என் மலர்tooltip icon

    இந்தியா

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
    • பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:

    * தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம்.

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

    * தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும்.

    * பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    * ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது.

    * மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு.

    * பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இப்படிப்பட் பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சடடவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

    அவர்கள் மட்டுமின்றி தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கிறது.

    தொடக்கப்பள்ளி வகுப் பறைகளை கூட போதை பொருட்கள் எளிதில் சென்றடைவதால் குழந்தை கள் போதை பழக்கத்தில் சிக்கி வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

    கேரளாவில் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு உள்ளாவது குறித்து கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஆலோசகர் அலீஷா சனிஷ் வேதனையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    எங்களின் மையத்தில் மறுவாழ்வு பெற்ற 210-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டாம் வகுப்பிலேயே 70 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு உள்ளானது தெரியவந்தது.

    இந்த மையத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட போராடுகிறார்கள்.

    எங்கள் மையத்திற்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் மழலையர் பள்ளியில் படிக்கும் போதே ஹாஷிஸ் எண்ணையை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறான். கிளர்ச்சி அல்லது விரக்தி காரணமாக அந்த சிறுவன் அதனை பயன்படுத்தத் தொடங்க வில்லை.

    தன்னை விட பெரிய குழந்தைகள் பயன்படுத்தியதை பார்த்து, தானும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த விரும்பி இருக்கிறார். பின்பு அதனை பயன்படுத்தியிருக்கிறார். அது கொடுத்த உணர்வு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதனை பயன்படுத்தியிருக்கிறார்.

    இப்படித்தான் பல குழந்தைகள், சிலர் பயன்படுத்துவதை பார்த்து ஆர்வம் காரணமாக தாங்களும் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஆர்வத்தின் காரணமாக போதை பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை போன்று போதைப் பொருள் வாசனை பிடித்து அடிமையாகுபவர்களும் இருக்கிறார்கள். கோட்டயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சம்பவத் தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்திருக் கிறான்.

    அப்போது அவனின் மீது வித்தியாசமான வாசனை வந்ததை அவனது தந்தை கண்டுபிடித்தார். அந்த வாசனையை மறைக்க அந்த சிறுவன் 'மா' இலைகளை தின்றபடி இருந்திருக்கிறார். இந்த வித்தியாசமான பழக்கத்தை சிறுவனின் பெற்றோர் கவனித்தனர். அவனது செயல்பாடு மற்றும் பேச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததையும் பார்த்தனர்.

    ஒரு நாள் அந்த சிறுவன் தனது இளைய சகோதரருடன் சண்டையிட்டார். அப்போது தனது சகோதரனின் மீது அந்த சிறுவன் கத்திரிக்கோலை வேகமாக வீசினார். அந்த கத்திரிக்கோல் அங்கிருந்த டி.வி. மீது விழுந்தது. டி.வி.யின் ஸ்கிரீன் உடைந்தது. சிறுவனின் அந்த ஆக்ரோஷ செயலை பார்த்த பெற்றோர் பீதியடைந்தனர்.

    இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சிறுவனின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு போதை பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவனுக்கு சிகிச்சை பெற செய்திருக்கின்றனர்.

    போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் மூர்க்கத்தனமாக மாறி விடுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் பயன்பாடு ஒருவருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று திருவனந்தபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் டிபின்தாஸ் கூறியிருப்பதாவது:-

    எம்.டி.எம்.ஏ. போன்ற போதை பொருட்கள் பயன்பாடு கடந்த ஆண்டில் கஞ்சாவை முந்தியுள்ளது. இது ஒருவரது உணர்வை மட்டும் மாற்றாது. அவரது தன்னிலையை அழிக்கிறது.

    கடந்த ஆண்டில் எங்களின் மையத்தில் 36 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தோம். மேலும் போதை பழக்கத்ததால் புற்று நோயாளிகளாகிய 47 பேருக்கு சிகிச்சையும் அளித்தோம்.

