search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shakti"

    • 2022-ஆம் ஆண்டிற்கான ‘நாரி சக்தி புரஸ்காா் விருது’ உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாபி சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ஆம் ஆண்டிற்கான 'நாரி சக்தி புரஸ்காா் விருது' உலக மகளிா் தினமான மாா்ச் 8-ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், கல்வித் திறன் மேம்பாடு, வாழ்க்கைத்திறன் போன்ற பாரம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்த தனிநபரோ, குழுவாகவோ, அரசு சாரா அமைப்பு மற்றும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க அக்டோபர் 20-ந்தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவர ங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவிக்கு உகந்த இந்த மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும். வறுமை ஒழியும்.
    அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
    மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
    நிரந்தரி நீலி கால பைரவி
    திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
    சரணம் சரணம் சரணம் தேவி
    எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

    இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

    காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
    காளி நீ காத்தருள் செய்யே!

    மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
    மாரவெம் பேசயினை அஞ்சேன்;
    இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
    யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

    சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
    தாயெனைக் காத்தருள் கடனே!

    தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
    தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

    சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
    சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

    பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
    பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

    அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
    அருந்தவமா வாழ்கவிங் கவளே!

    ஓம்  ஓம்  ஓம்!
    ×