்தது.
இதில் சென்னபட்டணாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் நிகில் குமாரசாமி, சிக்காவியில் பா.ஜனதா சார்பில் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் முகமது யாசிர் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் அன்னபூர்ணா துகாராம், பா.ஜனதா சார்பில் பங்காரு ஹனுமந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா, ஜே.டி.எஸ். ஆகிய 3 அரசியல் கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.
குறிப்பாக ஆளும் கட்சியான காங்கிரஸின் 3 தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெறும் பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் படுதோல்வி அடைந்தால் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சன்னபட்டனா தாலுகா கண்ணமங்களா கிராமத்தில் நேற்று பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரணும், முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் மகனுமான வேட்பாளர் நிகில் குமாரசாமி தனது பேச்சின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
2 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நான் என்ன தவறு செய்தேன்? என தெரியவில்லை என கண்ணீர் விட்டு அழுதார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
- மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பெங்களூரு:
வளிமண்டல சுழற்சி காரணமாக பெங்களூரு, குடகு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு ஆர்.ஆர்.நகர், கெங்கேரி, விஜயநகர், ராஜாஜிநகர், பேடராயனபுரா, சந்திரா லே-அவுட், ஞானபாரதி, நாகரபாவி, மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், ஜெயநகர், பாகலூர் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சுரங்க பாதைகள், ரெயில்வே சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சும்மனஹள்ளி ஜங்ஷன், பாகலூர் கிராஸ், ஓசூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மழையின் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பட்டாசுகள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சிட்டி மார்க்கெட்டில் பெய்த மழையின் காரணமாக அங்கு காய்கறி, பூக்கள், பழங்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
விஜயநகர் ஹர்பனஹள்ளி, ஹாவேரியில் தலா 4 செ.மீ. மழை, தார்வாட்டில் உள்ள தரிகெரே, சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரே, தும்கூர் மாவட்டம் திபட்டூர், ஷிமோகா மாவட்டம் பத்ராவதி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் 3-ந்தேதி வரை ஷிமோகா, ராமநகர், மைசூரு, மாண்டியா, குடகு, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
- எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை.
கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்கி வரும் "சக்தி திட்டத்தை" மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
சக்தி திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, "அரசுக்கு அப்படி எந்த முன்மொழிவும் இல்லை. அவர் (சிவகுமார்) சில பெண்கள் சொல்வதை மட்டுமே கூறினார். எனக்குத் தெரியாது, நான் அங்கு இல்லை, நான் பேசுகிறேன்..," என்று பதில் அளித்தார்.
பல பெண்கள் பயணத்திற்கு பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு இலவச பயணம் வேண்டாம் என்றும் எக்ஸ் தளத்தில் டேக் செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதைக் குறிப்பிட்ட சிவக்குமார், ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.
அப்போது "பார்ப்போம், நாம் அனைவரும் உட்கார்ந்து விவாதிப்போம். அவர்கள் ஒரு பிரிவினர் (பெண்கள்) 5-10 சதவிகிதம் இருக்கலாம், சிலர் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து துறை அமைச்சரும் நானும் என்ன செய்வது என்று விவாதிப்போம்," என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்திய ஐந்து உத்தரவாத திட்டங்களில் சக்தி திட்டமும் ஒன்று. இது ஜூன் 11, 2023 அன்று அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் தொடங்கப்பட்டது. அக்டோபர் 18, 2024 நிலவரப்படி, பெண்கள் 311.07 கோடி இலவச பயணங்களுக்கு சக்தி திட்டத்தில் மாநிலம் ரூ.7,507.35 கோடி செலவிட்டது.
- ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார்.
கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தர்சனின் தோழி பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தர்ஷனின் கோரிக்கையை ஏற்று 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
- தனித்துவமான சிகிச்சை மாதிரியை தம்பதியினர் பாராட்டினர்.
- மன்னர் சார்லஸ், கமிலா வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு:
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் கடந்த 18-ந் தேதி முதல் ஓசியானியா சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் தீவு நாடான சமோவாவிற்கு பயணம் செய்தனர்.
இங்கிலாந்து அரசு குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் சமோவா தீவு நாட்டிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதற்கு முன் ராணி 2-ம் எலிசபத் அம்மக்களை சந்தித்து இருக்கும் நிலையில், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சார்லஸ் மனைவி கமிலா உடன் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 26-ந் தேதி பயணத்தை முடித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இது மன்னரின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.
அவர்கள் அங்கிருந்து திரும்பும்போது பெங்களூருவின் ஒயிட் பீல்டில் உள்ள சௌக்யா ஹெல்த் அண்ட் வெல்னஸ் நிலையத்தில் புத்துணர்ச்சி ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 26-ந்தேதி (சனிக்கிழமை) இரவு தம்பதி இருவரும் தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டனர்.
இந்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமான நிலையம் பொது, வணிகம் மற்றும் வி.ஐ.பி. விமான போக்குவரத்து, ராணுவ போக்குவரத்திற்கும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் விமான தொழிற்சாலையின் தாயகமாக இந்த விமான நிலையம் ஜனவரி 1941-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான நிலையத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவருக்கும் இந்திய நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பதி இருவரையும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள், கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அரசு மரியாதையுடன் வரவேற்றனர்.
