என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
    • யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.

    தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.

    அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.

    அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

    இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

    • ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
    • இந்த வீடியோக்கள் உண்மை இல்லை. அது போலி வீடியோக்கள் ஆகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் ஆவார். இவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது விமான நிலையத்துக்கு போலீஸ் வாகனத்தை ராமசந்திர ராவ் அனுப்பி வைத்திருந்தார்.

    இதனால் தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்யாமல் பலமுறை அனுப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு(2025) ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.

    அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த தங்கம் கடத்தல் வழக்கால் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக (தலைமை) வாய்ப்பு இருந்தும், அது பறிபோய் விட்டது. இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார். இதன்மூலம் பணியில் இருக்கும்போதே, அவர் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.

    3 வீடியோக்களில் இருக்கும் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. அந்த 3 வீடியோக்களில் இருக்கும் பெண் ஒருவரா?, அல்லது வெவ்வேறு பெண்களா? என்பதும் தெரியவில்லை. ஆனால் அப்பெண்கள் விருப்பப்பட்டு தான் ராமசந்திர ராவுடன் பழகுவது போன்று வீடியோவில் காட்சிகள் இருக்கிறது.

    அந்த வீடியோக்களை ராமசந்திர ராவே எடுத்தாரா?, அல்லது வேறு யாரும் ரகசியமாக எடுத்து வெளியிட்டு உள்ளார்களா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் 3 வீடியோக்களின் பின்னணியில் இசை, பாடல் ஒலிப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரகசியமாக பெண்களுடன் ராமசந்திர ராவ் இருப்பதை யாரோ மர்மநபர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    விசாரணை நடத்தினால் மட்டுமே, அந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் பற்றியும், மற்ற தகவல்கள் பற்றியும் தெரியவரும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபாச வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டுக்கு டி.ஜி.பி. ராமசந்திர ராவ் நேற்று மதியம் சென்றார். வீடியோக்கள் குறித்து அவர் விளக்கம் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராமசந்திர ராவுக்கு மந்திரி பரமேஸ்வர் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.

    பின்னர் சதாசிவநகரில் வைத்து ராமசந்திர ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    போலீஸ் மந்திரி பரமேஸ்வரை சந்தித்து பேசுவதற்காக வந்தேன். தற்போது அவருக்கு உடல் நிலை பாதிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. நான் பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறிது நேரத்தில் முதலில் கூறிய கருத்தை ராமசந்திர ராவ் மறுத்து பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்த வீடியோக்கள் உண்மை இல்லை. அது போலி வீடியோக்கள் ஆகும். அந்த வீடியோக்கள் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. வீடியோக்கள் வெளியானது பற்றி விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரியவரும். யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி எனது வக்கீலுடன் பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ் மாறிமாறி பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுடன் ஆபாச செயலில் ராமசந்திர ராவ் ஈடுபட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ராமசந்திர ராவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீசுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்துள்ளார்.

    ராமசந்திர ராவ், கடந்த 1993-ம் ஆண்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அவர் வருகிற மே மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதாவது பணி ஓய்வுபெற 4 மாதங்களே இருக்கும் நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை. என்றாலும், ராமசந்திர ராவை பணியிடை நீக்கம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த சம்பவம் காரின் கேமராவில் பதிவாகியுள்ளது
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை கத்தியை காட்டி இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    காரின் கேமராவில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், காரில் உள்ள நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் ஏன் எங்களை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவமான அந்த இளைஞர் பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காரின் அருகே வந்து பாக்கெட்டில் உள்ளே இருந்த கத்தியை எடுத்து சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்று அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், "பெங்களூரு நகரக் காவல்துறை, சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ அல்லது பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பொறுத்துக்கொள்ளாது. வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காண்பித்தல், மிரட்டல்கள் அல்லது பொது இடங்களில் அநாகரிகமான நடத்தை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும், பெங்களூரு நகரக் காவல்துறை சாலையில் மோசமாக நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், சட்டத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சவுராஷ்டிர அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெங்களூரு:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    லீக் சுற்று, காலிறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகள் முடிவில் சவுராஷ்டிரா, விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிர அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் சதமடித்து 128 ரன்கள் குவித்தார். யாஷ் ரதோட் 54 ரன்னும், அமன் மோகடே 33 ரன்னும் எடுத்தனர்.

    சவுராஷ்டிரா அணிச் ஆர்பில் அன்குர் பன்வார் 4 விக்கெட்டும், சிராக் ஜானி, சேடன் சகாரியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களமிறங்கியது. அந்த அணியின் மன்காட் 88 ரன்னும், சிராக் ஜானி 64 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சவுராஷ்டிரா அணி 48.5 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    விதர்பா சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நசிகேத் 3 விக்கெட்டும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது அதர்வா டைடுக்கும், தொடர் நாயகன் விருது அமன் மோகடேவுக்கும் அளிக்கப்பட்டது.

    • முதல் அரையிறுதியில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
    • 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரில் நடந்து வந்தது.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.

    காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் அரையிறுதியில் விதர்பாவும், 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணியும் வென்றன.

    இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ஹர்விக் தேசாய் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும், ஹர்ஷ் துபே தலைமையிலான விதர்பா அணியும் மோதுகின்றன.

