மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் ஏன்? கேள்வி கேட்ட நிலைக்குழுவை கலைத்த மத்திய அரசு.. சர்ச்சை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் ஏன்? கேள்வி கேட்ட  நிலைக்குழுவை கலைத்த மத்திய அரசு.. சர்ச்சை!
Published on

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம் தொடர்பான விவகாரத்தில் புள்ளியியல் நிலைக்குழு [Standing Committee on Statistics (SCoS)] மத்திய அரசால் கலைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழு கடந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய மாதிரி கணக்கெடுப்புக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டீரிங் கமிட்டியின் செயல்பாடுகளுடன் SCoS குழுவின் செயல்பாடுகள் குழப்பிக்கொள்ள கூடாது என்பதற்காக SCoS குழுவை கலைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் 2021 ஆம் ஆண்டியேலே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டிய நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகயும் ஏன் கணக்கெடுப்பு தாமதிக்கப்டுகிறது என்று SCoS குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதன் காரணமாகே தற்போது SCoS குழு கலைக்கப்பட்டுள்ள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com