என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்19 March 2021 8:19 AM GMT (Updated: 19 March 2021 8:19 AM GMT)
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 60-வது ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி, 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 60-வது ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு வாகனத்தில் சாமி புறப்பாடு போன்றவை நடைபெற உள்ளது. 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம், 27-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரம், 28-ந் தேதி காலை கோமாதா பூஜை, சிறப்பு ஹோமம், சுவர்ண முருகன் அலங்காரம், தங்க கவசம் சாத்துப்படி, காவடிகள் புறப்பாடு, அருள்வாக்கு கூறுதல் போன்றவை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருப்புகழ் சபையின் பஜனை நிகழ்ச்சி, மதியம் 1 மணிக்கு காவடிகள் கோவிலை வந்தடைதல், மகாதீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, 5 மணிக்கு பால்குட ஊர்வலம், 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29-ந் தேதி சத்தாபரணமும், 30-ந் தேதி விடையாற்றி உற்சவமும், திருஊஞ்சல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.
மாலை 4 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, 5 மணிக்கு பால்குட ஊர்வலம், 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29-ந் தேதி சத்தாபரணமும், 30-ந் தேதி விடையாற்றி உற்சவமும், திருஊஞ்சல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X