என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான ஆனியன் வரகரிசி அடை
Byமாலை மலர்24 Feb 2017 5:44 AM GMT (Updated: 24 Feb 2017 5:44 AM GMT)
உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஆனியன் வரகரிசி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிபருப்பு - முக்கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு -அரை கப்
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - 1 பிடி
கல் உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
அடை வார்க்க :
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
கொத்துமல்லி - தழை
செய்முறை :
* வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
* வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.
* சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வரகு அரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிபருப்பு - முக்கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு -அரை கப்
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - 1 பிடி
கல் உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
அடை வார்க்க :
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
கொத்துமல்லி - தழை
செய்முறை :
* வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
* வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.
* சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X