என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள வசந்தமண்டபத்தில் வசந்த உற்சவங்கள் இன்று காலை தொடங்கியது. காலை 6.30 மணிக்கு ஏழுமலையான் மாடவீதியில் வீதி உலா நடந்தது.

    வசந்த உற்சவத்தில் 2-வது நாளாக நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமதராக ஏழுமலையான் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார். இதற்கிடையில், வசந்தோற்சவ விழாவையொட்டி 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று 62,076 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 699 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.
    • அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

    இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.

    பத்ராத்திரி, கொத்த குடேம் மற்றும் முலுகு மாவட்டங்களில் சத்தீஸ்கர் தெலுங்கானா எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மாவோயிஸ்டுகள் பெயரில் பரபரப்பு கடிதம் ஒன்று வந்து வெளியாகி உள்ளது.

    அதில் ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.

    இதற்காக மலைப்பகுதிகளை சுற்றிலும் கண்ணி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்துள்ளோம். அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதம் அந்த பகுதி கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு செயலிழப்பு குழுக்களுடன் மலைப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் கவலைப்பட வேண்டாம். வெடி குண்டுகள் இருப்பது குறித்து அறிகுறிகள் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    • செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.
    • பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்தனர்.

    ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா அருகே இன்று காலை செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.

    அப்போது எஞ்சினில் இருந்து ரெயில் பெட்டிகள் தனியாகப் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்ததை அடுத்து ரெயில் எஞ்சினை பின்னோக்கி இயக்கி பெட்டிகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இணைப்பு செயலிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர்.

    • தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும்.
    • தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று ருசி கொண்டா கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவர்களது வலையில் முட்களுடன் கூடிய தவளை கூட்டம் ஒன்று சிக்கியது. அதனை மீனவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.


    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பெரிய உயிரினங்கள் தங்களை தாக்கும் போது இந்த வகை தவளைகள் தங்களது உடலில் உள்ள முட்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்கின்றன.

    இந்த தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும் என தெரிவித்தனர். பின்னர் தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

    • பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின்மகன் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின் 8 வயது இளைய மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மகனை பார்க்க சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர்.
    • உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காலனியை சேர்ந்தவர் வந்தனா. இவரது மகள் பிரசன்னா (வயது3). வந்தனா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு தனியாக வசித்து வந்தார். அப்போது ஸ்ரீராம் என்பவருடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    தனது கள்ளக்காதலனுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் குடியேறினார்.

    மகள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர். வந்தனா பெற்ற மகள் என்ற ஈவு இரக்கம் இன்றி குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்தார். குழந்தை வலியால் அலறி துடித்தது.

    குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. குழந்தையை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பகுதி மக்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துன்புறுத்தியதால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

    போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையிடம் விசாரணை நடத்தினர். வந்தனா அவரது கள்ளக்காதலனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தினந்தோறும் பஸ் இயக்க கோரிக்கை.
    • 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும்.

    திருப்பதி:

    திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி அரசு சொகுசு பஸ் போக்குவரத்தை துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேற்று தொடங்கி வைத்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் யாத்திரையாக பழனிக்கு சென்ற போது அங்கிருந்த பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என தனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தினந்தோறும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி ஆகியோருடன் கலந்து பேசினேன்.

    உடனடியாக பழனிக்கு பஸ் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2 ஆன்மிக தலங்களுக்கும் இடையே பஸ் வசதி தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் அரசு பஸ் காலை 7 மணிக்கு பழனியை சென்றடைகிறது. 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    இதேபோல் பழனியில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்து அடைகிறது.

    பெரியவர்களுக்கு ரூ.680, சிறியவர்களுக்கு ரூ.380 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நேரடியாக பழனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட முடிவு.
    • பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.

    தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து அமராவதியில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.
    • விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

    • பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
    • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலம் பல் நாடு மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்தவர் 2 வயது சிறுமி. இவருக்கு கடந்த மாதம் 4-ந்தேதி காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் இருந்து நீர் வடிதல், வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு வந்தது.

    சிறுமியை அவர்களது பெற்றோர் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சிகிச்சையின் போது தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறுமியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 24-ந்தேதி புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி எச்பி5என்1 பறவை காய்ச்சல் நோயால் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமி இறந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தினர் .

    அப்போது சிறுமி செல்ல பிராணிகள் மற்றும் தெரு நாய்களுடன் விளையாடியது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு காய்ச்சல் வருவதற்கு 2 நாள் முன்பாக கோழி கறிக்கடையில் வேக வைக்காத கோழிக்கறி துண்டு சாப்பிட்டதாக கூறினார்.

    இதன் காரணமாக சிறுமிக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட கறிகளை சாப்பிடக்கூடாது.

    கோழி கறிகளை 100 டிகிரி செல்சியசில் வேக வைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
    • ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.


    பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.

    கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சலூரு மண்டலம் மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20).

    இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அங்குள்ள தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். ராம் பாபுவை முழுமையாக நம்பிய ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ராம்பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றனர். அரிலோவா என்ற இடத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.

    அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்தார்.

    போலீசில் சிக்காமல் இருக்க ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார்.

    இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவரை வரவழைத்தார். ஒரு பைக்கில் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப் பகுதியில் வழியாக அவர்கள் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.

    நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றது. இதனையடுத்து அவர்கள் மற்றொரு நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பினர்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டனர்.

    அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர. இதில் ஐஸ்வர்யா ராம்பாபுவை காதலித்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக ராம்பாபு தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×