என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பிரசவ நேரத்தில் சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’
கர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நிஜ வலி: முதுகுப்புறத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றின் முன்பக்கம்வரை வந்து அடிவயிற்றில் இறங்கி வலிக்க ஆரம்பிக்கும்.
பொய் வலி: வயிற்றின் முன்பக்கம் மட்டுமே வலி வரும்.
வலி நேர இடைவேளை!
நிஜ வலி: குறிப்பிட்ட நேர இடைவேளையில் வலிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். பின்னர் அந்த நேர இடைவேளை குறைந்து, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என நேர இடைவேளை சுருங்கும். இப்படிச் சுருங்கச் சுருங்க, வலியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்படியாக நேரம் குறைந்தும், வலியின் அளவு அதிகரித்துக்கொண்டும் வந்து, 10, 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிற வலிகள், தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும்.
பொய் வலி: பொய் வலி சீரான இடைவேளையின்றி, தன் போக்குக்கு வந்துபோகும்.
டிஸ்சார்ஜ்!
நிஜ வலி: பெண்ணுறுப்பில் சளிபோன்ற திரவம் கசியும். இதனுடன் இரண்டு, மூன்று ரத்தத்துளிகளும் வெளியேறும்.

வயிற்றின் அசைவு!
நிஜ வலி: வயிற்றின் மேல் கைவைத்துப் பார்த்தால், கருப்பை இறுக்கமாகி இறுக்கமாகித் தளர்வதை உணரமுடியும். இந்த இயக்கமும்கூட சீரான நேர இடைவேளையில் நடைபெறும். எழுந்து நடந்து பார்த்தாலும் வலியில் மாற்றமில்லாமல் இருக்கும்.
பொய் வலி: பொய் வலியில் கருப்பையின் இயக்கம் இருக்காது என்பதால், வயிற்றில் கைவைத்துப் பார்த்தால் எந்த அசைவும் இருக்காது. வலி வரும் சமயம் எழுந்து நடந்துபார்த்தால் வலி மறைந்துவிடும். ஒருவேளை உண்மையான பிரசவ வலி ஏற்பட்டிருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராகச் செய்ய வேண்டியவை இவை…
* காற்றை மூக்கு வழியாக முடிந்தளவு உள்ளிழுத்து, பிறகு வாயைக் குவித்து வாய்வழியாக வெளியேற்றவும். இது பிரசவ வலியின் வேதனையில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும்.
* நடக்கலாம் அல்லது பிடித்தப் படத்தைப் பார்க்கலாம். இவையும் வலியின் வேதனையிலிருந்து மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்.
* மிதமான வெந்நீரில் குளித்தால் வலிக்கு இதமாக இருக்கும்.
* வலி ஆரம்பித்ததும், அடுத்த வலி வரும் இடைவேளைக்குள் ஓய்வெடுக்கலாம், குட்டித் தூக்கம் போட்டுக்கொள்ளலாம். எதிர்கொள்ளவிருக்கிற பெரிய வலியைச் சமாளிக்க இந்த ஓய்வு உடலுக்குத் தேவை.
* 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வருகிறபோது தாமதிக்காமல் பாதுகாப்பான பயணத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.’’
உண்மையான பிரசவ வலி வரும்போது, வயிறு கல் போல இறுக்கமாகும். அந்த வலி வராத நேரத்தில், வயிறு கல் போல இல்லாமல் நார்மலாக இருக்கும். ஆனால், பொய் பிரசவ வலி வரும்போது, இறுக்கமாகிற வயிறானது, அரைமணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ அப்படியே இருந்தால், கருப்பையின் உள்ளே குழந்தையுடன் இணைந்திருக்கிற நஞ்சுக்கொடி பிரிந்துவிட்டது என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் கருப்பைக்குள்ளேயே ரத்தப் போக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கும். அது வெளியில் தெரியாது. குழந்தையின் அசைவுகளும் தெரியாது. இந்தச் சமயத்தில் உடனடியாக மருத்துவமனைக்குக் கிளம்பி விடுங்கள். இல்லையென்றால், வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட வாய்ப்பிருக்கிறது, கவனம்.
