என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renukaswamy murder case"

    • நடிகர் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
    • ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.

    தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் சிறைச்சாலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இனிமேல் வாழ முடியாது என்றும், தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறும் நீதிபதியிடம் தர்ஷன் கெஞ்சியுள்ளார்.

    நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின்போது, சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம் பேசிய தர்ஷன், "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எங்கும் பூஞ்சைகள் சூழ்ந்து  பயமுறுத்துகிறது. நான் அணிந்திருக்கும் ஆடைகள் கூட துர்நாற்றம் வீசுகிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். இங்கு வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது" என்று தெரிவித்தார்.

    ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.  

    • 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

    குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.

    இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.

    இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

    • கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
    • மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த வழக்கில் இருவருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஜாமீன் வழங்க சரியான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என கூறி அதை ரத்து செய்தது.

    பிரபலம் என்ற அடிக்கப்படையில் ஜாமீன் வழங்கினால் மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை கெட்டுவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    இதையடுத்து மைசூரில் தர்ஷன் கைது செய்யப்பட்ட்டார். பவித்ரா கவுடா பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் காவலில் எடுக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    • நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.
    • கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

    • தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவெறுப்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
    • இதனால் தர்ஷன் திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு மோசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 15 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனால் பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி எனக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமிக்கு கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை மந்திரி மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசுவாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது.

    இது எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய மகன் வினீஷ் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார்.

    கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தர்சனின் தோழி பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தர்ஷனின் கோரிக்கையை ஏற்று 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    ×