என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்
Byமாலை மலர்14 Feb 2017 7:28 AM GMT (Updated: 14 Feb 2017 7:28 AM GMT)
சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கம்பு, பருப்பு வைத்து சத்தான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப்
பாசி பயிறு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க :
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
பொடிக்க :
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 4
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
* குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் போட்டு வேகவிடவும்.
* சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.
* தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப்
பாசி பயிறு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க :
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
பொடிக்க :
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 4
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
* குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் போட்டு வேகவிடவும்.
* சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.
* தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X