    18 முதல் 22 வயதுடைய 116 இளைஞர்கள் உள்நோயா ளியாகவும், 80 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். மொத்தமாக கடந்த ஆண்டு எங்களிடம் 530 பேர் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவர்.

    பலர் தங்களது இளைமை காலங்களில் போதை பழக்கத்திற்க அடிமையானவர்கள். மேலும் பலர் பள்ளி படிப்பு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாத நிலைக்கு சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் பிரான்சிஸ் மூத்தேடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற பள்ளி மாணவிகளும் வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவிகள் அதிரப்பள்ளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பள்ளி நேரத்தில் செல்கின்றனர். தங்களின் நண்பர்களுடன் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வழக்கம்போல் திரும்பி வந்து விடுகின்றனர்.

    திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. அதுபோன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அனைவருமே போதை பழக்கத்திற்கு சென்று விடுவதில்லை. சிலர் அந்த பழக்கத்திற்கு தள்ளப்படு கிறார்கள்.

    முதலில் போதைப் பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள். அதன்பிறகு விலைக்கு வாங்க வைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு பள்ளி மாணவிகள் இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்களாக மாறி விடுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி.

    போதைப்பொருள் பயன்பாடு ஆரம்ப காலத்தில் ஒருவரின் மூளை வளர்ச்சியை நிரந்தரமாக மாற்றும். ஒரு குழந்தைக்கு மரபணு பாதிப்பு இருந்தால் 18 வயதுக்கு பிறகு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது. அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையாகலாம். மேலும் அவர்களுக்கு மனநல கோளாறுகளும் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    பள்ளி குழந்தைகள் தொடக்கக்கல்வி படிக்கும் போதே, போதை பழக்கத்தில் சிக்குவது பற்றி வெளியாகியிருக்கும் தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
    • இந்த கொலை குற்றத்திற்காக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை 2023 இல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்து சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

    2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

    ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

    இதன்பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பேச உள்ளனர். இதன்பின் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    அதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

    • உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
    • தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.

    * வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம் என்றார். 



    • கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    • வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.

    தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.

    தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.

    வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
    • விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது

    நாகர்கோவில்:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.

    காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தமிழக-கர்நாடகா எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து பஸ் கண்டக்டரை தாக்கிய வர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    பஸ் டிரைவர் மீதான மராட்டிய தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும்.

    எம்.இ.எஸ். கட்சியை தடை செய்ய வேண்டும். ,மேகதாது , கலச பண்டூரி, மகதாயி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னட சலுவளி வாட்டள் கட்சி தலைவர் வாட்டள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் சார்பில், கர்நாடக மாநிலத்தில் `அகண்ட் கர்நாடக பந்த்' என்ற பெயரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக, ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில், இன்று காலை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 30 பேரை கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் இன்று தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எல்லை பகுதியில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு கடந்த மாதம் கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டது. அப்போது மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்டார்.

    இந்த பிரச்சினை இருமாநிலத்திலும் மொழி பிரச்சினையாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த சம்பவத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.


    இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கன்னட அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடியது.

    பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ரெயில், மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் சிக்கமகளூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது போராட்டக்காரர்கள் பஸ்நிலைய வளாகத்தில் திறந்து இருந்த கடைகளை அடைக்க சொன்னார்கள்.


    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. மேலும் வலுகட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்ல கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    இதேபோல் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மைசூர் கிராமப்புற பஸ்நிலையத்தில் இயக்கப்பட்ட பஸ்களை போராட்டக்காரர்கள் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    விஜயநகர மாவட்டத்திலும் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், கார் ஓடியது. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் திறந்து இருந்தன.

    பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் மராட்டியத்தில் இருந்து பெலகாவிக்கு வரும் மராட்டிய அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெலகாவி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் பெலகாவி மாவட்டத்தில் சாலைகளில் டயர்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் மட்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    • மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.

    போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.

    ×