search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Masala Podi"

    • இட்லி, தோசைக்கு பல்வேறு பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம்.
    • இன்று கொள்ளுவில் இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்

    உளுந்தம் பருப்பு - கால் கப்

    கடலை பருப்பு - ஒரு கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 5

    பூண்டு - 10 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.

    அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.

    இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளியோதரை மிக்ஸ் செய்வது மிகவும் சுலபம்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கல் நீக்கிய கருப்பு எள்- 50 கிராம்

    உளுந்தம்பருப்பு - 50 கிராம்

    கடலைப்பருப்பு - 50 கிராம்

    வேர்கடலை - 50 கிராம்

    மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்

    மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு

    கடுகு - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - 3 கீற்று

    நல்லெண்ணெய் - 3/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து பொடிசெய்து வைக்கவும்.

    வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு போட்டு தாளித்த பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிளறி விடவும்.

    அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.

    கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சாட் மசாலாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • இதை செய்ய அதிக செலவும் ஆகாது.

    தேவையான பொருட்கள் :

    சீரகம், தனியா, அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள் - பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப்,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - அரை கப்,

    கருப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன்,

    ஏலக்காய், லவங்கம் - தலா 5,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கல், தூசி இல்லாமல் பார்த்து வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் நன்றாக காய வைக்கவும்.

    நன்றாக காய்ந்ததும் அதை மிக்சியில் அல்லது கடையில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    இப்போது சூப்பரான சாட் மசாலா பொடி தயார்!

    இதனை சாட் வகைகள் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

    • இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • இதை 3 அல்லது 4 மாதங்கள் வைத்து உபயோகிக்கலாம்.

    இந்த பொடியை மரசெக்கு நல்லெண்ணெய் விட்டு சுடு சாதத்துடன் நன்றாக பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    புளி - 100 கிராம்

    வெல்லம் பொடித்தது - 1/4 கப்

    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வறுக்க

    கடலைப்பருப்பு - 1/2 கப்

    உளுந்தம் பருப்பு - 1/2 கப்

    கொத்தமல்லி விதை - 1/2 கப்

    மிளகு - 2 மேஜைக்கரண்டி

    கருப்பு எள் - 1 மேஜைக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    பூசணி விதை - 1 தேக்கரண்டி

    வெள்ளரி விதை - 1 தேக்கரண்டி

    மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி

    தாளிக்க

    வேர்கடலை - 1/2 கப்

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி

    வரமிளகாய் - 5

    கறிவேப்பிலை - 1/2 கப்

    செய்முறை

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக சிறிது சிறிதாக நல்லெண்ணெய் விட்டு மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

    அடுத்து 1 தேக்கரண்டி நல்லெண்ணய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதே வடசட்டியில் எண்ணெய் விடாமல் புளியை சிறிது நேரம் சிறுதீயில் வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது வடைச்சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்கடலை போட்டு நன்றாக 3 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து முறுகலாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும்.

    இப்பொழுது மிக்ஸியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும். 

    அதன் பின்னர் அதில் வறுத்து புளி, பெருங்காயம், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது அரைத்து வைத்துள்ள இந்த பொடியுடன் தாளித்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜில் பத்திரபடுத்தி வைத்து கொள்ளவும். 

    இப்போது சூப்பரான புளியோதரை பொடி ரெடி.

    • இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 
    • இந்த மசாலாவை கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வதே சிறந்தது.

    தேவையான பொருள்கள் :

    தனியா - கால் கப்

    ஏலக்காய் - 2 தேக்கரண்டி

    கருப்பு ஏலக்காய் - 3

    மிளகு - 2 தேக்கரண்டி

    கிராம்பு - 2 தேக்கரண்டி

    சோம்பு - ஒரு தேக்கரண்டி

    அன்னாசிப்பூ - 4

    ஒரு இன்ச் அளவில் பட்டை - 4

    ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி

    பிரியாணி இலை - 2

    சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)

    சீரகம் - 2 தேக்கரண்டி

    ஜாதிபத்திரி - ஒன்று

    பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி

    சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி

    செய்முறை:

    தேவையானவற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.

    ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு போக ஆற வைக்கவும். 

    ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.

    இப்போது மணமான கரம் மசாலா பொடி தயார்.

    காற்று போகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்துங்கள்.

    • பிரண்டையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளம்.
    • பிரண்டை பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

    தேவையான பொருட்கள்:

    பிரண்டை - 100 கிராம்,

    உளுந்து - 100 கிராம்,

    துவரம் பருப்பு - 50 கிராம்,

    பெருங்காயம் - 1/4 ஸ்பூன்,

    வெந்தயம் - 1 ஸ்பூன்,

    மிளகு - 1 ஸ்பூன்,

    வரமிளகாய் - 10,

    கறிவேப்பிலை - 1 கொத்து,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடி செய்வதற்கு பிரண்டையை பிஞ்சாக இருப்பது மிகவும் நல்லது.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டையை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பிரண்டை எண்ணெய்யில் மூழ்கி இருக்க வேண்டும். பிரண்டை சிவந்து உடையும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

    வறுபட்ட பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் உடனடியாக உண்டு.)

    அதே கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக போட்டு இட்லி பொடிக்கு வறுப்பது போல சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் கருக விடாதீர்கள். பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து முதலில் வறுத்த பிரண்டை யோடு மொத்தமாக வைத்துவிடுங்கள்.

    நன்றாக ஆறிய பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, இறுதியாக மிக்ஸி ஜாரில் புளி துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்தால் பிரண்டை பொடி தயார்.

    • இந்த இட்லி பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    இறால் கருவாடு - 250 கிராம்

    காய்ந்த மிளகாய் - 10

    சின்ன வெங்காயம் - 7

    பூண்டு - 8 பல்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 200 கிராம்

    புளி - எலுமிச்சை அளவு

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.

    இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    • சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம்.
    • ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும்.

    தேவையான பொருள்கள்

    தனியா - கால் கிலோ

    குண்டு மிளகாய் - 125 கிராம்

    துவரம்பருப்பு - 100 கிராம்

    கடலைப்பருப்பு - 50 கிராம்

    மிளகு - 25 கிராம்

    வெந்தயம் - 10 கிராம்

    விரளி மஞ்சள் - 25 கிராம்

    செய்முறை

    மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

    சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.

    அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி.

    • கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
    • உடலில் உள்ள கொட்ட கொழுப்பை கரைக்கும்.

    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - 2 கப்,

    காய்ந்த மிளகாய் - 10,

    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,

    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,

    கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    பெருங்காயம் - 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை

    கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.

    கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி

    இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து நெய்/எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.

    • சாம்பார் பொடியை கடையில் வாங்கி இருப்பீங்க.
    • கடையில் வாங்கும் பொடியை விட இது சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    மிளகாய் வத்தல் - 1/4 கிலோ

    கொத்தமல்லி - 300 கிராம்

    சீரகம் - 100 கிராம்

    துவரம் பருப்பு - 50கிராம்

    கடலைப் பருப்பு - 50 கிராம்

    மிளகு - 25 கிராம்

    வெந்தயம் - 25 கிராம்

    செய்முறை :

    முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

    கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

    வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

    இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

    காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

    • பருப்பு பொடியின் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
    • இன்று பருப்பு பொடி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - கால் கப்,

    பொட்டுக்கடலை - ஒரு கப்,

    பூண்டு - 2 பல்,

    சீரகம் - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - 8,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - கால் டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெறும் கடாயில் துவரம்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    அதேபோல, சீரகம், பொட்டுக்கடலை, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயை வறுத்து, மற்ற பொருட்களுடன் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்தால்… ஆந்திரா பருப்பு பொடி தயார்.

    இந்தப் பொடியை சாதத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட… அட்டகாசமான ருசியில் இருக்கும். அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் சேர்த்துச் சாப்பிடால், சுவை கூடும்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இன்று கொத்தமல்லி பொடி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி - 2 கட்டு
    பெருங்காயம் - 1 துண்டு
    கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 10
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    புளி - சிறிதளவு

    செய்முறை

    புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.

    எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.

    அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.

    சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி.

    இதனை சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

    ×