தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் படுகாயம்

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின்மகன் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் படுகாயம்
Published on

சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின் 8 வயது இளைய மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மகனை பார்க்க சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com