search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அதிக உடல் பருமனால் வரும் கேடுகள்
    X

    அதிக உடல் பருமனால் வரும் கேடுகள்

    உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.
    நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.  

    அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது. உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

    * பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.

    * அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

    * எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.

    * முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும்.  ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.

    * இருதய நோய்களை உண்டாக்கும்.

    * ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

    * சம்போக சக்தி குறைந்து விடும்.

    * பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.



    * உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.

    * அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.

    * உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.

    * அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது.  இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.

    * நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.

    * குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

    * இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.

    * பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும்.  இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது.  இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.  மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
    Next Story
    ×