என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
    • போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன

    ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.

    நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.   

    • பயங்கரவாதிகளை தேடும்போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயம்.
    • இந்த இடத்தில் இரண்டு முறை எனகவுண்டர் நடைபெற்றுள்ளது.

    பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

    கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உள்பட நான்கு வீரர்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

    • லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

    • பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

    இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.
    • போராட்டத்தைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இந்நிலையில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    லடாக்:

    யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.

    இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-வை அதிகாரிகள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
    • இதை எதிர்த்து பெண் ஒருவர் நேரலையில் பேசியபோது, கணவன் இடைமறித்தபோது சண்டை ஏற்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மெகராஜ் மாலிக். இவர் தோடா பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இவர் ஆவார்.

    இவரை அதிகாரிகள் பொது ஒழுங்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய செயலில் ஈடுபட்டதாக கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இதனால் தோடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போன்ற தடையை தோடாவில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வின் கைதுக்கு எதிராக பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவரது கணவர், அதை கண்டு உடனடியாக லைவ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவர் நிறுத்தவில்லை. இதனால் கணவர் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இருந்தபோதிலும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பேன் என அந்த பெண் தொடர்ந்து பேசியுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை லைவ் நிகழ்ச்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலான நிலையில், கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை தடை உத்தரவை மீறியதற்காகவும், லைவ் நிகழ்ச்சியின்போது மனைவி தாக்கியதற்காக கணவனையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    சியாச்சின்:

    லடாக் யூனியன் பிரதேசத்தின் சியாச்சின் கிரேசியர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இந்நிலையில், மீட்புக் குழுவினர் மோஹித் குமார், நீரஜ் குமார் சவுத்ரி, தாபி ராகேஷ் தேவ்பாய் ஆகிய 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

    கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    தோடா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்ட முதல் சிட்டிங் எம்எல்ஏ ஆவார். இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக தோடா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் மாலிக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

    • அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.

    ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

    • பூஞ்சில் மாவட்டத்தில், ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
    • பயங்கரவாதிகளுடன் 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

    ஜம்மு- காஷ்மீரின் எல்லை மாவட்டமான பூஞ்சில் ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

    சோதனையின் போது அகமதாபாத்தை சேர்ந்த தாரிக் ஷேக் மற்றும் சேம்பர் கிராமத்தை சேர்ந்த ரியாஸ் அகமது ஆகிய பயங்விரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், சில வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

    • தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

    மேலும், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

    இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    ×