சில பெண்களுக்கு 7 அல்லது 8-ம் மாதங்களிலேயே நிஜப் பிரசவ வலி வந்து விடும். இந்த வலியை, ‘இன்னும்தான் நாளிருக்கே’ என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அலட்சியப்படுத்தினால், வயிறு இறங்கி, பனிக்குடம் உடைவது, குழந்தைக்கு மூச்சுத்திணறுவது எனப் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
நிஜ வலி: முதுகுப்புறத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றின் முன்பக்கம்வரை வந்து அடிவயிற்றில் இறங்கி வலிக்க ஆரம்பிக்கும்.
பொய் வலி: வயிற்றின் முன்பக்கம் மட்டுமே வலி வரும்.
வலி நேர இடைவேளை!
நிஜ வலி: குறிப்பிட்ட நேர இடைவேளையில் வலிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். பின்னர் அந்த நேர இடைவேளை குறைந்து, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என நேர இடைவேளை சுருங்கும். இப்படிச் சுருங்கச் சுருங்க, வலியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்படியாக நேரம் குறைந்தும், வலியின் அளவு அதிகரித்துக்கொண்டும் வந்து, 10, 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிற வலிகள், தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும்.
பொய் வலி: பொய் வலி சீரான இடைவேளையின்றி, தன் போக்குக்கு வந்துபோகும்.
டிஸ்சார்ஜ்!
நிஜ வலி: பெண்ணுறுப்பில் சளிபோன்ற திரவம் கசியும். இதனுடன் இரண்டு, மூன்று ரத்தத்துளிகளும் வெளியேறும்.
பொய் வலி: டிஸ்சார்ஜ் எதுவும் இருக்காது.

வயிற்றின் அசைவு!
நிஜ வலி: வயிற்றின் மேல் கைவைத்துப் பார்த்தால், கருப்பை இறுக்கமாகி இறுக்கமாகித் தளர்வதை உணரமுடியும். இந்த இயக்கமும்கூட சீரான நேர இடைவேளையில் நடைபெறும். எழுந்து நடந்து பார்த்தாலும் வலியில் மாற்றமில்லாமல் இருக்கும்.
பொய் வலி: பொய் வலியில் கருப்பையின் இயக்கம் இருக்காது என்பதால், வயிற்றில் கைவைத்துப் பார்த்தால் எந்த அசைவும் இருக்காது. வலி வரும் சமயம் எழுந்து நடந்துபார்த்தால் வலி மறைந்துவிடும். ஒருவேளை உண்மையான பிரசவ வலி ஏற்பட்டிருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராகச் செய்ய வேண்டியவை இவை…
* காற்றை மூக்கு வழியாக முடிந்தளவு உள்ளிழுத்து, பிறகு வாயைக் குவித்து வாய்வழியாக வெளியேற்றவும். இது பிரசவ வலியின் வேதனையில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும்.
* நடக்கலாம் அல்லது பிடித்தப் படத்தைப் பார்க்கலாம். இவையும் வலியின் வேதனையிலிருந்து மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்.
* மிதமான வெந்நீரில் குளித்தால் வலிக்கு இதமாக இருக்கும்.
* வலி ஆரம்பித்ததும், அடுத்த வலி வரும் இடைவேளைக்குள் ஓய்வெடுக்கலாம், குட்டித் தூக்கம் போட்டுக்கொள்ளலாம். எதிர்கொள்ளவிருக்கிற பெரிய வலியைச் சமாளிக்க இந்த ஓய்வு உடலுக்குத் தேவை.
* 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வருகிறபோது தாமதிக்காமல் பாதுகாப்பான பயணத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.’’
