என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
- உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.
பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?
அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.
சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆண்டு வெளியான படம் 'அமைதிப்படை'. இப்படத்தை இயக்கிய மணிவண்ணன் அதில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.
மேலும், சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சை கடந்து எதார்த்த அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்த காட்டின.
எந்த காலத்திற்கும் பொருந்தும் அமைதிப்படை கிளாசிக் அந்தஸ்து பெற்றது. அண்மைக் காலமாக கிளாசிக் படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வரும் நிலையில் அமைதிப்படை திரைப்படம் 4K தரத்தில் மேபடுத்தப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
- ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்துக் கொள்ள இருக்கிறது.
- வெனிசுலா எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள இருக்கிறது. இதனால் வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் உடன் இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது நாயைத் தேடி அலைகிறார் ஜி.வி.பிரகாஷ்
- படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி' திரைப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போன தனது நாயைத் தேடி அலைகின்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து அனஸ்வர ராஜன், மேக்னா சுமேஷ், இளங்கோ குமரவேல், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார். கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவதால், பாடல்கள் அனைத்தும் இம்மாதத்திலேயே ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்துள்ளது பாகிஸ்தான்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கடும் அபராதம் விதிக்கும் என எதிர்பார்ப்பு.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. போட்டியை புறக்கணிப்போம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முடிவு குறித்து ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-
அரசியல் அதன் கதவை மூடும்போது, கிரிக்கெட் கதவு திறக்கப்படும் என்று நான் எப்போதுமே நம்புவேன். இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்ததக்கது. ஆனால், என்னுடைய அரசின் முடிவின் பின்னால் நான் நிற்கிறேன்.
இது ஐசிசி-க்கு அறிக்கை மூலம் அல்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாரபட்சம் இல்லாமல், சுதந்திரமான நியாயமான முடிவுகள் எடுப்பதை நிரூபனம் செய்யக்கூடிய நிலை.
இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் விருது
- மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். அவரது "Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும் கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.
- மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம்.
- அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய்,
"தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்." என தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
"விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.
அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி அறிவித்தது.
- பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இருப்பினும், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நேர்மை, போட்டித் தன்மையை பாதிக்கும் என்றும், நீண்டகாலத்தில் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (PCB) இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை," என்று தெரிவித்துள்ளது.

மேலும், "2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது."
"ஐசிசி போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, இந்த போட்டிகளின் புனிதத்தையும் பாதிக்கிறது. தேசிய கொள்கை விவகாரங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதிக்கிறது. ஆனால், இந்த முடிவு உலக கிரிக்கெட்டுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சாதகமானதல்ல."

"இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது. 2026 டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசியின் முதன்மை இலக்கு. அதற்காக, PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர தீர்வை PCB ஆராய வேண்டும்," என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் 'A' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை இணைந்து (co-host) நடத்துகிறது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தான், பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவையும், பிப்ரவரி 18ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், இரண்டு புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும். மேலும், ஐசிசி விளையாட்டு விதிகளின்படி, அந்த போட்டி 'forfeit' ஆக அறிவிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டும் பாதிக்கப்படும்.
- நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
- உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதி.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (பிப். 2) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Center of Seismology -– NCS) தெரிவித்துள்ளது.
NCS வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அகலம் (Latitude) 9.03 டிகிரி வடக்காகவும், தீர்க்கரேகை (Longitude) 92.78 டிகிரி கிழக்காகவும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளமான X தளத்தில் NCS வெளியிட்டுள்ள பதிவில், "02.02.2026 அன்று காலை 03:31:12 மணிக்கு, நிக்கோபார் தீவுகள் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம் 10 கிலோமீட்டர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீவுகள், இந்தியாவின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின் படி 'சீஸ்மிக் மண்டலம் – V' ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே மிக அதிக நிலநடுக்கச் செயல்பாடுகள் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
- நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன்.
- என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன்.
'சித்திரம் பேசுதடி', 'வெயில்', 'அசல்' போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையான பாவனா, சில வருடங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழில் அவர் கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாவனாவின் 90-வது படமாக தயாராகியுள்ள 'அனோமி: தி ஈக்வெஷன் ஆப் டெத்' என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தடயவியல் நிபுணராக அவர் நடித்துள்ளார். ரகுமான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் திரிஷ்யா ரகுநாத் நடித்துள்ளனர். ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார்.
இதுகுறித்து பாவனா கூறும்போது, ''நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன். அந்தவகையில் பான் இந்தியா மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடித்துள்ளேன். தொடர்ந்து என் பயணம் நீளும்.
என்னை பொறுத்தவரை நான் வலிமையாக இருக்கிறேன். வலிமையான கதைகளை தேர்வு செய்கிறேன். என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன். சினிமாவில் என் பயணம் இன்னும் தூரமானது. அதை நோக்கி செல்கிறேன்'' என்றார்.
- 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது.
- தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்.
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது.
- போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்போம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தெஹ்ரான்:
ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரானில் உள்ள பிரபல துறைமுகமான பந்தர் அபாசில் ஈரான் நாட்டிற்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. திடீரென அந்தத் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.






