என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூத்துக்குடியில் கலச விளக்கு வேள்வி பூஜை
Byமாலை மலர்18 Aug 2021 6:51 AM GMT (Updated: 18 Aug 2021 6:51 AM GMT)
தூத்துக்குடியில் கொரோனா தொற்று நீங்க வேண்டி, ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேள்வி பூஜையை மாவட்ட இளைஞர் அணி செல்லத்துரை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து நடைபெற்ற கிராம நல வழிபாட்டை வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். பிரசாரக்குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சக்தி கொடியை பத்மா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் கண்ணன், திரு.வி.க சக்திபீட மகளிர் அணி பிரமிளா, வேள்விக்குழு வட்ட பொறுப்பாளர் கிருஷ்ணவேணி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேள்வி பூஜையை மாவட்ட இளைஞர் அணி செல்லத்துரை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து நடைபெற்ற கிராம நல வழிபாட்டை வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். பிரசாரக்குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சக்தி கொடியை பத்மா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் கண்ணன், திரு.வி.க சக்திபீட மகளிர் அணி பிரமிளா, வேள்விக்குழு வட்ட பொறுப்பாளர் கிருஷ்ணவேணி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X