என் மலர்tooltip icon

    டெல்லி

    • கெஜ்ரிவாலை 6 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
    • அவரது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றார் சுனிதா.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அதன்பின், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை சார்பில் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 6 நாள் விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தனது அதிகார ஆணவத்தால் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரியை கைதுசெய்து, அனைவரையும் நசுக்கப் பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதல் மந்திரி எப்போதும் உங்களுடன் நின்றவர். உள்ளே (சிறையில்) இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

    • கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
    • வரும் 28-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • மத்திய அமைப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் கடுப்படுத்தக் கூடாது- சீதாராம் யெச்சூரி
    • தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு போலீஸ் மூலம் களம் சமநிலை படுத்தப்படுகிறது- அபிஷேக் சிங்வி

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் தொடங்கிய நிலையில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    புகார் அளித்தபின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் "பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

    இது களத்தில் சமநிலை என்பது அழித்துவிடும். சம நிலை இல்லாமல் ஜனநாயகம் என்பது ஒன்றுமில்லை. காவல்துறை மற்றும் நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துகிறத. அப்புறம் மத்திய அமைப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் கடுப்படுத்தக் கூடாது. அவர்கள் இது தொடர்பாக யோசிக்க வேண்டும்" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில் "ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கே உள்ளன. டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முழு விவரத்தையும் அளித்துள்ளோம். இது தனிநபர் அல்லது எந்த கட்சியையும் பற்றி என்பது கிடையாது, அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு தொடர்பானது.

    தேர்தலில் சமநிலை தேவைப்படும்போது, ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தி, நீங்கள் தேர்தல் களத்தை சமநிலைக்கு விடுவதில்லை. இது சுதந்திரம், நியாயமான மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும். தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு போலீஸ் மூலம் களம் சமநிலை படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என கேட்கிறோம்.

    75 வருட சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக முதல்வராக இருக்கும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான சாட்சிகளை கொடுத்துள்ளோம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.
    • கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கெஜ்ரிவால் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார். நேரில் ஆஜராகாததால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.

    இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கெஜ்ரிவால் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அதன்பின் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.

    இன்று மதியம் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து அரவிந்த் கெஜ்ரிவால், "என்னுடைய வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்து கொண்டு நாட்டிற்காக பணியாற்றுவேன்" என்றார்.

    மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். கொள்ளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டது. இந்த பணம் கோவா, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.
    • சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்றும், இதனால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அப்போதைய மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும் சேர்க்கப்பட்டார். அவர் அதே ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் கனிமொழி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

    2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு அளித்தார்.

    இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தாமதமானதால், மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பல மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் விசாரணை நடத்தினார்.

    மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக வக்கீல்கள் வாதங்களும் நடந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ்குமார் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந்தேதி தள்ளி வைத்தார்.

    இந்த வழக்கில் இன்று காலை டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தினேஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து கனிமொழி, ஆ.ராசா மீதான 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை வருகிற மே மாதத்தில் இருந்து தொடங்கும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    டெல்லி ஐகோர்ட்டு விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. சாட்சியங்கள் விசாரணையும் நடைபெறாது. ஏற்கனவே இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு விட்டன.

    எனவே, சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு சரியா? தவறா என்பது குறித்த வாதங்கள் மற்றும் விசாரணை மட்டுமே டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும். புதிதாக சாட்சியங்களை பதிவு செய்வதற்கோ, குறுக்கு விசாரணை செய்வதற்கோ வாய்ப்பு இல்லை. எனவே டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழியும், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஆ.ராசாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது
    • அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

    "என்னுடன் இணைந்து மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்" என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிரான லோக்பால் போராட்டத்தின் போது அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பின்பு கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்.

    • டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
    • கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். 

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

    அமலாக்கத்துறை சார்ந்த வழக்குகளை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திவேதி அமர்வுதான் இந்த வழக்கையும் விசாரிக்க இருந்த நிலையில், கெஜ்ரிவால் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

    இதே அமர்வு, கடந்த பிப்ரவரியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இம்மாதம் பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுத்தது. மேலும், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல்.
    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி இன்று பாஜக அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ரெய்டுகளுக்கு எதிரான கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது. அப்போது, அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்.

    மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி முதல்வர் மீதான கைது நடவடிக்கை கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார் என சபாநாயகர் தெரிவித்துள்ளா்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

    • ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு.
    • மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிப்பு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி அன்று பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "" பூடானுக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். மாட்சிமை பொருந்திய பூடான் அரசர், நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவு.
    • பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

    அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது:-

    ஊடகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை.

    இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது.

    பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.

    இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.
    • ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றே முடிவும் தெரிந்துவிடும்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.

    பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    தற்போது, காங்கிரஸ் 3ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். 

     

    ×