உண்மையான பிரசவ வலி வரும்போது, வயிறு கல் போல இறுக்கமாகும். அந்த வலி வராத நேரத்தில், வயிறு கல் போல இல்லாமல் நார்மலாக இருக்கும். ஆனால், பொய் பிரசவ வலி வரும்போது, இறுக்கமாகிற வயிறானது, அரைமணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ அப்படியே இருந்தால், கருப்பையின் உள்ளே குழந்தையுடன் இணைந்திருக்கிற நஞ்சுக்கொடி பிரிந்துவிட்டது என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் கருப்பைக்குள்ளேயே ரத்தப் போக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கும். அது வெளியில் தெரியாது. குழந்தையின் அசைவுகளும் தெரியாது. இந்தச் சமயத்தில் உடனடியாக மருத்துவமனைக்குக் கிளம்பி விடுங்கள். இல்லையென்றால், வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட வாய்ப்பிருக்கிறது, கவனம்.
சில பெண்களுக்கு 7 அல்லது 8-ம் மாதங்களிலேயே நிஜப் பிரசவ வலி வந்து விடும். இந்த வலியை, ‘இன்னும்தான் நாளிருக்கே’ என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அலட்சியப்படுத்தினால், வயிறு இறங்கி, பனிக்குடம் உடைவது, குழந்தைக்கு மூச்சுத்திணறுவது எனப் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
ஜதார பரிவார்டாசனம் இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். எண்ண ஓட்டங்கள் குறையும்.
செய்முறை
தரையில் படுத்து பாதங்கள் தரையில் பதித்து கால்களை மடித்த நிலையிலோ அல்லது ஒரு சிறிய உயரமான நிலையிலோ வசதியாக வைத்துக்கொள்ளுங்கள். இரு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். கண்களை மூடி, மனதை அமைதிப்படுத்துங்கள். பாய் விரிப்பில் முதுகெலும்பு நன்கு படட்டும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மூச்சை மெதுவாக வெளியேவிட்டு, உள்ளிழுங்கள். இதை 6 முறை செய்யவும். பிறகு சில விநாடிகள் அமைதி. கால்களை உயரத்தில் வைத்திருந்தால் அதை எடுத்துவிட்டு, கால்களை மடித்து இடைவெளிவிட்டு பாதங்களைத் தரையில் பதியுங்கள்.
மூச்சை உள்ளிழுத்தபடியே, ஒரு கையை மேலே தூக்கி, தலைக்கு மேல் கொண்டுசென்று தரையில் வைக்கவும். ஓரிரு விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி அந்தக் கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதேபோல அடுத்த கையில் செய்யவும். 6-6 முறைகள் செய்யலாம்.
இரு கைகளுடன் அசைவுகள்அடுத்து சில விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல் தூக்கி தரையில் தொடவும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கைகளைத் தளர்வாக வைத்துக்
கொள்ளுங்கள். 6 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். எண்ண ஓட்டங்கள் குறையும்.
தரையில் படுத்து பாதங்கள் தரையில் பதித்து கால்களை மடித்த நிலையிலோ அல்லது ஒரு சிறிய உயரமான நிலையிலோ வசதியாக வைத்துக்கொள்ளுங்கள். இரு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். கண்களை மூடி, மனதை அமைதிப்படுத்துங்கள். பாய் விரிப்பில் முதுகெலும்பு நன்கு படட்டும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மூச்சை மெதுவாக வெளியேவிட்டு, உள்ளிழுங்கள். இதை 6 முறை செய்யவும். பிறகு சில விநாடிகள் அமைதி. கால்களை உயரத்தில் வைத்திருந்தால் அதை எடுத்துவிட்டு, கால்களை மடித்து இடைவெளிவிட்டு பாதங்களைத் தரையில் பதியுங்கள்.
மூச்சை உள்ளிழுத்தபடியே, ஒரு கையை மேலே தூக்கி, தலைக்கு மேல் கொண்டுசென்று தரையில் வைக்கவும். ஓரிரு விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி அந்தக் கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதேபோல அடுத்த கையில் செய்யவும். 6-6 முறைகள் செய்யலாம்.
இரு கைகளுடன் அசைவுகள்அடுத்து சில விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல் தூக்கி தரையில் தொடவும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கைகளைத் தளர்வாக வைத்துக்
கொள்ளுங்கள். 6 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். எண்ண ஓட்டங்கள் குறையும்.
