search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காலபைரவருக்கு சிறப்பு பூஜை
    X
    காலபைரவருக்கு சிறப்பு பூஜை

    மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து கால பைரவருக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருநீறு உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் துரைசாமி, உதவி அர்ச்சகர்கள் மனோஜ் குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்து இருந்தனர்.
    Next Story
    ×