என் மலர்
ஆசிரியர் தேர்வு
- பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
- ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி பெரியாரின் படத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம் தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறக்கப்பட்டுள்ளது.
* பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
* உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.

* பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைத்தேன்.
* பகுத்தறிவு பகலவன் பெரியாரின் திருவுருவப் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைத்தது என் வாழ்நாள் பெருமை.
* சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர் பெரியார்.
* ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.
* பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் பெரியார்.
* தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் சுயமரியாதை என்றார்.
- ஆப்கானிஸ்தானில் கடந்த 31-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்படும்.
- இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலை குறையும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது.
ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் உரையாற்றும்போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.
தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறைக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.
மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.
8 ஆண்டுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை
ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர் என தெரிவித்தார்.
- அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
- தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாம் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நானும் உங்களை போல் விவசாயி என்பதால் சோழவந்தான் விவசாய பகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இலவச மும்முனை மின்சாரம், வேளாண் பொருட்கள் உதவிகள் அதிமுக ஆட்சியில் வழங்கினோம்.
ஏழைகளுக்கு கொடுக்கும் வேட்டி சேலையில் கூட திமுக அரசு ஊழல் செய்கிறது.
அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் ஏழை மாணவர்களுக்கு உறுதியாக லேப்டாப் வழங்குவோம்.
அதிமுக ஆட்சி வந்தவுடன் வீடில்லா விவசாய தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2000 அம்மா கிளினிக்குகளுக்கு பதிலாக 4000 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும்.
திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு.
- கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது.
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
- 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
அதே போல் சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களுக்கு 40% வரி விதிக்கபட்டுள்ளது.
- 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது.
- 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது.
மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டது.
தனி நபர் காப்பீடு மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக 18% வரி விதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார்.
- அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று புதின் கூறினார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் இறவாமையை அடைய முடியுமா?
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது.
அவர்கள் பேசியதாவது,
ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று, உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள்.
புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும்.
ஜி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர்.
இருவருடன் நடந்து சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார்.
"நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஜி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்" என்று புதின் கூறினார்.
- பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
- இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தக்க சட்டம் (CAA) மற்றும் புதிதாக செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின்கீழ் குடியுரிமை விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 31, 2024 க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் பார்சிகள், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
முன்னதாக CAA-வில், இந்த வரம்பு டிசம்பர் 31, 2014 வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத ரீதியான தாக்குதல்கள் காரணமாக இந்தியாவிற்கு வந்து இதுவரை தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்த அகதிகளுக்கு இதன் மூலம் நேரடி பலன் கிடைக்கும்.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
- 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது.
மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டது.
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:
வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளது.
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வரி உயர்த்தப்பட்ட பொருட்கள்:
சிகரெட், பான்மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

- வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
- பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரிட்டனில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதில், வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. திருப்பூர், நாமக்கல்லில் முதலீடு செய்வதன் மூலம் 543 புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் மேலாண்மை, காப்பீடு, கப்பல் கண்காணிப்பு பகுப்பாய்வு ஆகிய வற்றுக்காக லாயிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