ஊட்டச்சத்து மிகுந்த இந்த ‘மோங்க்’ என்ற பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே இருக்கிறது. இனிப்பு சத்து நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கும் இது ஏற்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் புதிய வகை பழ ரகம் ஒன்றை உற்பத்தி செய்யும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியில் இமாச்சலபிரதேசத்திலுள்ள பாலம்பூர் பகுதியில் ‘மோங்க்’ என்ற பழம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த பழ ரகத்தின் பூர்வீகம் சீனா. அங்குதான் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த இந்த பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே இருக்கிறது. இனிப்பு சத்து நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கும் இது ஏற்றது.
இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. இந்த பழ ரகத்தை இங்குள்ள சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் விளைவித்து பயன்படுத்தும் முயற்சியில் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஹிமாலயன் உயிர் வள தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். பரிசோதனை அடிப்படையில் அங்கு சாகுபடி செய்யப்பட்ட மோங்க் கொடிகள் நன்றாக வளர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலை கொடுத்துள்ளன. அவை சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்டது.
இதுபற்றி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘நம் நாட்டில் 6 கோடி பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பழம் அவசியமானது. பண்ணையில் விளைவித்து நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தன. இப்போது நாங்கள் மோங்க் பழத்தில் சாறு அளவை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் விரைவில் கடைகளில் கிடைக்கும்’’ என்றார்.
இந்த பழ ரகத்தின் பூர்வீகம் சீனா. அங்குதான் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த இந்த பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே இருக்கிறது. இனிப்பு சத்து நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கும் இது ஏற்றது.
இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. இந்த பழ ரகத்தை இங்குள்ள சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் விளைவித்து பயன்படுத்தும் முயற்சியில் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஹிமாலயன் உயிர் வள தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். பரிசோதனை அடிப்படையில் அங்கு சாகுபடி செய்யப்பட்ட மோங்க் கொடிகள் நன்றாக வளர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலை கொடுத்துள்ளன. அவை சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்டது.
இதுபற்றி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘நம் நாட்டில் 6 கோடி பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பழம் அவசியமானது. பண்ணையில் விளைவித்து நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தன. இப்போது நாங்கள் மோங்க் பழத்தில் சாறு அளவை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் விரைவில் கடைகளில் கிடைக்கும்’’ என்றார்.
மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பசலைக் கீரை - 1 கட்டு
கடலை மாவு- 1 கப்
பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.
சூப்பரான கீரை பக்கோடா ரெடி.
பசலைக் கீரை - 1 கட்டு
கடலை மாவு- 1 கப்
பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை:
கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.
சூப்பரான கீரை பக்கோடா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
திருமணத்திற்கு பிறகுகூட இலைமறைவு காயாக அனுமதிக்கப்பட்ட பாலியல் உறவு, வெளிப்படையாக மார்க்கெட்டிற்கு வந்துவிட்ட பிறகு அதன் விலையும் உயர்ந்துவிட்டது. பொது இடங்களில் மற்றவர்களிடம் இதைப்பற்றி பேசவே தயங்கும் தலைமுறைகள் இன்று இல்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக திகட்ட திகட்ட எல்லாமுமே வலைத்தளங்களில் கிடைத்துவிடுகிறது. அவைகள் சமூகத்தில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளால் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.
சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்கள் பற்றி எடுக்கப்பட்ட சர்வே, ‘22-ல் இருந்து 34 வயது வரையிலான இளைஞர்கள் அதுவே கதியென்று கிடக்க பாலியல் விஷயங்களே காரணமாக இருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது. அவர்களின் மாத வருமானத்தில் 30 சதவீதம் இதற்கே செலவாகிவிடுகிறது. இதில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.
