என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
Byமாலை மலர்21 Dec 2020 8:46 AM GMT (Updated: 21 Dec 2020 8:46 AM GMT)
நாமக்கல் அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வழக்கமாக இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பேர் வீதம் 18 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் படிவாசல் மற்றும் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு அரங்கநாதரை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பேர் வீதம் 18 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் படிவாசல் மற்றும் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு அரங்கநாதரை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X