என் மலர்
நீங்கள் தேடியது "ரேணுகாசாமி கொலை வழக்கு"
- நடிகர் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
- ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.
தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இனிமேல் வாழ முடியாது என்றும், தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறும் நீதிபதியிடம் தர்ஷன் கெஞ்சியுள்ளார்.
நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின்போது, சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதியிடம் பேசிய தர்ஷன், "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எங்கும் பூஞ்சைகள் சூழ்ந்து பயமுறுத்துகிறது. நான் அணிந்திருக்கும் ஆடைகள் கூட துர்நாற்றம் வீசுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். இங்கு வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது" என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.
- 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
- கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
- மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் இருவருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஜாமீன் வழங்க சரியான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என கூறி அதை ரத்து செய்தது.
பிரபலம் என்ற அடிக்கப்படையில் ஜாமீன் வழங்கினால் மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை கெட்டுவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மைசூரில் தர்ஷன் கைது செய்யப்பட்ட்டார். பவித்ரா கவுடா பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் காவலில் எடுக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு
பெங்களூரு:
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோருக்கு அரசியல் கட்சியினர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் போலீசார் அதை மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாதுகாப்புடன் விசாரணைக்காக பவித்ரா கவுடாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸ் காவலில் இருந்த போது பவித்ரா கவுடா தனது வீட்டில் இருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு திரும்பினார். அப்போது அவர் லிப்டிஸ் டிக் மற்றும் மேக்அப் போட்டு கொண்டு சிரித்தப்படி வந்ததாக தகவல் வெளியானது.
மேலும் ரேணுகா சாமி கொலையில் பவித்ரா கவுடாவுக்கு வருத்தம் இல்லாதது குறித்து மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பவித்ரா கவுடாவுடன் பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
- ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார்.
கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தர்சனின் தோழி பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தர்ஷனின் கோரிக்கையை ஏற்று 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.






