என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் தர்ஷன்"
- நடிகர் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
- ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.
தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இனிமேல் வாழ முடியாது என்றும், தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறும் நீதிபதியிடம் தர்ஷன் கெஞ்சியுள்ளார்.
நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின்போது, சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதியிடம் பேசிய தர்ஷன், "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எங்கும் பூஞ்சைகள் சூழ்ந்து பயமுறுத்துகிறது. நான் அணிந்திருக்கும் ஆடைகள் கூட துர்நாற்றம் வீசுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். இங்கு வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது" என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.
- 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
- கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
- மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் இருவருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஜாமீன் வழங்க சரியான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என கூறி அதை ரத்து செய்தது.
பிரபலம் என்ற அடிக்கப்படையில் ஜாமீன் வழங்கினால் மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கை கெட்டுவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மைசூரில் தர்ஷன் கைது செய்யப்பட்ட்டார். பவித்ரா கவுடா பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் காவலில் எடுக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 குற்றவாளிகளின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
- நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கில் கார் நிறுத்தியது தொடர்பான தகராறில் நீதிபதி மகன், பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கார் பார்க்கிங் தகராறில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தர்ஷன் கொடுத்த புகாரின் பேரில் நீதிபதியின் மகன், மனைவி மற்றும் மாமியார் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
பெங்களூரு:
நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் போலி கணக்கில் இருந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைதாகி உள்ளனர்.
தற்போது நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 6,106 வழக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இந்த எண்ணை தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மேலும் உடலில் பச்சை குத்துவது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நடிகர் தர்ஷனின் கைதி எண்ணை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் ரசிகர் ஒருவர் தனது ஒரு வயது குழந்தைக்கு வினோத முறையில் 'போட்டோசூட்' நடத்தி உள்ளார்.
அதாவது தனது குழந்தைக்கு சிறை கைதிகளின் உடையை அணிவித்துள்ளார். அதில் நடிகர் தர்ஷனின் கைதி எண் 6,106 பொறிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே கைதிகளுக்கான கைவிலங்கு, ஜெய் டி-பாஸ் போன்ற வசனங்களை வரைந்து இருந்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
- ஒரு கையில் டீ கப்பும், மற்றொரு கையில் சிகரெட் வைத்திருப்பது போல் நாற்காலியில் நடிகர் தர்ஷன் அமர்ந்துள்ளார்.
- 3 பேருடன் நடிகர் தர்ஷன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதமாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் வீட்டு உணவு, படுக்கை விரிப்பு கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நடிகர் தர்ஷனுக்கு மற்ற கைதிகள் போல சிறை உணவு வழங்கப்படுவதாகவும், எந்த சொகுசு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி ரவுடியுடன் சேர்ந்து சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதாவது ஒரு கையில் டீ கப்பும், மற்றொரு கையில் சிகரெட் வைத்திருப்பது போல் நாற்காலியில் நடிகர் தர்ஷன் அமர்ந்துள்ளார். அவருடன் பிளாஸ்டிக் நாற்காலியில் தர்ஷனின் மேலாளர் நாகராஜ், பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகா, மற்றொரு கைதி அமர்ந்துள்ளனர். அவர்கள் 3 பேருடன் நடிகர் தர்ஷன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சிறையில் கைதிகள் பீடி, சிகரெட் உள்ளிட்டவை புகைக்க அனுமதி கிடையாது. அப்படி இருந்தும் கொலை வழக்கில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி டீ குடித்து கொண்டே சிகரெட் புகைப்பதுடன், ரவுடியுடன் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை வழங்கியதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடு என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
- ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல்.
- இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் கோரிக்கை.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை.
அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, தர்ஷனுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார்.
கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தர்சனின் தோழி பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தர்ஷனின் கோரிக்கையை ஏற்று 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.






