என் மலர்
டெல்லி
- இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
- இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 க்கும் அதிகமாக மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வரும் அமரிக்கா அதே வேளையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும். நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக காசா மீது இஸ்ரேல் ஏவிய குண்டுகளில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு குறியீடுகள் இருப்பதாக கூறப்பட்டது சர்ச்சையானது.

- ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
- ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54 வது சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனிகளுக்காக ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசு பரிசீலித்து வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியதால் இந்த முடிவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
- பட்டத்து இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை.
அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இரண்டு நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இந்தியா வந்தார். அவருடன் அமீரகத்தின் பல்வேறு துறை அமைச்சர்கள், வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வந்தது.
பட்டத்து இளவரசரான பிறகு முதல் முறையாக இந்தியா வந்த இளவரசர் ஷேக் காலித்-க்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார். பின்னர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மதியம் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
பிரதமர் மோடியை தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும் அபுதாபி பட்டத்து இளவரசர் சந்தித்து பேசுகிறார். டெல்லியில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மும்பை செல்லும் பட்டத்து இளவரசர், அங்கு இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.
இதனிடையே அபுதாபி பட்டத்து இளவரசரை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்பதில் மகிழ்ச்சி.
"பலதரப்பட்ட பிரச்சினைகளில் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையில், வலுவான இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பின் மீதான அவரது ஆர்வம் தெளிவாகத் தெரிந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
- பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் தொடர்பான விவகாரத்தில் புள்ளியியல் நிலைக்குழு [Standing Committee on Statistics (SCoS)] மத்திய அரசால் கலைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய மாதிரி கணக்கெடுப்புக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டீரிங் கமிட்டியின் செயல்பாடுகளுடன் SCoS குழுவின் செயல்பாடுகள் குழப்பிக்கொள்ள கூடாது என்பதற்காக SCoS குழுவை கலைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் 2021 ஆம் ஆண்டியேலே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டிய நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகயும் ஏன் கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதன் காரணமாகே தற்போது SCoS குழு கலைக்கப்பட்டுள்ள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
- மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
- குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது.
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது. அதைதொடர்ந்து, பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொது மக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது என்றும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள கிளேட் 1 வகையை சார்ந்தது அல்ல என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த வகை நோய் தொற்று 2022, ஜூலை மாதம் இந்தியாவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தொற்று எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை.
- மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார்.
மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை.. மன்னிக்கவே முடியாத தோல்வி - கார்கே காட்டம்
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையி முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.

மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம்.
- சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
- குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
குரங்கம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
குரங்கம்மை நோய் அறிகுறி நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்களிடம் தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
- மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.
இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.
சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.
இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.
இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
- பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட தொடர்பான விசாரணை நிலை அறிக்கை உச்சநீதிமன்றம் தாக்கல்.
- டாக்டர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழந்துள்ள என மேற்கு வங்க சுகாதாரத்துறை அறிக்கை.
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் பயிற்சி டாக்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது மேற்கு வங்க சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படடது. அந்த அறிக்கையில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஐஎஸ்எஃப்-க்கு தேவையைான அனைத்தையும் இன்றைக்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தடயவியல் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவனைக்கு அனுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளன எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ந்தேதி புதிய விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வெண்டும் என உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
- டெலவாரேவில் 21-ந் தேதி ‘குவாட்’ மாநாடு நடக்கிறது.
- நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் 21-ந் தேதி 'குவாட்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
'குவாட்' அமைப்பு என்பது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த அமைப்பாகும். இந்த ஆண்டு அதன் மாநாட்டை இந்தியா நடத்துவதாக இருந்தது.
கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழா சமயத்தில் டெல்லியில் அந்த மாநாட்டை நடத்த இந்தியா விரும்பியது. அதற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் வர மறுத்து விட்டதால், மாநாடு நடக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, இம்மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துடன் 'குவாட்' மாநாட்டை நடத்தலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்தது. ஆனால், ஜோ பைடன், தனது சொந்த ஊரான டெலவாரேவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, டெலவாரேவில் இருந்துதான் 36 ஆண்டுகளாக செனட் சபைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
எனவே, டெலவாரேவில் 21-ந் தேதி 'குவாட்' மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி, ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது, ஜோ பைடனை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
22-ந் தேதி, நியூயார்க் மாகாணம் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த அரங்கம், 16 ஆயிரம் இருக்கைகளை கொண்டது.
ஆனால் அதில் பங்கேற்க இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23-ந் தேதிகளில் ஐ.நா. நடத்தும் 'எதிர்காலத்துக்கான உச்சி மாநாடு' என்ற உயர்மட்ட மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
உலகில் போர், கிளர்ச்சி நடந்து வரும் சூழலில், சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது. அதில் நடக்கும் பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 28-ந் தேதி பங்கேற்று பேசுவார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
- ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் 10 இடங்களை கேட்கிறது ஆம் ஆத்மி.
- ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது.
அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற வகையில் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களை கேட்கிறது.
ஆனால் ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12-ந்தேதி கடைசி நாளாகும். அதற்கு முன்னதாக கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகவ் சதா கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைவதில் மகிழ்ச்சியாக உள்ளன. கூட்டணி அமையும் என நம்பிக்கை உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12-ந்தேதியாகும். அதற்கு முன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்லது இரு கட்சிகளுக்கு ஆதாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தால், நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை விட்டுவிவோம்.
கூட்டணிக்கான நேர்மறையான நிலை சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவா்த்தைகள் நல்ல நிலையில் இருக்கிறது. அரியானாவின் நலன், நாட்டு மக்களின் நலன், ஜனநாயத்தின் நலனுக்கான பேச்சுவார்த்தை நல்லதாக முடியும் என நம்புகிறேன். பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட அனைத்தையும் வெளிப்படையாக கூற முடியாது" என்றார்.






