என் மலர்tooltip icon

    டெல்லி

    • ராகுல் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.
    • பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது.

    புதுடெல்லி:

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துக்களை தெரிவிப்பதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகி விட்டது. ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுத் தளங்களில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகள் செய்வதாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து உணர்வுகளைப் புண்படுத்துகிறார்.

    பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் காந்தியின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.

    பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    • மனிதநேயம் கடந்த காலங்களில் பல சவால்களை சந்தித்துள்ளது.
    • தூய்மையான பூமியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    புதுடெல்லி:

    பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    செப்டம்பர் 2023-ல், ஜி 20 உச்சிமாநாடு இந்தியாவில் நடந்தது. இதில் பசுமை ஹைட்ரஜனுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

    5 உயர்நிலை தன்னார்வக் கொள்கைகளை பிரகடனம் செய்து ஜி 20 தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த கோட்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த பாதையை உருவாக்க உதவுகின்றன. நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும். விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பசுமை ஹைட்ரஜன் துறைக்கு உதவ பொதுக்கொள்கையில் மாற்றங்களை பரிந்துரைக்கலாம், கடல் நீரையும் நகராட்சி கழிவு நீரையும் உற்பத்திக்கு பயன்படுத்துவதை நாம் ஆராயலாமா? பொது போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்நாட்டு நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜனை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

    இதுபோன்ற தலைப்புகளை ஒன்றாக ஆராய்வது, உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இது போன்ற பல கருத்துகளை பரிமாறிக்கொள்ள இந்த மாநாடு உதவும். மனிதநேயம் கடந்த காலங்களில் பல சவால்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கூட்டான மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் துன்பங்களை வென்று மீண்டு வந்துள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட புகை படிவமற்ற எரிபொருள் திறன் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதனைகளால் ஓய்வு எடுக்கவில்லை தீர்வுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. தூய்மையான பூமியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    பின்னர் மோடி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இந்தியா எக்ஸ்போ கண்காட்சியை பார்வையிட்டார். அதை தொடர்ந்து செமிகான் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    • ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

    புதுடெல்லி:

    ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்.) மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட 'ஏ.பி.என்.எம்.' மருந்து, ரத்த சோகை உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர். மீனாகுமாரி கூறுகையில், "ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

    வளரிளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் செலவு குறைந்த பங்கை பொது சுகாதாரத்துக்கு அளிக்கின்றன" என்றார்.

    • பா.ஜ.க. சார்பில் ஜுலானா தொகுதியில் கேப்டன் யோகேஷ் பைரகி போட்டியிடுகிறார்.
    • இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.

    புதுடெல்லி:

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப் பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.

    அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டசபை தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக கேப்டன் யோகேஷ் பைரகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அரியானா மாநில பா.ஜ.க. இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், அரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    • இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
    • நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

    பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று அசத்தியது. முன்னதாக கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்த நிலையில், இந்த முறை முந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

    இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பாராஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தது. அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

     


    பரிசு தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். இதுதவிர அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    பரிசு தொகை வழங்கி பிறகு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக நம் பாரா-தடகள வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவோம்."

    "நாட்டிற்கு விருதுகளை பெற்றுத்தந்துள்ளீர்கள், வாழ்வின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இதோடு நிறுத்தக்கூடாது. லாஸ் ஏஞ்சல்ஸில் (2028) அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டிக்காக பயிற்சியை துவங்க வேண்டும். இதன் மூலம் நாம் அதிக பதக்கங்களை வெல்ல முடியும்."

    "2036-இல் இந்தியா ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் நடத்தும் போது, நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார். 

    • அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
    • நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் கலால் கொள்கை வழக்கிலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் டெல்லி அரசின் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறி டெல்லி அரசை கலைக்க பாஜக எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஒரே குறிக்கோள் அரசை கவிழ்ப்பதுதான் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.

    'டெல்லியில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. எனவே தேர்தலில் வெல்ல காவி கட்சி செய்யும் சதிதான் இது. தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த உடனே இந்த சதி வலையை பாஜக பின்னியுள்ளது. அரசை கவிழ்த்து அடுத்த தேர்தல் வரை ஜானதிபதி ஆட்சியை அமல்படுத்தச் செய்வதே அவர்களின் திட்டம்' என்று அதஷி விமர்சித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம், பாஜக சீக்கிரமே தோற்க வேண்டும் என்று நினைகிறது போலும், எனவே நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

    • சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது.
    • உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழா டெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    தற்போதுள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. தொழில் நுட்பம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் காரணமாக பல அச்சுறுத்தல்களைக் காண முடிகிறது. சைபர் குற்றத்துக்கு எல்லை இல்லை. எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

    சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது. சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    • சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவமனையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    • கடைசி மூச்சு உள்ளவரை நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.
    • புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும் என்று நம்புகிறேன்.

    டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே பத்திரிக்கையாளர் ரஷீத் கித்வா இணைந்து அரசியல் நினைவு குறிப்பு தொடர்பான "அரசியலில் ஐந்து தசாப்தங்கள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் வெளியீடு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    83 வயதான தலைவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதிலும், அதன் சித்தாந்தத்தை மக்களிடம் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியிருப்பதால் தன்னை ஓய்வு பெற்ற மனிதராகப் பார்க்கக்கூடாது.

    யாரும் அரசியலில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தங்கள் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், தேசத்திற்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள், தங்கள் சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். கடைசி மூச்சு உள்ளவரை நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.

    ஒருவர் தனது வாழ்க்கையில் எதைக் கற்றுக்கொண்டாரோ அல்லது எதைச் சாதித்தாலும், இறுதியில் நீங்கள் அதை மக்களிடம் திருப்பித்தர வேண்டும்

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    விழாவில் சுஷில் குமார் ஷிண்டே பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    சோனியா காந்தி எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஏனென்றால், மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்ட சாதியினரை முதலமைச்சராக நியமிக்கும் முடிவை எடுப்பது எளிதான காரியம் அல்ல.

    சோனியா ஜி போன்ற ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கட்சி எனக்காக செய்தது எவ்வளவோ இருக்கிறது. புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    புத்தக வெளியீட்டு விழாவில் ராஜ்யசபா எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய சிங்கும் கலந்து கொண்டார்.

    • டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது.
    • விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கானவழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

    இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை புகுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    கடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக ரூ.2 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணியை தொடங்க உள்ளோம்.

    விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தடவையும் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் செலவு ஆவதுடன், சில தொல்லைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்க போகிறோம்.

    தற்போது, மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளன. விவசாயிகளை பற்றி தனிப்பட்ட தரவுகள் இல்லை. அந்த குறையை இத்திட்டம் போக்கும்.

    விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கானவழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    அதன்பிறகு, ஆதார் போல், அந்த விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை பெற முடியும்.

    விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். மேலும், அரசின் கொள்கை திட்டமிடலுக்கும் இந்த தரவுகள் பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயிலின் ஏ.சி. பெட்டியின் மேற்கூரையில் இருந்து நீர் அருவிப் போல் கொட்டுவது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
    • வீடியோ ஜபல்பூர் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து எடுக்கப்பட்டது.

    சமீப காலமாக விமானத்தில் தண்ணீர் சொட்டுவது, ஏ.சி. இல்லாமல் பயணிகள் பயணிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேச்சு பொருளாக இருந்தது.

    இந்த நிலையில், ரெயிலின் ஏ.சி. பெட்டியின் மேற்கூரையில் இருந்து நீர் அருவிப் போல் கொட்டுவது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ள பதிவில்,

    "ரெயில்வே அமைச்சரே, என்ன நடக்கிறது... ரெயிலுக்குள் பயணிகளுக்கு அருவி வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள்.. மக்கள் பயணித்து அருவியையும் ரசிப்பார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ ஜபல்பூர் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து எடுக்கப்பட்டது.

    • ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர், பகுதி நேர தலைவர் என்று அனைவருக்கும் தெரியும்.
    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டனர்.

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்.-ஐ விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மீதான மக்களின் பயம் போய்விட்டது என்றும், உலக அளவில் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இளைஞர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, ராகுல்காந்தியின் பேச்சு பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி முதிர்ச்சியற்றவர், பகுதி நேர தலைவர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டனர்.

    ஆனால், அவர் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டில் என்ன பேசுவது என்று கூட அவருக்கு தெரியவில்லை.

    காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனால் சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியாது. அவர் இந்தியாவை பலவீனப்படுத்துகிறார். சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான ஒப்பந்தப்படி, இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல்காந்தி தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார்.

    நான் சொல்வது தவறு என்றால் ராகுல் காந்தியோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவோ அந்த ஒப்பந்தத்தை பகிரங்கரமாக வெளியிடத்தயாரா? என்று சவால் விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×