எந்த ஓட்டல் உணவு தேவைப்படுகிறதோ அதை ஆன்லைனில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் வீட்டில் இருந்தே விரும்பிய சுவையை ருசிக்கலாம். அதுபோல், ‘போட்டோவை பாருங்கள்.. தேவையை சொல்லுங்கள்.. வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆன்லைன் ‘வியாபாரம்’ அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இ்ந்த வியாபாரத்திற்கான விளம்பரங்களிலும் புதிய யுக்திகளை கையாளுகிறார்கள். அவர்களாகவே வயதுக்குதக்கபடி பெண்களை வகைப் படுத்திக்கொள்கிறார்கள். கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், அலுவலகம் செல்வோர் என்று தனித்தனியாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமாக கட்டணம் நிர்ணயித்து வலைத் தளங்களில் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.
இத்தகைய விளம்பரங்களை பார்த்து, தங்களது பாலியல் செயல்பாடுகளை ரகசியமாக தொடர விரும்பும் இளைஞர்கள் பல்வேறு விதமான ஆபத்துக்களை இதில் சந்திக்கிறார்கள். ஏராளமான பொருள் இழப்புகளும், மன அழுத்தங்களும், குற்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. ‘பிளாக்மெயில்’ செய்யப்படும் சிக்கல்களும் உண்டு.

இரண்டாவது வகையான ரகசியத்தன்மை கொண்டவர்கள் எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்த விரும்புவார்கள். இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையோ, இவர்கள் பெண்கள் விஷயத்தில் எத்தகைய குணாதிசயங்களை கொண்டவர்கள் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. தங்களது அத்தனை செயல்பாடுகளிலும் ரகசியம் காக்கும் இவர்கள், பாலியல் வேட்கை விஷயத்தில் மர்மமாக நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே சமூக வலைத்தளம் தொடர்பான பாலியல் செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவைகளில் ஏமாறுவது, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவெடுப்பது போன்றவைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
‘எல்லாம் வலைத் தளமயம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மரபுரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், தங்கள் தொழில் நசிந்துபோய்விட்டதாக புலம்புகிறார்கள். ‘சந்தைக்கு வராமலே நேரடியாக கொள்முதல் நடந்துவிடுகிறது’ என்று புலம்புகிறார்கள். இ்ன்னொருபுறத்தில் இவர்களை நம்பி வாழ்ந்த இடைத்தரகர்கள் கூட்டமும், ‘வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக’ சொல்கிறது.
இளைஞர்கள் வலைத்தள பாலியலை பாதுகாப்பாக நினைக்கிறார்கள். ஆனால் பெருமளவு பணத்தை அதில் இழந்துகொண்டிருக்கிறார்கள். இழப்புகளை அவர்களால் வெளியில் சொல்லமுடிவதில்லை. விளம்பரத்தின் மூலம் அவர்கள் ஏமாறும்போது, விளம்பரம் செய்தவர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடிவதில்லை. மர்மமானவர்களுக்காக தங்கள் மாதச் சம்பளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள்.
வீடியோ சாட், செல்போன் சாட் மூலம் பணத்தை இழப்பதோடு, அவர்களது பாலியல் எண்ணங்களும் பாதை மாறி சென்றுகொண்டிருக்கிறது. இணைய பக்கங்களில் "பேச விருப்பமா" என்று ஒரு அழகான பெண் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். சரி பேசித்தான் பார்ப்போமே என்று பேச ஆரம்பித்துவிட்டால், மணிக்கணக்கில் பேசி பணத்தை இழக்கவேண்டியதிருக்கும். வலைத் தளத்தில் வலைவீசுபவர்களில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களே!
இந்த வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பெண்களை ஆசைகாட்டி இந்த தொழிலுக்கு அழைத்துவந்து அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலும் வெகு நீளமாகவே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்கள் பற்றி எடுக்கப்பட்ட சர்வே, ‘22-ல் இருந்து 34 வயது வரையிலான இளைஞர்கள் அதுவே கதியென்று கிடக்க பாலியல் விஷயங்களே காரணமாக இருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது. அவர்களின் மாத வருமானத்தில் 30 சதவீதம் இதற்கே செலவாகிவிடுகிறது. இதில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.