இதையடுத்து பெங்களூருவின் ஒயிட் பீல்டில் உள்ள சௌக்யா ஹெல்த் அண்ட் வெல்னஸ் நிலையத்தில் பாரம்பரிய மூலிகை சிகிச்சை சார்லஸ் மேற்கொண்டார். டாக்டர் ஐசக் மத்தாய் நூரனாலின் தனித்துவமான சிகிச்சை மாதிரியை தம்பதியினர் பாராட்டினர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் முழுமையான சுகாதார ஆலோசகரான டாக்டர் மத்தாய் விளங்குகிறார். இந்த சிகிச்சை மையம் அவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அவர் கூறியதன் பேரிலேயே மன்னர் சார்லஸ் தனது மனைவியுடன் இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.
இன்று மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புறப்பட்டு செல்கின்றனர். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், கமிலா வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
- பாறையில் நின்று செல்பி எடுக்க முயனறபோது பாறை இடுக்கில் இளம்பெண் தவறி விழுந்துள்ளார்.
- தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இளம்பெண்ணை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கர்நாடகாவின் மைடாலா ஏரிக்கு அருகே இளம்பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 12 மணிநேர போராட்டத்திற்கு அப்பெண்ணை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள மைடாலா ஏரிக்கு தனது நண்பர்களுடன் ஹம்சா என்ற 19 வயது இளம்பெண் சென்றுள்ளார். அப்பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே, பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது பாறை இடுக்கில் அவர் தவறி விழுந்துள்ளார்.
உடனே அவளது நண்பர்கள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்கள் எவ்வளவு முயன்றும் அவளை காப்பாற்ற முடியவைல்லை. ஆகவே உடனடியாக தீயணைப்புத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் அப்பெண்ணை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று மாலை விழுந்த அப்பெண், இன்று பிற்பகலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாறை இடுக்கில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விவரங்களை அறிவித்துள்ளது.
- தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை கொப்பல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
வழக்கில் தொடர்புடைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பு விவரங்களை கேட்ட உடனே ஆயுள் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
- குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
- தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வீட்டிற்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இரண்டு பேர் வீட்டிற்குள் ஓடிச்சென்று 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு ஓடுகின்றனர். அப்போது அவர்களுக்காக காத்திருந்த காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று விடுகின்றனர்.
முன்னதாக, குழந்தைகள் கடத்துவதற்கு திட்டமிட்ட 2 பேரும் குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
குழந்தைகளின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் தொழில் போட்டி காரணமாக குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழந்தைகளை கடத்தியவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி-யில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து காரை போலீசார் மடக்கினர். அப்போது அந்த மர்மகும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர். இருப்பினும் போலீசார் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
- போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
- காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் வீடியோ பதிவாகி இருந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் சிமோகா கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசில் பிரபுராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு கல்லூரி அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் போக்குவரத்து விதிகளை மீறி பஸ் நிலையம் நோக்கி சென்றது. இதை கவனித்த போலீஸ்காரர் பிரபுராஜ் அந்த காரை நிறுத்த முயன்றார்.
ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தால் போலீஸ்காரர் பிரபுராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த காரை ஓட்டி வந்த நபர் திடீரென காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். அப்போது போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் முன்பகுதி பானேட்டில் விழுந்தார்.
ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் ஓட்டினார். சிறிது தூரம் போலீஸ்காரர் பிரபுராஜ் பேனட்டில் தொங்கியப்படி இழுத்து செல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் காரை நிறுத்தியதும் போலீஸ்காரர் பிரபுராஜ் காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்ட வசமாக தப்பினார்.
அந்த நேரத்தில் அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. இந்த காட்சிகளை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில் போலீஸ்காரர் பிரபுராஜ் காரின் பேனட்டில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காரை ஓட்டி வந்தது மிதுன்ஜக்டேல் என்பவர் என்று அடையாளம் தெரிந்தது.
மேலும் போலீஸ்காரர் மீது மோதி காருடன் இழுத்து சென்ற மிதுன் ஜக்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிமோகா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமார் கூறினார்.
- சுற்றுலாப் பயணிகளை கவர மாற்றங்கள் அவசியம்.
- கடற்கரை அருகில் டென்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கோவாவை போல் கர்நாடகாவுக்கும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கர்நாடக கடற்கரைகளிலும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலாப் பயணிகளை கவர மாற்றங்கள் அவசியம். கர்நாடக கடற்கரைகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் செலவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும். இரவு நேரங்களில் அதிகமான மின் விளக்குகள் பொருத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் கடற்கரை அருகில் டென்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் இடங்களை தேர்வு செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடற்கரைகளில் மது குடிக்கவும், விற்பனைக்கும் அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மங்களூரு நகரில் உணவகம் மற்றும் உரிமம் பெற்ற வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரைசெயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கோவா மாநிலத்தை போல் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க விரைவில் கர்நாடக கடற்கரைகளிலும் மது விற்பனையை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






