search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பட்டிவீரன்பட்டியில் ஆனி திருமஞ்சன விழா
    X
    பட்டிவீரன்பட்டியில் ஆனி திருமஞ்சன விழா

    பட்டிவீரன்பட்டியில் ஆனி திருமஞ்சன விழா

    பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமிஅம்மன் உடனுறை ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
    பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமிஅம்மன் உடனுறை ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. விழாவையொட்டி உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் அழிய வேண்டியும் சிறப்பு யாகவேள்வி பூஜை நடந்தது.

    பின்னர் மாணிக்கவாசகரின் 51 பதியங்களும் பாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆனந்த நடராஜருக்கு மஞ்சள், திருநீரு, பஞ்சாமிர்தம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×