    சவுராஷ்டிரா அணி அரையிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல்,

    விதர்பா அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    சவுராஷ்டிரா அணியில் பேட்டிங்கில் ஹர்விக் தேசாய் (561 ரன்), விஸ்வராஜ் ஜடேஜா (536), சம்மார் காஜரும், பந்துவீச்சில் அன்குர் பன்வார், சேத்தன் சகாரியாவும் பலம் சேர்க்கின்றனர்.

    விதர்பா அணியில் பேட்டிங்கில் அமன் மொகாதே (781 ரன்), துருவ் ஷோரேய் (515), ரவிக்குமார் சமர்த், பந்து வீச்சில் நாசிகெட் புத், யாஷ் தாக்குர், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    சவுராஷ்டிரா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதேநேரம், விதர்பா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும்.

    சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

    • கடந்த 2025-ல் அதிகபட்சமாக 90 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • தற்போது பிப்ரவரி 1 முதல் 5 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு.

    நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோ விலையுயர்ந்த மெட்ரோவாகியுள்ளது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கர்நாடக மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:-

    டெல்லி, மும்பை மற்றும் சென்னை மெட்ரோவை விட பெங்களூரு மெட்ரோவில் பயணம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. கட்டணத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடு இந்த விலை உயர்வுக்கு காரணம்.

    மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ரெயில் இயக்கப்படுவதால் மற்றும் பாராமரிப்பு காரணமாக அடுத்த மாசம் ஐந்து சதவீதம் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கட்டுமான வேலை தொடர்ந்து தாமதப்படுத்துதல் காரணமாக திட்டத்தின் செலவு அதிகரிப்பதுதான் இழப்பிற்கு முக்கிய காரணம். கட்டணம் உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

    பத்து மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட கடைசி கட்டண உயர்வின் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே, மாநில அரசும் பிஎம்ஆர்சிஎல் நிறுவனமும் மற்றொரு 5 சதவீத கட்டண உயர்வை முன்மொழிந்துள்ளன. இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

    FCC பரிந்துரையின்படி பிஎம்ஆர்சிஎல் மாற்றியமைக்கப்பட்ட ரெயில் கட்டணத்தை கடந்த 2025-ல் அறிமுகப்படுத்தியது. அப்போது டிக்கெட் விலை சில வழிகளில் 71 சதவீதம் வரை உயர்த்தப்படடது. அதிகபட்சமாக 90 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு வழங்கப்படும் இந்தத் தண்டனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.

    நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    • நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை.
    • தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன். காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் இது தொடர்பாக முடிவு செய்யும் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வருட முதலமைச்சர் பதவிக்காலத்தை நிறைவு செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ந்தேதியுடன் அதிக காலம் கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவராஜ் உர்ஸ் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். நாளையுடன் கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை சித்தராமையா பெற இருக்கிறார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். தேவராஜ் உர்ஸ் எத்தனை வருடங்கள் மற்றும் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. இன்று மக்களில் ஆசீர்வாதத்தால், தேவராஸ் உர்ஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடம் எப்போது முடிவு செய்யும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் எப்படி முதலமைச்சராகியிருப்பேன்?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டினர்.

    கர்நாடகாவின் ஹூப்ளியில் 13 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஹூப்ளி-தார்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    இவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அணுகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதை வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் புகாரில் தெரிவித்தனர். இதனால் சிறுரவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.   

    • பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
    • 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.

    மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.

    மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,

    "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.

    இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

    நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

    பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

    முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

    ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

    இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

    வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார். 

    • ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.
    • இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை நபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏஜிபி லேஅவுட்பகுதியில், நள்ளிரவில் வேலை முடிந்து விடுதிக்குத் நடந்து சென்று கொண்டிருந்த 28 வயது பெண் மருத்துவரிடம் ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், வழி கேட்பது போல அருகில் வந்துள்ளார்.

    பின்னர் மருத்துவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். மருத்துவர் சத்தமிடவே, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோலதேவனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

    • பா.ஜ.க. எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி வீடு முன் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
    • இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெல்லாரி டவுன் பகுதியில் வால்மீகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது.

    அதேபோல, முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏவுமான ஜனார்த்தன ரெட்டியின் வீடு முன்பும் காங்கிரஸ் சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இதைக் கண்ட ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் அதை கிழித்து அகற்றினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராபாத்ரெட்டி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து பா.ஜ.க.வினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது நாராபாத்ரெட்டியின் ஆதரவாளரான சதீஷ் ரெட்டி திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் பிரமுகரான ராஜசேகர், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். அவரை யார் சுட்டுக்கொன்றது என தெரியவில்லை.

    இதனால் அங்கு மோதல் வெடித்தது. இதில் ஜனார்த்தன ரெட்டி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சிலர் உடைத்ததால் பதற்றம் அதிகமானது.

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அங்கு தடியடி நடத்தினர். கூட்டம் கலையாததால் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக புரூஸ் பீட் போலீசார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி உறுப்பினர் மோத்கர் ஸ்ரீனிவாஸ், பிரகாஷ், ரமணா, பழன்னா, திவாகர், மாருதி பிரசாத், தம்மூர் சேகர், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர் அலிகான் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பெல்லாரி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    ×