எந்த ஓட்டல் உணவு தேவைப்படுகிறதோ அதை ஆன்லைனில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் வீட்டில் இருந்தே விரும்பிய சுவையை ருசிக்கலாம். அதுபோல், ‘போட்டோவை பாருங்கள்.. தேவையை சொல்லுங்கள்.. வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆன்லைன் ‘வியாபாரம்’ அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இ்ந்த வியாபாரத்திற்கான விளம்பரங்களிலும் புதிய யுக்திகளை கையாளுகிறார்கள். அவர்களாகவே வயதுக்குதக்கபடி பெண்களை வகைப் படுத்திக்கொள்கிறார்கள். கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், அலுவலகம் செல்வோர் என்று தனித்தனியாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமாக கட்டணம் நிர்ணயித்து வலைத் தளங்களில் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.
இத்தகைய விளம்பரங்களை பார்த்து, தங்களது பாலியல் செயல்பாடுகளை ரகசியமாக தொடர விரும்பும் இளைஞர்கள் பல்வேறு விதமான ஆபத்துக்களை இதில் சந்திக்கிறார்கள். ஏராளமான பொருள் இழப்புகளும், மன அழுத்தங்களும், குற்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. ‘பிளாக்மெயில்’ செய்யப்படும் சிக்கல்களும் உண்டு.
மனிதர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள், ரகசியத்தன்மை கொண்டவர்கள் என்று இருவகையினர் உண்டு. வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள் எதையும் நேருக்கு நேர் சந்திக்க விரும்புவார்கள். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பாலியல் வேட்கை விஷயத்திலும் நேரடியான அணுகு முறையை கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்கள். வெளிப்படையாக அதை பற்றி நண்பர்களிடம் பேசவும் செய்வார்கள்.

இரண்டாவது வகையான ரகசியத்தன்மை கொண்டவர்கள் எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்த விரும்புவார்கள். இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையோ, இவர்கள் பெண்கள் விஷயத்தில் எத்தகைய குணாதிசயங்களை கொண்டவர்கள் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. தங்களது அத்தனை செயல்பாடுகளிலும் ரகசியம் காக்கும் இவர்கள், பாலியல் வேட்கை விஷயத்தில் மர்மமாக நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே சமூக வலைத்தளம் தொடர்பான பாலியல் செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவைகளில் ஏமாறுவது, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவெடுப்பது போன்றவைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
‘எல்லாம் வலைத் தளமயம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மரபுரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், தங்கள் தொழில் நசிந்துபோய்விட்டதாக புலம்புகிறார்கள். ‘சந்தைக்கு வராமலே நேரடியாக கொள்முதல் நடந்துவிடுகிறது’ என்று புலம்புகிறார்கள். இ்ன்னொருபுறத்தில் இவர்களை நம்பி வாழ்ந்த இடைத்தரகர்கள் கூட்டமும், ‘வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக’ சொல்கிறது.
இளைஞர்கள் வலைத்தள பாலியலை பாதுகாப்பாக நினைக்கிறார்கள். ஆனால் பெருமளவு பணத்தை அதில் இழந்துகொண்டிருக்கிறார்கள். இழப்புகளை அவர்களால் வெளியில் சொல்லமுடிவதில்லை. விளம்பரத்தின் மூலம் அவர்கள் ஏமாறும்போது, விளம்பரம் செய்தவர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடிவதில்லை. மர்மமானவர்களுக்காக தங்கள் மாதச் சம்பளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள்.
வீடியோ சாட், செல்போன் சாட் மூலம் பணத்தை இழப்பதோடு, அவர்களது பாலியல் எண்ணங்களும் பாதை மாறி சென்றுகொண்டிருக்கிறது. இணைய பக்கங்களில் "பேச விருப்பமா" என்று ஒரு அழகான பெண் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். சரி பேசித்தான் பார்ப்போமே என்று பேச ஆரம்பித்துவிட்டால், மணிக்கணக்கில் பேசி பணத்தை இழக்கவேண்டியதிருக்கும். வலைத் தளத்தில் வலைவீசுபவர்களில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களே!
இந்த வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பெண்களை ஆசைகாட்டி இந்த தொழிலுக்கு அழைத்துவந்து அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலும் வெகு நீளமாகவே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
மனிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சனைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
“ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
பரிசோதனைகள்
பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.
ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க…
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.
தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
“ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
பரிசோதனைகள்
பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.
தொடர்ந்து, எந்தெந்தச் சூழலில் மேற்கூறிய அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கின்றன என்று பார்க்கப்படும். உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிகப் புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ, அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.
ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க…
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.
தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு சூப்பரான உணவு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
மைதா - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
மைதா - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
விரும்பினால் மேலே சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறலாம். மைதாவிற்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.
இப்போது குழந்தையின்மைப் பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.
கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.

ஆண்களைப் பொறுத்தவரை குடிப்பழக்கம், தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளுதல், சிறிய வயதில் அம்மைக்கட்டு வந்தவர்கள், ஹெர்னியா அறுவை சிகிச்சை, விரைப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை, பந்து போன்ற பொருள்களால் ஏற்படும் காயங்கள், விந்தணுக்கள் வெளியேறும் பாதைகளில் அடைப்பு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக நேரம் தோல் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்கள், சுரங்கங்கள், உலைகள், கொதிகலன்களில் பணியாற்றுபவர்கள், தொடர்ந்து அடுப்பருகில் நின்று சமைப்பவர்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்சனைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.
சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.
நவீன காலத்தில் ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. வயதுதான் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம். நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வேண்டும் என்றெல்லாம் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால், குழந்தை பிறந்தால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற குழப்பம். பொருளாதாரரீதியாகத் தயாராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதமாகிவிடுகிறது.
கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள். நார்த்திசுக் கட்டிகள் 20, 30 சதவிகிதம் பேருக்கு காணப்படும். சிறிய அளவிலான கட்டிகளை அகற்ற வேண்டியதில்லை. கர்ப்பப்பையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான கட்டிகள் இருந்து, கர்ப்பப்பை பெரிதாக இருந்தால், அவை கர்ப்பத்தை பாதிக்கும். அவற்றை அகற்ற வேண்டும். இந்தப் பிரச்னை பரம்பரையாக வரக்கூடும். அம்மாவுக்கு நார்திசுக்கட்டிகள் இருந்திருந்தால், மகளுக்கும் வரக்கூடும். கர்ப்பப்பையை அடைத்துக் கொண்டிருக்கும் கட்டிகளை நீக்கினால்தான் குழந்தை தங்கும்.
மற்றொரு பொதுவான பிரச்னை ‘ஓவரியன் சிஸ்ட்’ எனப்படும் சாக்லேட் கட்டிகள். மாதவிடாய் சுழற்சியின்போது வெளியேறும் ரத்தத்தின் சில துளிகள் கர்ப்பப்பையின் முன்னாலும் பின்னாலும் தேங்கிவிடும். அந்த ரத்தம் உறைந்து, பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு சாக்லேட் நிறத்தில் இருக்கும். அதனால்தான் `சாக்லேட் கட்டி’ என்கிறோம். சிலருக்கு இந்தக் கட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிதாக ஆகிவிடும்.

பக்கத்திலிருக்கும் பகுதிகளுடன் ஒட்டிக்கொள்வதால், கருக்குழாய் தடைப்படும். இந்தக் கட்டிகளால் சிலருக்கு தாம்பத்யமே வலி நிறைந்ததாக மாறிவிடும். கருக்குழாய் அடைப்பு, கர்ப்பப்பைக்குள் சிறிய சதை வளர்தல், கருக்குழாய் சூலகம், அதிலுள்ள சிறிய ரத்தக்குழாய்கள் என ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை குடிப்பழக்கம், தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளுதல், சிறிய வயதில் அம்மைக்கட்டு வந்தவர்கள், ஹெர்னியா அறுவை சிகிச்சை, விரைப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை, பந்து போன்ற பொருள்களால் ஏற்படும் காயங்கள், விந்தணுக்கள் வெளியேறும் பாதைகளில் அடைப்பு போன்ற காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக நேரம் தோல் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர்கள், சுரங்கங்கள், உலைகள், கொதிகலன்களில் பணியாற்றுபவர்கள், தொடர்ந்து அடுப்பருகில் நின்று சமைப்பவர்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
இவை தவிர ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை ஹார்மோன் பிரச்சனைகள். தைராய்டு குறைபாடு, மூளையிலிருந்து சுரக்கும் `புரோலாக்டின்’ என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைப்படும். இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருந்தால், சிலருக்கு மார்பில் நீர் கசியும். புரோலாக்டின் சுரப்பு அதிகரித்தால், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும். அதன் காரணமாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து வெளியே வருவது கடினமாகிவிடும். ஆண்களுக்கும் தைராய்டு குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்திக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருக்கலாம். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளை எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.
