search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சாவித்ரி காது கேளாத வாய் பேச முடியாத தனது மகன் வினோத் குறித்து அவரது கணவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
    • குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    கர்நாடகாவில் உத்தர கன்னடா பகுதியில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது 6 வயது மகனை முதலைகள் வசிக்கும் கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்த தாயை போலீஸ் கைது செய்துள்ளனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கால்வாயில் குழந்தையின் உடலை தீவிரமாக தேடினர். அப்போது குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து அவர்கள் மீட்டனர். அப்போது குழந்தையின் வலது கையை கிட்டத்தட்ட முதலை விழுங்கியிருந்தது.

    சாவித்திரியின் கணவர் ரவிகுமார் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் காது கேளாத வாய் பேச முடியாத மூத்த மகன் வினோத் தொடர்பாக இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் தனது மகனை சாவித்திரி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக சாவித்ரியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, எனது கணவர் தொடர்ந்து என்னை கேலி செய்தார், காது கேளாத, வாய் பேச முடியாத தனது மகனை கொலை செய்து விடுமாறு என்னிடம் கூறினார். என் மகன் எவ்வளவு சித்திரவதைகளை தான் தங்குவான். இந்நிலையில், கடந்த மே 4 அன்றும் இதே போல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடந்தது. அதனால் என் மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் தூக்கி வீசினேன். என் மகனின் மரணத்துக்கு என் கணவரே காரணம் என்று சாவித்திரி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    அதன் பின்னர் அவரது கணவர் ரவிக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா (64). எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் மீதும், அவரது மகன் பிரஜ்வால் மீதும் வீட்டு பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயை ரேவண்ணா அவரது மனைவி பவானியின் உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கடத்தி சென்றதாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் கே.ஆர்.நகர் போலீசார் ரேவண்ணா, சதீஸ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு வீடியோவில் ஆபாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த பெண் பிரஜ்வால் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரேவண்ணா மற்றும் சதீஸ்பாபு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சதீஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரேவண்ணா பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    பின்னர் பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரேவண்ணா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    இதையடுத்து ரேவண்ணாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

    அவரிடம் பாலியல் பலாத்கார புகார்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பாகவும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.

    பின்னர் ரேவண்ணாவை விசாரணைக்குழு அதிகாரிகள் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் அவர் கீழே படுத்து தூங்க மறுத்துவிட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    காலையில் எழுந்து விசாரணைக்குழு அலுவலகத்திலேயே ரேவண்ணா குளித்தார். தொடர்ந்து காலை உணவும் சாப்பிட்டார். இதையடுத்து மீண்டும் காலை 10 மணி முதல் அவரிடம் விசாரணை தொடங்கியது. எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத ரேவண்ணா இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    அப்போது அதிகாரிகள் சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டனர். அப்போது ரேவண்ணா அமைதியாக இருந்துள்ளார்.

    தொடர்ந்து ரேவண்ணாவை போலீசார் போட்டோ எடுத்தனர். அவரது கை ரேகைகளும் பெறப்பட்டது. முதலில் போட்டோ எடுக்கவும், கை ரேகை பெறவும் ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது போலீசார் நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து ரேவண்ணா ஒத்துழைத்தார். தொடர்ந்து ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த பெண்ணை அவரது மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ரேவண்ணாவிடம் விசாரணை முடிவடைந்த பின்பு மீண்டும் 8-ந் தேதி அவரை கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்த உள்ளனர். விசாரணை நடந்து வரும் அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • எச்.டி.ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்
    • எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக எச்.டி.ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தது.

    அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரேவண்ணாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு பெங்களூரு 17வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    • எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு.
    • புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவிப்பு.

    பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு புகார் எண்ணை அறிவித்துள்ளது.

    அதன்படி, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 6360938947 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது.

    கோரமங்களா பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில், ரேவண்ணாவை ஆஜர்படுத்திய நிலையில், போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    • சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை.
    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை.

    பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. விசாரணைக்கு ஆஜராக கூறி ஏற்கனவே ஒருமுறை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் ஜெர்மனியில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தகவல் தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா, அவரது வக்கீல் மூலம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்காத சிறப்பு புலனாய்வு குழு போலீசார், தேடப்படும் நபராக பிரஜ்வல் ரேவண்ணாவை அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

    இவ்வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சி.பி.ஐ. 'புளூ கார்னர்' நோட்டீஸ் வழங்கினால் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்க மத்திய உளவுத்துறை (இன்டர்போல்) உடன் நேரடி தொடர்பில் உள்ள சி.பி.ஐ.யிடம் கர்நாடக அரசு மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டில் வைத்து கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து இன்று பிற்பகல் பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினர் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

    • பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., ஆகியோர் மீது அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதும் கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி. பிஜய்குமார் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனது தாயை எச்.டி.ரேவண்ணாவும், அவரது ஆதரவாளரும், பவானி ரேவண்ணாவின் உறவினருமான சதீஸ் பாபு ஆகியோர் சேர்ந்து கடத்திச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக பவானி ரேவண்ணாவின் உறவினரான சதீஸ் பாபுவை போலீசார் கைது செய்திருந்த நிலையில், எச்.டி.ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இருக்கும் இடத்தை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பெண் எச்.டி.ரேவண்ணாவின் உதவியாளரும், ஏற்கனவே கைதான சதீஸ் பாபுவின் உறவினருமான ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருப்பதும், அந்த வீடு மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா காலேனஹள்ளி கிராமத்தில் இருப்பதும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

    இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 5 நிமிடத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் புறப்பட்டு பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டுக்கு வந்தனர்.

    சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீட்டின் கதவை திறக்குமாறு கூறி தட்டினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்பு எச்.டி.ரேவண்ணா கதவை திறந்து வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் பெண்ணை கடத்தியது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் தங்களை கைது செய்வதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தெரிவித்தனர். பின்னர் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் பெங்களூரு பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது ரத்த அழுத்த மற்றும் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரை அரண்மனை சாலையில் உள்ள கார்ல்டன் கட்டிடத்தில் இயங்கி வரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டு உள்ளனர். அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வர தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் ரேவண்ணா கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ரேவண்ணாவிடம் விசாரணை நடத்திய பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவரை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தவும் சிறப்பு விசார ணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேவகவுடாவின் மகனான ரேவண்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து மீட்பு.
    • புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரேவண்ணா வழக்கில், மைசூருவில் காணாமல் போன பெண்ணை காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளனர்.

    கடந்த 29ம் தேதியில் இருந்து தனது தாயை காணவில்லை என்று மைசூரை சேர்ந்த நபர் புகார் அளித்திருந்தார்

    புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.

    மீட்கப்பட்ட பெண்ணிடம் பெறப்போகும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாயை காணவில்லை என மகன் புகார் அளித்திருந்த நிலையில், புகார் தொடர்பாக ரேவண்ணா முன்ஜாமின் கோரியிருந்தார்.

    இந்நிலையில், ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் நிராகரித்தது.

    ஏற்கனவே 2 நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத நிலையில் ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்ற எஸ்ஐடி வாதத்தை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மீண்டும் நோட்டஈஸ் வழங்க எஸ்ஐடி முடிவு செய்துள்ள நிலையில், அந்த நோட்டீஸ்க்கும் பதில் அளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மனு நிராகரித்த நிலையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

    • மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.
    • தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ்.

    கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

    தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது.

    மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முன்ஜாமின் கோரி பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×