என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?

    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.

    • சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம்.
    • எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது

    இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

    பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ்-ல் பிராமணர், வேறு எந்த சாதியினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யாரும் குறிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் RSS-ல் இணையலாம். அவர்கள் தங்களது சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம். எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது என்றும் தேசிய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தார். 

    • துருவ் ஜூரெல் சதமடிக்க இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பெங்களூரு:

    இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துருவ் ஜூரெல் சதமடித்து 132 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்க ஏ சார்பில் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் சதமடித்து 134 ரன்கள் விளாசினார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    34 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் மீண்டும் சதமடித்து 127 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க ஏ அணி அடித்து ஆடியது. ஜோர்டான் ஹெர்மான் 91 ரன்னும், செனோக்வானே, ஜுபைர் ஹம்சா தலா 77 ரன்னும், டெம்பா பவுமா 59 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள்
    • இரண்டாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதில்லை

    இந்தியா ஒரு இந்து நாடு என்றும், நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.

    இந்து சமூகத்தை நான்கு குழுக்களாக வகைப்படுத்தபட்டுள்ளது. முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள். இரண்டாவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றாவது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறையில் இந்துக்கள் என்று கருதுபவர்கள், ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

    இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர். இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும்.
    • விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில், பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்த படியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும், இங்கும் சுற்றி திரிகிறார்.

    அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி 2 விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    அதில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    ஆனால் அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். அதே நேரத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

    இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜாமரால் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களில் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை? என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால் சிறப்பு சடங்குகள் மூலம் பணமழை பொழிய வைப்போம் என ஆசைவார்த்தை.
    • வங்கிகளில் டெபாசிஸ்ட் செய்ய முயன்றபோது ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோசடி அம்பலம்.

    2000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், விசேஷ சடங்குகள் நடத்தப்பட்டு பணமழை பொய்யும் என மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 10 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

    இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு புழக்கத்தில் இல்லை. இருந்தபோதிலும், இது குறித்து அறிந்திராத மக்களிடம் ஒரு குறிப்பிட்ட சீரியல் நம்பர் கொண்ட நோட்டுகளை இந்த கும்பல் சேகரித்துள்ளது. விசேஷ சடங்குகள் மூலம் பணமழை பொழியும் என ஆசைக்காட்டி இவ்வாறு செய்துள்ளனர். போலீசார் இந்த கும்பலிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

    குறிப்பிட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் அழித்து வேறு நம்பர் எழுதப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வங்கி கடந்த மாதம் புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி 40 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய முயன்றபோது, கப்பன்பெட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய இரண்டு கூட்டாளிகளை அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின் அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    வங்கியில் டெபாசிட் செய்ய அவர்கள் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அடுத்த நாள் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட M, N, O, P மற்றும் G சீரியல் நோட்டுகளை கேட்டு வாங்கியுள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
    • மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

    • குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
    • வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    பெங்களூரு பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஷி பூஜாரி. இவர், கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். ராஷி பூஜாரி தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஜீகுகூவா என்ற இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார்.

    அதாவது அந்த நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை புஷ்பலதா செய்து வந்தார். அதன்படி, கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி ராஷி பூஜாரியின் 2 நாய்களையும், புஷ்பலதா நடைபயிற்சிக்கு தனித்தனி கயிறுகளில் கட்டி அழைத்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து புஷ்பலதா வீட்டுக்கு சென்றார்.

    அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு நாய் இறந்து விட்டதாக ராஷி பூஜாரியிடம் புஷ்பலதா கூறினார். தான் ஆசையாக வளர்த்த நாய் செத்து விட்டதால் ராஷி பூஜாரி மிகுந்த வேதனை அடைந்து கண்ணீர்விட்டு அழுதார். இருப்பினும், புஷ்பலதா மீது சந்தேகம் அடைந்த அவர், காவலாளியிடம் தனது நாய் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பார்த்தீர்களா? என்று ராஷி பூஜாரி விசாரித்தார். அப்போது நாய் எதுவும் கீழே விழவில்லை என்று காவலாளி தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ராஷி பூஜாரி, குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாயை லிப்டில் வைத்து புஷ்பலதா கையில் பிடித்து தூக்கி கீழே ஓங்கி அடித்தார். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்து போய்விட்டது. இதையடுத்து செத்துப்போன நாயை கயிற்றுடன் தரதரவென இழுத்து செல்வதும், மற்றொரு நாயை அவர் அழைத்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதை பார்த்து ராஷி பூஜாரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வேலைக்கார பெண் தனது நாயை கொடூரமாக அடித்துக் கொன்று விட்டதாக கூறி, அந்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    அதே நேரத்தில் புஷ்பலதா மீது பாகலூர் போலீஸ் நிலையத்தில் ராசி பூஜாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதாவை அதிரடியாக கைது செய்தனர். கைதான புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாய் இல்லாத ஜீவனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற புஷ்பலதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



    • சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?.
    • அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.

    கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் முடிவுதான் பைனல் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    மக்கள் பேசலாம். ஆனால், உயர்மட்டம் யார்?. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?. மக்களை விட நீங்கள்தான் (செய்தியாளர்கள்) இது பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக முடிவு செய்வார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.

    பெங்களூருவில் அதிகமான பீகார் மக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்போம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர்.
    • நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாக தெரிவித்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் தெருநாய் ஒன்று இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டிய கொட்டகையில் நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெல்லந்தூரைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்தார்.

    அவர் தனது புகாரில், அக்டோபர் 13 ஆம் தேதி கொட்டகையில் ஒரு கும்பலால் தெரு நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் தான் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்கு வதை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்குனர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர். நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு பின் உண்மை வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.

    ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.

    • கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
    • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் கைது செய்யப்பட்டார்.

    பெங்களூருவில் உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து 2 உயிர்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சிவப்பு சிக்னல் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 40 வயது இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி சமீன் பானு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    உடனடியாக போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

    ×