search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரைப்பை மற்றும் சிறு குடலில் ஏற்படும் குடல் புண்கள்
    X
    இரைப்பை மற்றும் சிறு குடலில் ஏற்படும் குடல் புண்கள்

    இரைப்பை மற்றும் சிறு குடலில் ஏற்படும் குடல் புண்கள்

    இரைப்பையில் அமிலம் அதிக அளவில் சுரக்கும் பொழுதும் எச்பைலோரஸ் என்ற கிருமிகள் தாக்குதல் ஏற்படும் பொழுதும் குடல் புண் உண்டாகின்றது.
    குடல் புண் பொதுவாக இரைப்பை சிறுகுடல் ஆரம்ப பகுதியில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் ஏற்படும். இரைப்பை மற்றும் சிறுகுடல் ஆரம்ப பகுதியில் ஏற்படும் புண் அதிக அளவில் காணப்படுகின்றது. இரைப்பையில் அமிலம் அதிக அளவில் சுரக்கும் பொழுதும் எச்பைலோரஸ் என்ற கிருமிகள் தாக்குதல் ஏற்படும் பொழுதும் குடல் புண் உண்டாகின்றது.

    அமிலம் அதிக அளவில் சுரப்பதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் குறிப்பிடலாம்:

    * அதிக கார வகைகள் உணவில் சேர்ப்பது

    * நேரம் கட்ட நேரம் உணவு அருந்துதல்

    * மது அருந்துதல்

    * புகை பிடிப்பது

    * மிளகாய் அதிக அளவில் சேர்த்து எண்ணையில் சமைத்த மாமிசம் உண்ணுதல்

    * அதிக அளவில் கோபம் கொள்வது மற்றும் உணர்ச்சி வசப்படுதல்

    * சில மாத்திரைகள் தலை வலிக்கு மூட்டுவலிக்கு மேலும் உடல் வலிக்கு சாப்பிடும் பொழுது குடல் புண் உண்டாகும்.

    * கணையத்தில் ஏற்படும் வியாதினால் குடல் புண் உண்டாகும்.

    * இரைப்பையில் ஏற்படும் புண்ணை கவனிக்காமல் விட்டு விட்டால் புற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

    சிறு குடலில் ஏற்படும் புண்ணிற்கு கீழ்க்கண்ட காரணங்களாகும்:-

    * டைபாய்டு காய்ச்சல்

    * காசநோய், பெருங்குடல் புண்ணிற்கு குடல் புழுக்கள் மற்றும் அமீபாவின் தாக்குதல்

    * இரைப்பை புற்று நோய் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    * இரைப்பை புண் ஏற்பட்டால் வயிற்றில் வலி ஏற்படும், வயிற்று எரிச்சல் ஏற்படும் சிலருக்கு வாந்தி ஏற்படும்

    * குடல் புண்ணை கவனிக்கவில்லை என்றால் புண் அதிகமாகி இரத்த வாந்தி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. சில சமயம் கருப்பாக மலம் கழிப்பார்கள்.

    * குடல் புண்ணை பரிசோதனை செய்வதற்கு வாயில் குழாய் செலுத்தி புண்ணைப்பற்றி நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    * அது போலவே ஆசனவாய் வழியாக குழாய் செலுத்தி எந்த வகை புண் இருக்கின்றது என்று அறியலாம்.

    * மேற்கண்ட நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறுவது நன்று.
    Next Story
    ×