சுயஇன்பத்துக்கும் குழந்தையின்மைக்கும் தொடர்பில்லை. மாதவிடாய் சுழற்சி போன்று விந்தணுக்கள் உருவாவதும் சுழற்சிதான். விந்தணுக்கள் சிறிய அளவில் உருவாகி முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். அப்படி முதியர்ச்சியடையும்போது பழைய விந்தணுக்கள் வெளியேறி, புதியவை உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு.
அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.
ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.
அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.
ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.
இட்லி, தோசைக்கு சுவையான ஆரோக்கியமான இட்லி பொடிகளை தயார் செய்யலாம். இன்று கறிவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - அரை கப்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :
வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுக்கவும்.
மிக்சியில் கறிவேப்பிலையை கொட்டி அரைக்கவும்.
அதன் பின்னர் அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்து, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கறிவேப்பிலை - அரை கப்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை :
வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுக்கவும்.
மிக்சியில் கறிவேப்பிலையை கொட்டி அரைக்கவும்.
அதன் பின்னர் அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்து, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த முத்திரை உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.
செய்முறை :
வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து 15-20 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.
பலன்கள் :
உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.
நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது.
வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும். சுவாசப் பாதையில் உள்ள ஒவ்வாமை சீர் பெற உதவும்.
உடலுக்குப் புத்துணர்வை அளித்து, மூளைச் செயல்பாட்டைச் சீராக்கி, சோர்வைப் போக்கும்.
வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து 15-20 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.
பலன்கள் :
உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.
நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது.
வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும். சுவாசப் பாதையில் உள்ள ஒவ்வாமை சீர் பெற உதவும்.
உடலுக்குப் புத்துணர்வை அளித்து, மூளைச் செயல்பாட்டைச் சீராக்கி, சோர்வைப் போக்கும்.
பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும்.
பட்டுப்புடவைகளில் தரம் குறைந்த ரகங்களும், போலி பட்டு ரகங்களும் இருக்கின்றன. அதனால் பட்டுப்புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது விழிப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சில்க் மார்க்’ முத்திரை பதிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் தரமானவை.
பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.
வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.
பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.
பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.
பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.
பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும் விதமும் பட்டு புடவைகளின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. மல்பரி புழுக்களில் இருந்து தயாரிக்கப்படும் பட்டுக்கள்தான் பிரபலமானவையாக இருக்கின்றன.
வட மாநிலங்களில் வன்யா ரக பட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இவை மல்பரி பட்டு நூல்களை விட விலை அதிகமானவை. பருத்தி நூல் போன்றே காட்சியளிக்கும்.
பட்டுப்புடவைகளை அதிக நாட்கள் மடித்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பட்டு நூல் இழைகள் சிதைந்துபோய் விடும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து மாற்றி மடித்து பாதுகாக்க வேண்டும்.
பட்டுப்புடவைகளில் அழுக்குகள், கறைகள் படிந்தால் முடிந்த அளவுக்கு தண்ணீர் கொண்டே சுத்தப்படுத்திவிட வேண்டும்.
பட்டுப்புடவைகளை குறிப்பிட்ட மாத இடைவெளியில் வெளியே எடுத்து காற்று படும்படி உலர்த்த வேண்டும்.






