search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idli Podi"

    • இட்லி, தோசைக்கு பல்வேறு பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம்.
    • இன்று கொள்ளுவில் இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்

    உளுந்தம் பருப்பு - கால் கப்

    கடலை பருப்பு - ஒரு கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 5

    பூண்டு - 10 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.

    அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.

    இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிரண்டையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளம்.
    • பிரண்டை பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

    தேவையான பொருட்கள்:

    பிரண்டை - 100 கிராம்,

    உளுந்து - 100 கிராம்,

    துவரம் பருப்பு - 50 கிராம்,

    பெருங்காயம் - 1/4 ஸ்பூன்,

    வெந்தயம் - 1 ஸ்பூன்,

    மிளகு - 1 ஸ்பூன்,

    வரமிளகாய் - 10,

    கறிவேப்பிலை - 1 கொத்து,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடி செய்வதற்கு பிரண்டையை பிஞ்சாக இருப்பது மிகவும் நல்லது.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டையை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பிரண்டை எண்ணெய்யில் மூழ்கி இருக்க வேண்டும். பிரண்டை சிவந்து உடையும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

    வறுபட்ட பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் உடனடியாக உண்டு.)

    அதே கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக போட்டு இட்லி பொடிக்கு வறுப்பது போல சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் கருக விடாதீர்கள். பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து முதலில் வறுத்த பிரண்டை யோடு மொத்தமாக வைத்துவிடுங்கள்.

    நன்றாக ஆறிய பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, இறுதியாக மிக்ஸி ஜாரில் புளி துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்தால் பிரண்டை பொடி தயார்.

    • இந்த இட்லி பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    இறால் கருவாடு - 250 கிராம்

    காய்ந்த மிளகாய் - 10

    சின்ன வெங்காயம் - 7

    பூண்டு - 8 பல்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 200 கிராம்

    புளி - எலுமிச்சை அளவு

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.

    இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    இட்லி, தோசைக்கு சுவையான ஆரோக்கியமான இட்லி பொடிகளை தயார் செய்யலாம். இன்று கறிவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - அரை கப்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    பூண்டு - 4 பல்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுக்கவும்.

    மிக்சியில் கறிவேப்பிலையை கொட்டி அரைக்கவும்.

    அதன் பின்னர் அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்து, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.

    இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×