என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
![இளநீர் எனும் இயற்கைக் கொடை இளநீர் எனும் இயற்கைக் கொடை](https://img.maalaimalar.com/Articles/2016/Oct/201610010819073768_Coconut-water-is-a-natural-gift_SECVPF.gif)
X
இளநீர் எனும் இயற்கைக் கொடை
By
மாலை மலர்1 Oct 2016 2:49 AM GMT (Updated: 1 Oct 2016 2:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இளநீர், குடல் புழுக்களை அழிக்கிறது. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.
நமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று, இளநீர்.
உடல் சூட்டைத் தணிப்பதுடன், அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் இளநீர் உள்ளது.
இளநீர், செரிமான சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும்.
செரிமானக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர், உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரிசெய்கிறது.
இளநீர், குடல் புழுக்களை அழிக்கிறது. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற உதவுகிறது. இளநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித ‘ஜெல்’, கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக உள்ளது.
இளநீரில் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாகும்.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கக்கூடும். ஏதாவது ஆகாரம் உண்டபின்னரே சாப்பிட வேண்டும்.
பேன், பொடுகு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இளநீரை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இந்த அவதிகளில் இருந்து தப்பிக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீர் பருகினால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)