என் மலர்
கர்நாடகா
- சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
- பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார்
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே நெலமங்களாவில் நேற்று கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் உயிரிழந்த ஐவரும் டெக் சிஇஓவான சந்திரம் யெகாபகோல்[Chandram Yegapagol] [46 வயது] மற்றும் அவரது குடும்பதினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் பெங்களூரு HSR லே அவுட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மோர்பாகி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம். கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் IAST நிறுவனத்தை தொடங்கினார்.

சம்பவம் நடந்தபோது பல டன் எடையுள்ள அலுமினிய தூண்களை ஏற்றிச் சென்ற ஐஷர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி, பாதையை விட்டு விலகி, மீடியனைக் கடந்து சந்திரம் குடும்பத்தினர் பயணித்த வால்வோ காரின் மீது மோதியுள்ளது. காரின் லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கியது.

தனது பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோக விபத்தானது ஏற்பட்டுள்ளது.
- கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது.
- பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது.
இது, எம்ஜி சாலையின் அருகே காஸ்டர்பா சாலையில் உள்ள ரத்னம்ஸ் வளாகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ளது. இந்த பப் தீ பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் என்ஓசி இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், தீ பாதுகாப்பு மீறல்களுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி கோலியின் பப்பிற்கு தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக நோட்டீஸ் அனுப்பியது.
சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி அதிகாரடிகள் நடவடிக்கை எடுத்தனர். முதல் முறையாக கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது. ஆனால், கோலி தரப்பில் இருந்து பதில் இல்லை.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி கோலிக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, One8 Commune பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கண்டெய்னர் லாரி, கார் மீது கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வேகமாக வந்த இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து மீது மோதி தொடர் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, கண்டெய்னர் லாரி, கார் மீது கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹெப்பல்கருக்கு எதிராக சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் குறித்து கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.
சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் புகாரின் பேரில் சி.டி.ரவி மீது சட்டப்பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சட்டப்பிரிவு79 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
கைது செய்யப்பட்டதற்குப் பின் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், காங்கிரஸ் அரசு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சி.டி.ரவி கூறினார்.
சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

- பெண் மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.
- எம்.எல்.ஏ., எம்.பி.க்கான நீதிமன்றம் இந்த வழக்கு விசாரிக்க இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் சி.டி. ரவி. இவர் மேலவை உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு எதிராக கர்நாடக மாநில பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சி.டி. ரவி "அவர்கள் (அரசு) சர்வாதிகாரிகளைப் போல நடந்து கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது. சர்வாதிகாரம் நீண்ட காலம் நீடிக்காது. அரசியல் தூண்டுதல் காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரவு முழுவதும் உணவு வழங்காமல் போலீசார் எராளமான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வேன்" என்றார்.
சி.டி. ரவி வழக்கை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த இருக்கிறது.
நேற்று கர்நாடக மாநில சட்டசபை ஒத்திவைக்கப்பட்டபோது சி.டி. ரவி லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று சி.டி. ரவியை கைது செய்தனர்.
- பெண் மந்திரியை நோக்கி பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக புகார் அளித்தார்.
- கர்நாடக பா.ஜ.க. தலைவர் சி.டி.ரவியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
பெங்களூரு:
பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபையிலும் இதுதொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. மாநில தலைவரும், மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசினார்.
இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, பெண் மந்திரியை நோக்கி சி.டி.ரவி அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொட்ரபாக, லட்சுமி ஹெபால்கர் அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், லட்சுமி ஹெபால்கர் அளித்த புகாரின் பேரில் சி.டி.ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சி.டி.ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்ததால் சட்டசபை வளாகத்தில் வைத்தே குண்டுக்கட்டாக அவரை போலீசார் கைதுசெய்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டம்.
- கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம்
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்நிலையில், எதிர்கட்சியினரின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடக சட்டமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டிக்கும் விதமாக அனைத்து உறுப்பினர் இருக்கைகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்.
- 24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
- வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டியது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவின் குருகிராமில் இருந்த நிகிதாவையும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்த அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,
நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.
இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்
- என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிபதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாடியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தூக்கிட்டு தற்கொலை செய்வதற்குப் பலமாதங்களாகத் திட்டமிட்டுள்ள சுபாஷ், இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்துள்ளார். அதில் உள்ளவற்றை முடித்தன் அடையாளமாக வரிசையாக டிக் செய்து அவர் குறித்து வைத்துள்ளார்.

அந்த அட்டவணையில் தனது போனில் உள்ள கைரேகை பாஸ்வேர்டை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை குளிர்சாத பிரிட்ஜ் உள்ளே வைப்பது, ஆபீஸ் வேலையை முடித்து கம்பெனி லேப்டாப், சார்ஜரை அவர்களிடம் ஒப்படைப்பது போன்றவை குறிக்கப்பட்டு அதை முடிந்ததன் அடையாளமாக அதில் டிக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனது சேமிப்பை பாதுகாப்பு செய்வது, இறப்பதற்கு முன் குளிப்பது, தற்கொலை கடிதத்தை மேஜை மேல் வைப்பது வரை அதில் குறித்துவைத்து அனைத்தையும் முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- உயர்கல்வித்துறை துணை செயலாளர், அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம்பறிமுதல் செய்யப்பட்டது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் அவ்வப்போது லோக்ஆயுக்தா போலீசார் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கி குவித்த அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதே போல் நேற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் என 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் உயர்கல்வித்துறை துணை செயலாளர் அகேஷ்பாபு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம் மற்றும் பணம் எண்ணும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு ஊரக மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சுனில்குமார் என்பவரது வீட்டில் இருந்து சொகுசு ஹோம் தியேட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல் பல்வேறு இடங்களில் இருந்தும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்த ரூ. 50 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன்.
- யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரும் உணவு வினியோக நிறுவனங்களிலும், வாடகை பைக் ஓட்டும் நிறுவனங்களிலும் பணியாற்றி சம்பாதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ரேபிடோவில் வாடகை பைக் ஓட்டும் இளைஞர் பற்றிய தகவல் உள்ளது. அதில் பேசும் இளைஞர், நான் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன். மாதம் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 85 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.
ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன். சிலர் எங்கள் பணியை பார்த்து சிரிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் எந்த வேலையிலும் இவ்வளவு சம்பளம் கிடைக்காது. யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்தியாவில் கிக் பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பம் சார்ந்த களங்களின் முயற்சிகளை பாராட்டினார்.
- 1999-2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
- கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
மே 1, 1932 இல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்த கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றிய பெருமைக்குரியவராக அறியப்படும் எஸ்.எம். கிருஷ்ணா தனது 92-வது வயதில் காலமானார்.
1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய எஸ்.எம். கிருஷ்ணா அன்று துவங்கி ஆறு தசாப்தங்கள் வரை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், தான் கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.






