search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் பொடி செய்யலாம் வாங்க...
    X

    வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் பொடி செய்யலாம் வாங்க...

    • சாம்பார் பொடியை கடையில் வாங்கி இருப்பீங்க.
    • கடையில் வாங்கும் பொடியை விட இது சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    மிளகாய் வத்தல் - 1/4 கிலோ

    கொத்தமல்லி - 300 கிராம்

    சீரகம் - 100 கிராம்

    துவரம் பருப்பு - 50கிராம்

    கடலைப் பருப்பு - 50 கிராம்

    மிளகு - 25 கிராம்

    வெந்தயம் - 25 கிராம்

    செய்முறை :

    முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

    கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

    வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

    இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

    காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

    Next Story
    ×